Followers

Saturday, December 22, 2012

குலதெய்வ அருள்



வணக்கம் நண்பர்களே!
                            குலதெய்வத்தை பற்றி பல பழைய பதிவுகளில் பார்த்திருந்தாலும் இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம்.

உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களின் குலதெய்வத்திற்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள். உங்களின் ஜாதகத்தில் மோசமான கிரக நிலைகள் இருந்தால் உங்களின் வளர்ச்சி முடங்கிவிடும். இந்த மாதிரி கிரகநிலைகள் அமையும் போதும் உங்களின் குலதெய்வ அருள் உங்களின் குடும்பத்திற்க்கு இருந்தால் அனைத்து பிரச்சினைகளில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளமுடியும். 

குலதெய்வ அருள் இல்லை என்றால் உங்களின் குடும்பத்தில் நிம்மதி என்பது சிறிதும் இருக்காது. உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைவார்கள். குழந்தைகள் வளர்ச்சி இருக்காது. குடும்பத்தில் எந்த நேரமும் பிரச்சினை தான் இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்குள்ளும் ஒற்றுமை என்பது இருக்காது. மனச்சிதைவு ஏற்படும். சரியான வயதில் திருமணம் நடைபெறாது. திருமணம் நடைபெற்றால் குழந்தை பாக்கியம் இருக்காது. விபத்துக்கள் ஏற்படுவது. இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.

என்னிடம் வரும் நபர்களுக்கு நான் சோதிடம் பார்க்கும் போது குலதெய்வ அருள் இல்லையென்றால் உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லுவேன் அப்பொழுது அவர்கள் இல்லையே நாங்கள் அடிக்கடி அங்கு சென்று வழிபாட்டில் கலந்துக்கொள்ளுவோம் என்பார்கள். 

நீங்கள் வழிபாட்டில் கலந்துக்கொள்ளலாம் ஆனால் உங்களின் குலதெய்வம் உங்களின் பக்கம் நிற்காது ஏன் உங்களின் பக்கம் நிற்கவில்லை என்று சொல்லுவதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களுக்கு மட்டும் சொந்தமாக இருக்காது உங்களின் பங்காளிகளுக்கும் சொந்தமாக இருக்கும். 

உங்களின் பங்காளிகளின் ஒருவருக்கு மட்டும் அந்த குலதெய்வம் சாதகமாக செய்யும். அப்படி இருக்கும் குலதெய்வத்தை உங்களின் பக்கம் வருவதற்க்கு நீங்கள் ஒரு பூஜை செய்து கொண்டு வரவேண்டும். அந்த குலதெய்வத்தை கொண்டுவந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு அனைத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

இந்த மாதிரி பூஜை செய்து எடுத்துவருவது என்பது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதனை நீங்களும் செய்து உங்களின் குலதெய்வத்தின் அருளை பெறச்செய்ய முடியும். 

உங்களின் குலதெய்வத்தை உங்களின் பக்கம் கொண்டுவருவதற்க்கு என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு செய்கிறேன். தொடர்புக்கொள்ளலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: