Followers

Thursday, December 27, 2012

அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே!

நமது ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு அதில் உள்ள மந்திர அனுபவங்களை பெற பல நண்பர்கள் தொடர்ந்து என்னை தொடர்புக்கொண்டு வருகிறார்கள் இப்பொழுது அவர்கள் அனுப்பிய ஜாதகத்தை பார்த்துக்கொண்டு வருகிறேன். 

என்னிடம் மந்திரஅனுபவங்களை பெறுபவர்களுக்கு தனியான பதிவு தளம் உருவாக்கப்பட்டு வருகிறது அதில் நான் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே படிக்கமுடியும். அதிகபட்சமாக மந்திரஅனுபவங்கள் பெறுபவர்களுக்கு முதல் படியாக அந்த தளம் அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

புதிய தளத்தின் பெயர் ஆன்மீக அனுபவங்கள் என்று இருக்கும். அதை படிப்பவர்களுக்கு வேறு ஆன்மீக பயிற்சி என்பதே தேவையில்லை அந்தளவுக்கு உங்களின் மனதிற்க்கு தாலாட்டு போல் அமையும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. நீங்கள் நினைக்கலாம் என்ன வேறு பதிவு எழுதுகிறார் இதில் எழுதமாட்டாரோ என்று நினைக்கலாம் வழக்கம்போல் ஆன்மீக அனுபவங்கள் இதில் வந்துக்கொண்டே இருக்கும். ஆன்மீகத்தின் அடுத்தநிலை புதிய பதிவு தளத்தில் இருக்கும்.

30-12-2012 ஞாயிறு அன்று மந்திர அனுபவங்களுக்கு ஜாதகத்தை அனுப்பியவர்களை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். குருநாதர் சென்னையில் தற்பொழுது இல்லை என்பதால் அவரை சந்திக்கமுடியாது. என்னை மட்டும் சந்திக்கலாம். உங்களை பார்த்தபிறகு தான் என்னால் முடிவு செய்யமுடியும் அதனால் பார்த்தால் உடனே கொடுத்துவிடுவார் என்று நினைக்கவேண்டாம். சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்னை தொடர்புக்கொண்டுவிட்டு வாருங்கள்.  வெளியூரில் இருப்பவர்கள் வரவேண்டாம் உங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்கிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: