Followers

Sunday, December 2, 2012

ராகு-கேது பெயர்ச்சி: மகரம்



வணக்கம் நண்பர்களே !

                                      இப்பதிவில் மகரத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்து வந்த ராகு பகவான் தற்பொழுது பத்தாவது வீட்டில் வந்து அமருகிறார். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் இதுவரை வேலை இல்லாமல் இருந்து வந்தாலும் இனிமேல் நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகும்.  ஒரு சொத்தை விற்றுவிட்டு வேறு இடத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். தொழில்கள் தொடங்கும் போது முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

புதிய தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். புதிய தொடர்புகள் உருவாகும். தொழிலில் கொஞ்சம் அலைச்சலுக்கு பிறகு தான் வெற்றி கிட்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். அடுத்தவர்க்கு பத்திரத்தில் கையொப்பம் போடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கேதுவின் பலன்கள்

உங்களுக்கு ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து வந்த கேது பகவான் தற்பொழுது நான்காம் வீட்டிற்க்கு வருகிறார். உங்களின் தாயாரின் நலனில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். வாகனங்கள் விபத்தை சந்தி்க்க வாய்ப்பு இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களின் உடல் நிலையிலும் எச்சரிக்கை தேவை .

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: