Followers

Wednesday, October 31, 2012

ஆன்மீக அனுபவங்கள் 13



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் நாம் பார்க்க போவது அசைவ மேட்டர்.  ஏன் என்றால் இன்று பலபேர் தன்னுடைய ஆன்மீக வியாபாரத்திற்க்கு பயன்படுத்தும் சொல் நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் அசைவம் சாப்பிடகூடாது என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அசைவம் சாப்பிட்டால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா என்பதை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அசைவம் சாப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். நீங்கள் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேற்றம் அடையலாம் என்று பல பேர் பிரசாரம் செய்கிறார்கள். சில பேர் சித்தர்களை சந்திப்பதற்க்கும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

உண்மையில் அசைவம் என்பது உயிர்களை கொல்லுவது கூடாது என்று அர்த்தத்தில் இதை நான் எடுத்துக்கொண்டேன். உயிர்களை கொல்லுவதில் சின்ன உயிர் பெரிய உயிர் என்று இருக்கிறாதா என்று எனக்கு தெரியவில்லை. சைவமாக இருந்தாலும் அது உயிர் தான். ஒரு மரத்திற்க்கும் உயிர் இருக்கிறது. சைவம் என்று சொன்னால் அந்த மரத்தை அல்லது காய்கறிகளை சாப்பிட பயன்படுத்துவதும் தவறு தான்.

நாம் சாப்பிடும் கத்தரிகாய், மாம்பழம் போன்றவற்றில் உள்ளே பூச்சி இருக்கிறது அதுவும் உயிர் தான் என்ன பெரிதாக இருந்தால் அதை எடுத்துவிடுகிறோம் அது கண்ணுக்கு தெரியாத சின்ன சைசில் இருந்தால் அதை விட்டுவிடுகிறோம் உண்மையில் அதுவும் உயிர் தான்.

அசைவம் சாப்பிட்டால் உங்களால் செல்வ நிலையில் உயரமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். நீங்களே பாருங்கள் எத்தனையோ பணக்காரர்கள் ஒரு இனத்தில் இருந்து இன்று உலகமாக பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையான மக்கள் சாப்பிடுவது அசைவம் தான் சாப்பிடுகிறார்கள். அசைவம் சாப்பிடுவதால் செல்வநிலை சரியும் என்று சொன்னால் அவர்களால் எப்படி பணக்காரர்களாக இருக்கமுடிகிறது. உண்மை அது இல்லை என்று தான் தோன்றுகிறது.

சித்தரை தரிசிக்க அசைவம் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களை வணக்கினால் தரிசனம் தருவேன் என்று எந்த கல்வெட்டில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அதை படித்து பார்க்கலாம். சித்தர்கள் காலத்தில் இருந்த மக்கள் சிவனை மற்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கிய போது அவர்கள் தெளிவாக பஞ்சபூதங்களை வணங்கினார்கள். இவர்கள் இப்பொழுது தரிசனம் தருவது என்பது எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்.

அசைவம் சாப்பிடுவது என்பது அந்த உயிர்கள் மேல் பரிதாபபட்டு அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. வெறும் ஒன்றும் இல்லாத காரணங்களுக்காக அசைவம் சாப்பிடுவதை விடுங்கள் என்று சொல்லுவது தவறான வழியாக தான் இருக்கும்.

எப்பொழுது ஒரு மனிதனுக்கு கட்டுபாடு அதிகமாக விதிக்கிறார்களோ அப்பொழுது அந்த மனிதன் அதை நாடமாட்டான். அந்த கட்டுபாடு இறைவனை வணங்குவதிலும் செலுத்தினால் இதனை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.

தெய்வபிறவி ராமனுக்கே குகன் மீனும் தேனும் தான் கொடுத்து உபசரித்தான்  அதை எதையும் பொருட்படுத்தாமல் அதை அப்படியே எம்பெருமான் வாங்கியவர் ஸ்ரீராமன். 

கண்ணப்ப நாயனார் கதைப்பற்றி நீங்களே படித்து இருக்கலாம் அவர் சிவனுக்கு என்ன கொடுத்தார் பால் பழமா கொடுத்தார் அவர் கொடுத்தது பன்றியின் இறைச்சியை தானே கொடுத்தார். எத்தனையோ பேர் சிவனைப் பற்றி பாடி இருப்பார்கள் அவன் அவன் காட்டு கத்து  கத்தி பாடலை பாடிக்கிட்டு இருந்த நேரத்தில் கண்ணப்பரால் எப்படி எளிதாக சிவனை அடைய முடிந்தது.

இந்த கண்ணப்ப நாயனாரை பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். கண்ணப்ப நாயனார் ஒரு காலமும் இறைவனை அடைந்துவிட வேண்டும் என்று நினைக்கவேயில்லை அது நடந்தது எதிர்பாராதமுகமாக நடந்ததே என்று தான் சொல்ல வேண்டும். நம்மிடமே சில அறிவு ஜீவிகள் கேட்டு இருக்கலாம் எப்படி ஒருவன் அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இறைவனை அடையமுடியும் என்று கேட்பார்கள்.

கண்ணப்பர் காட்டு வழியில் போகிறார் அவர் எதைச்சயாக அந்த லிங்கத்தை பார்க்கிறார் அவ்வளவு தான் அதனனுடன் ஒன்றிவிடுகிறார். அந்த லிங்கத்தை பார்த்தவுடன் தனியாக இவர் இங்கு இருக்கிறார் வெறும் பூ மட்டும் போட்டு இருக்கிறார்கள் இவரின் பசிக்கு யாரும் உணவை வைக்கவில்லை என்று தான் கேட்கிறார். 

அவருக்கு எப்படி படைக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை உடனே அவர் செய்தது நான் சாப்பிட்ட கறியிலேயே எது சுவையாக இருக்கிறதோ அதை படைக்க வேண்டும் என்று நினைக்கிறார் அதற்கு அவர் அந்த சிவனை விட்டு சென்ற பிறகு தேடி தான் உணவை தரவேண்டும். அப்படி நினைக்கும் போதே இவரை தனியாக எப்படி இங்கு விட்டு செல்லுவது என்றும் நினைக்கிறார்.

நாம எந்த மாதிரி மனநிலையில் இருந்தால் ஒருவரை தனியாக விட்டு செல்ல கூடாது என்ற மனநிலை வரும். அது குழந்தையாக இருந்தால் மட்டுமே இந்த மனநிலை வரும். எப்படி குழந்தையை விட்டு தனியாக செல்லுவது என்று நினைப்போம். அந்த லிங்கத்தை அவர் குழந்தையாக எண்ணி இருக்கிறார். உண்மையில் எவனுக்கு இந்த மனநிலை வரும்.

கடைசியில் வழி தெரியாமல் ஆகா குழந்தைக்கு பசிக்குதே என்று எண்ணி வேட்டியாடி உணவை படைக்கிறார். எப்படி பட்ட பக்தி என்று நீங்களே புரிந்து கொண்டு இருப்பீர்கள். இப்படி பட்ட ஒரு பக்தி எவனுக்கு இருக்கோ அவன் யாரிடமும் உபதேசம் கேட்கமாட்டான் உபதேசம் செய்யமாட்டான். 

இந்த பக்தி என்னிடம் இருந்தால் நான் பிளாக் எழுதிக்கொண்டு இருக்க மாட்டேன். உங்களிடம் இருந்தால் பிளாக்கை படித்துக்கொண்டு இருக்கமாட்டீர்கள். என்னால் அந்த பக்தியை இறைவனிடம் காட்டமுடியவில்லை. அது ஏன் என்று என் மனநிலையில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.இந்த பக்தி இருந்தால் எந்த ஆசிரமத்திலும் போய் நிற்கமாட்டீர்கள் எந்த குரு கிடைப்பான் என்று தேடமாட்டீர்கள்.

அசைவம் ஆன்மீகத்திற்க்கு எதிரி கிடையாது. இந்த ஆன்மீக உலகத்தில் கண்ணப்பர் போல் ஒருவன் இதுவரை வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆறே நாட்களில் சிவனை அடைந்தவன் கண்ணப்ப நாயனாரை தவிர வேறு எவறும் இல்லை. கடைசி நேரத்தில் சிவனின் கண்ணிற்க்கு பிரச்சினை என்று வந்ததும் தன் கண்ணை கொடுத்தவன் அடுத்த கண்ணிற்க்கும் பிரச்சினை என்று  வந்தவுடன் தனது அடுத்த கண்ணையும் கொடுக்க உடனே தன் அன்பை எடுத்தவன் எப்படிபட்டவன். அந்த நேரத்தில் அவன் ஒரு கணம் தாமதித்தாலும் இன்று அவன் பெயரை எழுதிக்கொண்டு இருக்க மாட்டோம். உடனே செய்தான் பாருங்கள் ஆனால் நாம் கடவுளுக்கு தன் மயிரை கூட கொடுக்க எப்படி தயங்குகிறோம்.

நாம் இப்பொழுது எப்படி இருக்கிறோம் தன் மயிரை கூட கொடுக்க தயங்குகிறோம். நாம் எப்படி அந்த சிவனை அடைவது. சிவன் என்றால் அன்பு அந்த அன்புக்கு நாம் அன்பு செலுத்த முடியவில்லை. நாம் அன்பு குறைவாக உள்ளவர்களாக இருக்கிறோம்.

கண்ணப்பர் போல் இருந்தால் தான் அவன் கடவுள். இன்றைக்கு எப்படி இருக்கிறது ஒரு பிரச்சினைக்கு சாமியார் எத்தனை பேட்டி கொடுக்கிறார் என்று பாருங்கள். எங்கோ துப்பாக்கி சுடு நடந்ததற்கு ஒரு சாமியார் எப்படி பயந்தார் எப்படி உளரி பேசினார் என்று உங்களுக்கு தெரியும் உண்மையில் அந்த கடவுளை அடைந்தவனுக்கு இந்த உலகத்திற்க்கு பதில் தரவேண்டும் என்ற அவசியம் ஒரு போதும் இருக்காது. அவன் போக்கிற்க்கு போய் கொண்டு இருப்பான் எது நடந்தாலும் அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் கடவுளா? ஒரு பிரச்சினைக்கே 1008 பேட்டி கொடுப்பவன் கடவுளா?.  அவன் உங்களுக்கு எதனை கற்று தரமுடியும் என்று கொஞ்சம் யோசித்தால் புரியும்.

அசைவம் ஆன்மீகத்திற்க்கு எதிரியா அல்லது நண்பனா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, October 30, 2012

சோதிட அனுபவம்



வணக்கம் நண்பர்களே மேலை இருக்கும் ஜாதகத்திற்க்கு பலன்களை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்.


Monday, October 29, 2012

கேள்வி & பதில்கள்



நல்ல அருமையான தகவல். சில பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினால் போதும். அதற்க்கு மேல் தூங்குவது சோம்பேறித்தனம். வாழ் நாளில் ஒரு பகுதியை தூங்கி வீணாக்குகிறோம் என்று பிரச்சாராம் செய்கின்றனர். சாதித்தவர்கள் எல்லாம் 3 or 4 மணி நேரம் தூங்கியவர்கள் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். அதை பற்றி நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?-
தாமோதரன்

வணக்கம் நண்பரே தாங்கள் கூறுவது சரி தான் கடுமையான உழைப்பால் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன என்று சொல்லுகிறீர்கள். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். யாராவது ஒன்று இரண்டு படைப்புகள் அப்படி கடவுள் படைத்து இருக்கலாம். இப்பதிவுகளின் நோக்கம் ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் தான். என்னை போல இருப்பனுக்கு தான் எழுதுகிறேன். நான் இதை எழுதும் போது சொல்லியுள்ளேன் கீழ்மட்ட நிலையில் இருப்பன் ஒருவன் இதை படித்து வந்தால் அவனுக்கு இந்த பதிவு அவனின் மனதிற்க்குள் உள்வாங்கி அதைக்கொண்டு நடந்தால் அதுவே வெற்றி. தினமும் வேலை செய்கிறவன் எதை கண்டுபிடிக்க போகிறான். அவனுக்கு இது உகந்ததாக இருக்கும்.வேலையை விட்டு வந்தால் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான். அவனுக்கு இது நன்றாக இருக்கும். 

இந்த பூமியில் இருக்கும் உயிர் உள்ளவைகளில் மனிதன் மட்டுமே தன்னுடைய கழிவுகளை விட்டு செல்லுகிறான். அவன் எதையாவது கண்டுபிடித்து விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்கிறான் என்று நினைக்கிறேன். வேறு எந்த உயிர் இனமும் தான் இந்த பூமியில் வாழ்ந்தேன் என்ற தடைங்களை வைத்துவிட்டு செல்லுவதில்லை.

தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டு எடுக்கும் ஒரு நிலை. தூக்கத்தை எத்தனை மணி நேரம் தூங்கினால் நல்லது என்று சரியான ஆய்வு இல்லை. என்னை பொறுத்தவரை விடிந்து காலையில் எழும் போது நீங்கள் புத்துணர்வோடு இருந்தால் அதுவே போதும்.


வணக்கம், 

வெளியூர் சென்றுவிட்டதால் பதிவுகளை இன்று தான் படித்தேன்...தாங்கள் இப்பதிவில் கூறியபடி நடந்தால் மிகவும் மகிழ்வேன்...ஏனெனில் எனக்கு பாக்கியாதிபதி 7ல் அமர்ந்திருக்கிறார்...

இன்றைய பதிவை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்...பொதுவாக ஜோதிடத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பார்கள் நல்ல குருவாகவும் அமைவார்கள் என்பது புது தகவல்...உண்மையில்,இத்தருனத்தை என்னால் நம்பவே முடியவில்லை...மிக்க நன்றி...

R.Srishobana 

வணக்கம் உங்களின் எதிர்பார்ப்புகள் போல் துணைவர் அமைய வாழ்த்துக்கள். அதைபோல் அந்த பாக்கியாதிபதி யார் என்று பார்த்து அதற்கு தகுந்த பரிகாரத்தையும செய்துவிடுங்கள் ஏன் என்றால் பெண்களை பொறுத்தவரை ஏழாவது வீட்டில் எந்த கிரகமும் அமையகூடாது. சுபகிரகமாக இருந்தாலும் அமையக்கூடாது. பாக்கியாதிபதி தானே என்று சும்மாக இருந்துவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 12



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் பார்க்கபோவது தூக்கத்தைப் பற்றிதான் என்னடா ஆன்மீகத்தில் தூக்கத்தை எல்லாம் சொல்கிறானே என்று நினைக்க தோன்றும் இப்பதிவை படித்து முடித்த பிறகு மனிதனுக்கு அவசியம் எது என்று தோன்றும்.

அவசர உலகத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். உலகம் எப்பொழுதும் போல் போய் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் தான் அவசரமாக மாறிவிட்டார்கள்.  இந்த அவசர உலகத்தில் ஏதோ ஒன்றுக்காக மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு நிம்மதி என்பதே அவன் தூங்கின்ற நேரத்தில் தான் இருக்கிறது ஆனால் அந்த மனிதன் இன்று நிம்மதியாக தூங்கிறான என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் பொழுது விடிந்ததில் இருந்து இரவு வரை ஒருவன் உழைத்துக்கொண்டே இருக்கிறான் அவன் வீட்டிற்க்கு போனாலும் அங்கும் அவனுக்கு பிரச்சினை தான் முன்னாடி நிற்கிறது. இன்று பல பேருக்கு குடும்பமே பிரச்சினை ஆகிவிட்டது. இந்த நிலையில் அவன் எப்படி நிம்மதியாக தூங்குவது. 

ஒருவன் நன்றாக தூங்கினால் தான் அவன் வாழ்நாட்கள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். ஒருவன் இரவில் நன்றாக தூங்கினால் மறுநாள் புத்துணர்வோடு வேலையில் ஈடுபட முடியும். இவ்வாறு ஒவ்வொரு இரவிலும் மனிதன் நன்றாக தூங்கவேண்டும்.

இன்றைக்கு மனிதனுக்கு நல்ல வசதி வாய்ப்பு இருக்கிறது ஆனால் அவனால் நன்றாக தூங்கமுடியவில்லை. A/c அறையில் படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வரமாட்டேன்கிறது.

ஏதாவது ஒரு கவலை அவன் மனதிற்க்குள் வந்து அவனை பாடாய்படுத்துகிறது. இதற்காக தான் மனிதர்களில் பலபேர் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். குடித்த பிறகு தூக்கம் வருகிறது என்று எண்ணி குடியை ஆரம்பிக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு எமனாக மாறுகிறது.

உண்மையில் நன்றாக தூங்கும் போது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதி என்பது வரும் அப்படி தூங்காமல் இருந்தால் அவனுக்கு நிம்மதி என்பது ஒரு காலமும் வராது. நீங்கள் நன்றாக தூங்கினால் உங்களுக்கு உடல்நிலையில் கோளாறு ஒருபோதும் வராது நோயற்ற வாழ்வு நீங்கள் வாழலாம்.

சோதிடத்தில் நமக்கு தூக்கத்தை காட்டும் இடம் பனிரெண்டாவது வீடு அந்த வீடு பாதிக்கப்பட்டால் நமக்கு தூக்கம் என்பது பிரச்சினை தான். மனதிற்க்கு காரகன் சந்திரனும் ஒருவனுக்கு நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியான தூக்கம் வரும். 

நன்றாக தூங்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும். நீங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு சக்தி உபாசாகாரக மாறவேண்டும். அப்பொழுது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

நான் அந்த சக்தியை உபாசனை செய்த பிறகு எனக்கு நிம்மதியான தூக்கம் வருகிறது. நன்றாக தூங்குவேன். என்னுடன் அறையில் இருப்பவரும் என்னால் நன்றாக தூங்குகிறார். இதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் நன்றாக தூங்க வையுங்கள். நீங்களும் நிம்மதி அடைந்து உங்களிடம் இருப்பவரையும் நிம்மதி அடைய செய்யுங்கள் வாழும் போதே கடவுளின் அனுகிரகத்தில் வாழ வேண்டும் அது தான் உயர்ந்த வாழ்வு.

குழந்தைகள் பிறந்த நேரத்தில் பார்த்தால் அது நன்றாக தூங்கும். அது விழித்து பார்க்கும் போது அது அவ்வளவு உற்சாகமாக மாறிவிடும். அது விழித்து இருக்கும் நேரம் எல்லாம் அது அன்பை உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும். கடவுளும் குழந்தையும் ஒன்று தான் என்பது அப்பொழுது மட்டுமே புரியும். அதைபோல் மனிதனின் இறுதி நாட்களில் மனிதன் நன்றாக தூங்குவான். ஏன் அவ்வாறு தூங்கிறான் கடவுள்கிட்ட போகபோகிறான் என்று அர்த்தம். கடவுளின் தன்மையில் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அனைத்து மதங்களும் இறந்த பிறகு சொர்க்கம் நரகம் என்று உங்களை பயமுறுத்துகிறது. நீங்கள் வாழுகின்ற வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுங்கள். நன்றாக இரவில் தூங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள் அதுவே போதும் என்று நினைக்க தோன்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Sunday, October 28, 2012

ஆன்மீக அனுபவங்கள் 11



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் உங்களின் துணைவரை உங்களின் குருவாக ஏற்றுக்கொண்டு அதன் படி உங்களின் ஆன்மீக வாழ்க்கையை வாழுங்கள் என்று சொல்லிருந்தேன் இதற்கு எந்த விதத்திலும் எனக்கு எதிர்ப்பு வரவில்லை. நண்பர் சிவக்குமார் கிட்டதட்ட அந்த இடத்திற்க்கு வந்தார். அவரை பாராட்டலாம். 

உண்மையில் ஆன்மீக குருவாக துணைவரை எடுக்கமுடியுமா என்றால் சந்தேகமே ஏன் என்றால் ஒரு பெண்ணின் கணவர் என்ன தவறு செய்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவர நல்லவர் என்று தான் சொல்லுவார். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி கணவரை குருவாக ஏற்றுக்கொள்ள முடியும். 

நமக்கு வரும் குரு என்பவரை காட்டும் இடம் சோதிடத்தில் ஒன்பதாவது வீடு. ஒன்பதாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால் மட்டுமே அவரின் கணவர் அந்த பெண்ணிற்க்கு குருவாக வருவார் அல்லது கணவர் மூலம் குரு அமைவார் மற்றப்படி வேறு யாருக்கும் குருவாக அவரின் கணவர் வரமுடியாது.

உயர்நிலையில் செல்பவர்களுக்கு ஆன்மீகத்தில் குரு கண்டிப்பாக வேண்டும் ஆனால் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவசியமான ஒன்று கிடையாது.

ஒரு பெண் என்பவள் சக்தியின் வடிவம் தான் இந்த கருத்து அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை.

ஒரு பெண் நினைத்தால் ஒரு சக்தியை எந்த வித குருவும் இல்லாமல் எடுக்கமுடியும். அதற்கு அந்த பெண் அந்த அளவுக்கு உழைக்க வேண்டும். பொதுவாக அனைவரும் ஆன்மீக தேடுதல் உள்ளவர்கள் தான் ஆனால் நமது தேடுதலில் ஈடுபடும் போது ஒரு சில தவறு செய்கிறோம். அந்த தவறை நீங்கள் அறிந்தால் அனைவரும் எளிதில் அந்த சக்தியை எடுக்கலாம். 

மனிதரிகளில் உள்ள குணத்தில் தீங்கான ஒரு குணம் இருக்கிறது. ஈகோ. இந்த ஈகோவைவிட்டால் எளிதில் அந்த சக்தி உங்களிடம் வந்துவிடும். நான் இவருக்கு பிறந்து இருக்கிறேன் எங்கள் அப்பா பெரிய ஆள். என் குடும்பம் சமுதாயத்தில் உயர்நத குடும்பம். நான் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்கிறேன். நான் படித்த படிப்பு அவ்வளவு பெரியது. எனக்கு சொத்து பல கோடி உள்ளது எனது அந்தஸ்து இப்படி ஏகாபட்ட ஈகோவுடன் கோவிலுக்கு போனாலும் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சென்றாலும் இந்த நினைப்பு இருப்பதால் உங்களால் ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை. இந்த நினைப்பை கொஞ்ச கொஞ்சமாக விடும் பட்சத்தில் கடவுள் உங்களை நாடிவருவார்.

உடல் உழைப்பில் அனைத்தும் உள்ளது. அந்த காலத்தில் ஏன் மலை உச்சியில் கோவிலை கட்டி வைத்தான். பல மலைகளை கடந்து சென்று தரிசனம் செய்யுங்கள் என்று எதற்கு கோவிலை காட்டிற்க்குள் வைத்தான் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். 

நீங்கள் மலை ஏறும் போது உங்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளும் செலவாகும். உங்களின் உடம்பை கஷ்டபடுத்திக்கொண்டு ஏறும்போது உங்களிடம் இருக்கும் அனைத்து தீயகுணங்களும் எரிந்துவிடும் கடைசியில் இறைவனை காணும் போது உங்களால் சரணடைய மட்டுமே முடியும். வேற எந்த எண்ணங்களும் உங்களுக்கு தோன்றாது.

நல்ல வழியை சொல்லிவிட்டேன் உங்களின் கையில் தான் உள்ளது. நீங்கள் இதனை செய்து உங்களின் உழைப்பால் உங்கள் குடும்பத்தையும் உங்களின் உறவினர்களின் குடும்பத்தையும் மற்றும் உங்களின் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வழிமுறைகளை என்னை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Saturday, October 27, 2012

அன்னாபிஷேகம்



வணக்கம் நண்பர்களே ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். 

நீராடலில் மகிழ்பவன் ஈசன். அவரது பணிவிடையில் நீராடலுக்கு முக்கியதுவம் உண்டு. பஞ்சபூதங்களும் அவனுள் ஒன்றியுள்ளன. ஐந்து முகங்களுடன் விளங்கும் ஈசனுக்கு நல்லெண்ணெய்,பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய் , பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் செய்வர்.

அபிஷேகத்தின் போது சிவபெருமானின் பெருமைகளை போற்றும் வகையில் வேதம் ஓதுவர். இதை ஸ்ரீ ருத்ரம் என்பார்கள். ஸ்ரீ ருத்ரம் 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஏனென்றால் சிவபெருமான் 11 வடிவம் கொண்டவர். 

ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதையே அன்னாபிஷேகம் என்பார்கள். லிங்கத்துடன் நிற்காமல் ஆவுடையிலும் பரவி அன்னவடிவில் காட்சி அளிப்பான் ஈசன். 

கருவறை வாசல்படி வரை அன்னத்தால் படிக்கட்டு அமைப்பர். லிங்கத்தில் அவனது உருவம் வெளிப்படுவதற்க்காக எள்ளு உருண்டை, வடை, அப்பம் ஆகியவற்றால் கண் காது மூக்கு முதலான உறுப்புகளை சிந்திப்பர்.

படிக்கட்டுகளில் கொலு வைப்பது போல் காய் கனிகள் பலவற்றை அடுக்கி விசேஷ தீபராதனை நடத்தி சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த அன்னாபிஷேகம் வருகிற 29 ந் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும்.

உலக உயிர்களுக்கு அன்னத்தை படைத்த நாள் தான் இது. உங்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு ஈசன் நல்லதை மட்டும் தருவார். அயல்நாட்டில் உள்ளவர்கள் அருகில் கோவில் இல்லாத பட்சத்தில் ஈசனை மனதில் தியானியுங்கள் அது போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


திருமணமும் அடிப்படையான செயல்பாடும்



வணக்கம் நண்பர்களே நாம் ஏழாம் வீட்டு தசாவை பார்த்து வருகிறோம் அதனால் அந்த தசாவை சார்ந்த திருமணத்தையும் சேர்த்து பார்த்து வருகிறோம்.  கூடிய விரைவில் ஏழாவது வீட்டு தசாவை முடித்து அடுத்து ஒரு தசாவை எடுப்போம். ஏழாம் வீட்டு தசா நீண்ட நாட்களாக செல்கிறது. அடுத்து எந்த தசாவை எடுக்கலாம் என்பதை தெரிவியுங்கள்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று வசனம் என்று பேசுவதோடு சரி. அதற்கான ஏற்பாட்டை ஒரு வருட காலத்திற்க்கு முன்பே எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவசர கல்யாணம் என்று அடுத்த மாதம் திருமணம் என்று ஏதோ ஒரு நாளை எடுத்து அந்த நாளில் திருமணத்தை முடிப்பது. ஒரு தவறான நாளில் திருமணம் நடந்தாலும் அந்த நாளின் கெட்ட நேரம் இந்த மணமக்களை பிரிக்கும்.

திருமண நாள் குறிப்பது திருமண நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் நடத்தும் தேதி கண்டிப்பாக வளர்பிறையில் குறிக்க வேண்டும். சந்திரனின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாள் செய்வதை நல்லோர் செய்யமாட்டார்கள் என்பது எதற்கு பொருந்துதோ இல்லையோ திருமண நிகழ்ச்சிக்கு பொருந்தும். இருவருக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டம தினத்தில் மனது கவலை கொள்ளும் அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தினால் வீண் பிரச்சினை உருவாகும்.

ஜாதகங்களை இணைக்கும் போது அந்த ஜாதகங்களின் பொருளாதார நிலையை கவனிக்க வேண்டும். ஜாதகங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

இருவரின் ஜாதகத்தில் ஒருவருக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரின் ஜாதகங்களை இணைக்கலாம். ஒரு வறுமையோடு இன்னொரு வறுமையை சேர்த்தால் இரண்டுமே வறுமை தான்.

திருமணத்திற்க்கு லட்சக்கணக்கில் செய்கிற செலவில் சோதிடர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகப் போவதில்லை. இதில் கஞ்சனம் தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

நல்ல வரனை தேர்ந்தெடுப்பது போல நல்ல சோதிடரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்க்கு முன் நேரம் ஒதுக்கி நிறைய நேரம் எடுத்துக்கொண்டு ஆர அமர யோசித்துத் திருமணம் செய்யுங்கள். உங்களின் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளுங்கள். வரனைப்பற்றி அனைத்து தகவல்களையும் பார்த்து நன்றாக ஆலோசித்துவிட்டு திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளுங்கள்.

சில பிள்ளைகள் திருமணத்திற்க்கு முன்பு யாராவது காதலித்து இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் பார்க்கும் வரன் பிடிக்காது உங்களுக்காக ஒத்துக்கொள்வார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மனசுஅந்த காதலை நினைத்து அப்பொழுது பிரச்சினையை ஏற்படுத்துவார்கள் எத்தனை பொருத்தம் இருந்தாலும் மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணத்தை செய்யுங்கள்.

திருமணங்களில் ஏதாவது தவறு செய்து விட்டு அப்புறம் கையை பிசைந்து கொண்டு இருப்பது முட்டாள் தனமான ஒன்று. ஆபத்து வரும்முன் காப்பவன் தான் அறிவாளி வந்த பின் தவிப்பவர் ஏமாளி. நீங்கள் அறிவாளியாக இருந்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகளாக இருக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, October 26, 2012

சனிப்பிரதோஷ ஸ்பெஷல்



வணக்கம் நண்பர்களே நாளை சனிப்பிரதோஷம் அதனால் நம்மால் முடிந்த உதவியை சனிபிரதோஷத்திற்க்கு செய்வோம். 

பட்டினத்தார் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரைப்பற்றி ஒரு செய்தியை சொல்லி சனிப்பிரதோஷ ஸ்பெஷலை ஆரம்பித்து வைக்கிறேன். உங்களால் முடிந்த சிவனைப்பற்றிய செய்திகளை அனுப்புங்கள்.பதிவில் போடலாம். 

சிதம்பர கோவில் வாசலில் பட்டினத்தார் அமர்ந்து இருக்கிறார். அவருடன் அவரின் சீடர் பத்திரகிரியாரும் அமர்ந்து இருக்கிறார். பட்டினத்தார் சீடரை பார்த்து சாப்பிடுவதற்க்கு வாங்கிவர சொல்லுகிறார் சீடர் போய் சாப்பாட்டை வாங்கி வருகிறார். 

சீடர் வாங்கிவந்த சாப்பாட்டை சாப்பிட்ட பட்டினத்தார் சீடரின் முகத்தில் அதை திப்பிகிறார் இது எல்லாம் சாப்பாடா என்று சொல்லுகிறார். சீடர் அந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கோவிலின் தெற்கு கோபுரத்திற்க்கு செல்லுகிறார் அந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். அப்பொழுது ஒரு நாய் ஒன்று வருகிறது அதற்க்கும் அந்த சாப்பாட்டை கொடுக்கிறார். அந்த நாய் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக்கொள்கிறது.

பத்திரகிரியார் அந்த நாயை விரட்டினாலும் செல்லாமல் அங்கேயே படுத்துக்கொள்கிறது. அப்பொழுது கிழக்கு கோபுர வாயில் இருக்கும் பட்டினத்தாரிடம் சிவன் பிச்சைகார வேடத்தை போட்டுக்கொண்டு வருகிறார் வந்தவர் பட்டினத்தாரிடம் எனக்கு சாப்பிட சாப்பாடு கொடு என்கிறார்.

அப்பொழுது பட்டினத்தார் அவரிடம் நானே கோவணத்துடன் அமர்ந்து கொண்டு இருக்கிறேன் இந்த கோவனத்தை விடலாமா அல்லது இப்படியே இருக்கலாமா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் நீ தெற்கு கோபுரத்தின் வாசலுக்கு போ அங்கு ஒருத்தன் குடு்ம்பத்தோடு அமர்ந்து இருக்கிறான் அவனிடம் போய் கேள் என்கிறார்.. சிவனும் நேராக தெற்கு கோபுர வாசலுக்கு செல்லுகிறார். அதை தன் ஞானத்தால் அறிந்த பத்திரகிரியார் நம்மை போய் நமது குரு குடும்பத்தோடு இருக்கிறேனே என்று சொல்லிவிட்டாரே எல்லாம் இந்த நாயால் தானே வந்தது என்று நினைத்து தன் கையில் இருக்கும் திருவோட்டால் அந்த நாயின் கழுத்தை அறுக்கிறார். 

அப்பொழுது சிவன் அதனை பார்த்து அவருக்கும் அந்த நாய்க்கும் மோட்சத்திர்க்கான வழி சொல்லுகிறார். இதனை அறிந்த பட்டினத்தார் சிவனிடம் கேட்கிறார். எனக்கு தானே முதலில் மோட்சத்தை தரவேண்டும். அதற்கு சிவன் உன்னால் இன்னும் விடமுடியாத ஒன்று இருக்கிறது உனக்கு இது நேரம் இல்லை நுனி கரும்பு இனிக்கும் போது உனக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லுகிறார் நுனி கரும்பு என்பது பேரானந்தம். 

பட்டினத்தார் தன் சீடனிடம் நடந்து கொண்டது சீடனை சோதனை செய்வதற்க்காக ஆனால் சீடனுக்கு முதலில் மோட்சம் கிடைத்தது அதன் பிறகு தான் பட்டினத்தாருக்கு மோட்சம் கிடைத்தது.

நண்பர்களே பட்டினத்தார் பாடல்கள் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மோடசத்திற்க்கான வழியை எளிதில் புரியும்படி பாடி வைத்துள்ளார் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதனை படித்து பாருங்கள்.

சனிபிரதோஷத்திற்க்கு உங்களுக்கு தெரிந்த சிவனின் பெருமையை உங்களின் ரசணையோடு எழுதி அனுப்புங்கள். சனி பிரதோஷ நாளில் இவ்வழியிலும் நாம் புண்ணியம் தேடலாம். உங்களுக்கு இப்பொழுதே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

E-mail: astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



ஈசாவாஸ்ய உபநிஷதம் 3



வாழ்க்கை துணையை வைத்து தான் நமது ஆன்மீக தொண்டை முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஒரு போதும் கிடையாது ,... நம் தந்தை தாய்க்கு செய்யும் பணிவிடைகளை ஏன் செய்கிறீகள் என்று கேக்க இந்த சர்வ லோகத்தில் யாருக்கும் உரிமை இல்லை. 

ஆன்மீகத்தில் இறைவனை நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக கருதாமல் நமக்குள் இருந்து நம்மை இயக்கம் சக்தியாக கருத வேண்டும்.இறைவனை நம் நண்பனாக, நம் குழந்தையாக கொஞ்சி மகிழும் போது ஆன்மீகத்தின் சக்தியை உணர்கின்றோம் .. இதற்கு இடம், நேரம் காலம், சுற்றம் என எதுவும் தடையாக இருக்க முடியாது.. 

காதலாகி கசிந்த சம்பந்தன் இறைவனை கண்டார்... இசைக்கும் காதலுக்கும் இறை செவி சாய்க்கும் என்பது தமிழகம் நன்கு அறிந்ததுவே... ஆன்மீகத்தின் வெற்றி என்பது இந்த பூத உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும் ஆன்மா ஐந்து எழுத்தை உச்சரிபதே .... சிவாயநம என்பதே சாலச்சிறந்தது.. 

நம்முடைய உரையாடலை உணர்வுகளை பாசத்தினை இறைவனார் புரிந்துகொள்ள காரணமாக செயல்படும் கருவியே ஆன்மீகமே தவிர.. கற்றோர் சொல்லுவது போல ஆன்மீகம் நம்மை நெறி படுத்தும் ஆன்மிகம் தான் நம்மை நேர்வழியில் நடத்தும் என்றால், தமிழில் சுயஒழுக்கம் என்ற வார்த்தை எதற்கு...ஆன்மீகம் என்ற கருவியை கொண்டு புறக்கண்கள் மூடி அகக்கண்கள் திறந்தால் இறை நம் அருகில் அமர்ந்து நம் உச்சி முகர்வதை உணரலாம்.. 

ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி ஒருபோதும் கிடையாது.... 

நன்றி .

தங்களின் பதிலுக்கு நன்றி. பெண்களுக்கு ஒரு குரு கிடைக்க வேண்டும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டது அவர்களின் தாய் தந்தை குருவாக அமைந்தால் இன்னும் மிகச்சிறப்பு தான். நமது தாய் தந்தையர்கள் இடைவெளிவிட்டதால் இன்று நமக்கு குரு கிடைப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது. 

நீங்கள் சொன்ன கருத்து அனைவருக்கும் இந்த நிலை வந்துவிட்டால் அது மிகப்பெரிய விசயமாக தான் இருக்கும். சாதாரண மனிதருக்கு இந்த நிலையை அடைய வழிகாட்டி வேண்டும். அந்த வழிகாட்டி தான் குரு. நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.  நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அன்பான அறிவுரை



வணக்கம் நண்பர்களே என்னிடம் சோதிட ஆலோசனை கேட்பவர்களில் பணத்தை ஏமாந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்து விட்டு என்னிடம் வந்து கடனை திருப்பி அடைக்க வேண்டும். ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். 

குறிப்பாக ஒரு மாவட்டகாரர்கள் அதிகம் பேர் இதில் ஈடுபட்டு இருப்பது தெரியவருகிறது. அவர்கள் பணத்தை இழந்த பிறகு சோதிடத்தை பார்ப்பது தவறு. சோதிடத்தில் ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் வீட்டு தசாவில் தான் இப்படி பணம் நம்மை விட்டு போகும். 

எந்த வியாபாரமாக இருந்தாலும் நீங்கள் முதலில் உங்கள் ஜாதகத்தை ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு வியாபாரத்தில் இறங்குங்கள். அப்பொழுது மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும். 

நான் எந்த மாவட்டம் என்று சொல்லவில்லை ஏன் அவர்களை நாம் பகைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆலோசனை தான் இது. பணத்தை சம்பாதித்துவிட்டால் அதை கட்டி காப்பது கடினம். அதை பல மடங்கு பெருக்க வேண்டும் நினைப்பது தவறு இல்லை அதற்கு நீங்கள் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் உள்ள வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.

அதிக ஏமாற்றும் தொழில்களை கொண்டவர்கள் முதலில் குறி வைப்பது உங்களை தான் அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இதில் பெண்களும் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழந்துவிடுகிறார்கள்.

ஷேர்மார்க்கெட்டில் இறங்குவது எச்சரிக்கையுடன் குறைந்த வருமானம் வந்தாலும அன்றைக்கு அது போதும் என்று எண்ணத்துடன் எழுந்து போய்விட வேண்டும். மீண்டும் மீண்டும் வருமானம் வரும் என்று நாட்முழுவதும் அதிலேயே கவனத்தை வைத்து இருந்தால் பணத்தை இழக்க நேரிடும். உங்களை அந்த முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 10



வணக்கம் நண்பர்களே ஒரு நண்பர் கேட்டு இருந்தார் ஆத்மாவை உடலில் இருந்து பிரிக்கமுடியுமா எப்படி என்று கேட்டு உள்ளார். சாமியார்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நான் சோதிடக்காரன் எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

உடம்பில் இருந்து ஆத்மாவை பிரிப்பது கடினமான ஒன்று தான். யோகாவில் உயர்நிலையில் அவ்வாறு பிரிக்க முடியும். அது கடுமையான பயிற்சியின் மூலம் தான் நடைபெறும் சாதாரணமாக நடைபெறாது.

இதயத்தில் உள்ள அறைகளில் ஒவ்வொரு அறையாக சுவாசத்தை நிறுத்தும் போது ஆத்மாவை உடலில் இருந்து பிரிக்கமுடியும் நீங்கள் நினைக்கும் இடத்திற்க்கு கொண்டு செல்ல முடியும்.

சுவாசத்தை நிறுத்துவது என்பது கடினமான ஒன்று தான் அதற்கு நேரம் இருக்கிறது. இரண்டு அறைகளில் சுவாசத்தை நிறுத்தும் போது ஆத்மாவை பிரிக்கமுடியும். உங்களின் இதயம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது உயிருக்கு ஆபத்தான செயல் தக்க ஆலோசனைப்படி செய்ய வேண்டும். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் உங்களின் குரு ஆலோசனைப்படி செய்யவும்.

பல நண்பர்கள் ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு பாராட்டுகிறார்கள். இதில் பெண்கள் நல்ல கணவன் அமையவில்லை என்று சொல்லுகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் எப்படி தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை வீட்டில் அம்மா அப்பாவிடம் சொன்னாலும் பேசுவார்கள் என்று மனது நினைக்கிறது நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லியுள்ளார்கள்.

மந்திர அனுபவங்கள் பத்து பதிவு வந்தால் அது பிரச்சினையை சந்திக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். இந்த தொடர் உங்களின் மனதில் ஏதோ செய்கிறது இதற்கே இப்படி என்றால் மொத்தம் 5 பிளாக்கையும் படித்தால் தமிழ்நாட்டில் ஏகாபட்ட சாமியார்களை உருவாக்குவேன் என்று நினைக்கிறேன். நானே ஆசாமி உங்களை எதற்கு சாமியாராக மாற்ற வேண்டும். இல்லறவாழ்வில் ஈடுபட்டு நல்ல சந்தோஷத்துடன் ஆன்மீக வாழ்வை நடத்துங்கள்  அதுவே போதும்.

பெண்கள் இந்தளவுக்கு விழிப்புணர்வோடு பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விழிப்புணர்வு இருந்தாலே கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை தருவார்.

உங்களுக்கு துணையாக வருபவர் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பொறுமையாக அவரை கையாண்டு ஆன்மீகத்திற்க்கு கொண்டுவாருங்கள்.

ஆன்மீக வாழ்வை பொறுத்தவரை மனிதர்களை மனிதர்களாக தான் பார்க்க தோன்றும். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும்போது உங்களுக்கு கண்டிப்பாக குரு கிடைப்பார்.

அனைத்து நண்பர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். நீங்கள் ஒரு குருவிடம் உபதேசம் பெற்றுவிட்டு என்னிடம் வாருங்கள் அதன் பிறகு என்னால் முடிந்த பயிற்சியை தருகிறேன்.

நீங்கள் வரும்போது உங்களிடம் அந்த சக்தி உங்களுடன் இருக்க வேண்டும் அப்படி இருக்கும்பட்சத்தில் என்னால் உங்களுக்கு பயிற்சியை தரமுடியும். சும்மாக வந்து நான் குரு உபதேசம் பெற்று ஒரு சக்தியை எடுத்துவிட்டேன் எனக்கு பயிற்சி  கொடுங்கள் என்று சொல்லகூடாது. நீங்கள் என்னை வந்து பார்த்தாலே உங்களிடம் இருப்பது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியும்.  இதற்கும் சில நிபந்தனை உண்டு. 

பயிற்சி என்பது ஒரு சில வழிமுறைகள் தான் தருவேன். அதை வைத்து நீங்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இதை பயின்றபோது எனது குரு என்னிடம் உபதேசம் தந்தது ஒரு மந்திரத்தை கொடுத்து இதை செய் அவ்வளவு தான் அதன் பிறகு அவர் என்னை கண்டுக்கொள்ளவில்லை நான் கேட்கும் போது அவர் குப்பையை கிளறினால் தான் கோழி இரையை எடுக்கமுடியும். இது தான் எனக்கு கொடுத்த உபதேசம்.

வேறு ஏதுவும் சொல்லமாட்டார் அனைத்தும் பேசுவார் ஆனால் இதைப்பற்றி பேசமாட்டார். ஒருவன் ஒரு குருவை சரணடைந்து அவரிடம் தீட்சை பெறுவது என்பது ஆயிரம் மாஸ்டர் டிகிரி வாங்குவது போன்றது. அப்பொழுது மட்டுமே ஒருவன் வைரம்போல மின்னமுடியும்.

இன்றைக்கு இருக்கும் சாமியார்கள் சொல்லும் உபதேசம் ஒளி உடல் இருக்கிறது. உடம்பில் சக்கரம் இருக்கிறது அது இது என்று சொல்லி உங்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள். என்னுடைய குருவின் உபதேசம் அனைத்தும் அனுபவத்தை தான் தந்தார்.

இன்றைக்கு தீட்சை என்பது ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் தந்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் தீட்சை என்பது குருவின் உயிர். 

பயிற்சி என்பது சிந்தனையை தூண்டக்கூடியதாக அமையும். மற்றபடி தலைகீழ் நிற்க வேண்டும்.  அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன். நான் இருப்பது சென்னையில் இந்த ஊரில் இருப்பவர்கள் வந்து பார்க்கலாம் இதற்காக நீங்கள் வெளியூரில் இருந்து செலவு செய்து என்னை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, October 25, 2012

சோதிடம் : ஏழாம் வீட்டு தசாவும் மரணமும்



வணக்கம் நண்பர்களே நாம் சோதிட பகுதியில் பார்த்துக்கொண்டு இருப்பது ஏழாம் வீட்டு தசா. அதன் பலனை ஒரளவுக்கு தந்துள்ளேன்.

ஒருவருக்கு ஏழாவது வீட்டு தசா நல்ல பலனை தரும் என்றாலும் இந்த ஏழாவது வீட்டு தசா ஒருவருக்கு மரணத்தையும் தரும். ஒருவனை கொல்லுவதில் முதலிடத்தில் இருப்பவன் இந்த ஏழாம் வீடு தான் பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மரணத்தைப் பற்றி நான் ஏழாவது வீட்டு தசாவில் எழுதவில்லை.

உங்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடக்கும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நம்முடைய வாழ்நாட்களை காட்டும் இடம் எட்டாம் வீடு. எட்டாவது வீட்டிற்க்கு பனிரெண்டாவது வீடு ஏழாம் வீடு. ஒரு வீட்டிற்க்கு பனிரெண்டாவது வீடு அந்த வீட்டிற்க்கு பாதகம் செய்யும் வீடு அதனால் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். 

ஏழாம் வீட்டு தசா நடை பெற ஆரம்பிக்கும் போது அந்த தசா நாதனை திருப்திப்படுத்துங்கள் பாதுகாப்பு அற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள். மருத்துவரை அணுகி உடம்பை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உடம்பில் ஏதாவது மாற்றம் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நன்மையளிக்கும்.ஒரு சிலருக்கு ஏழாம் வீட்டு தசா நடைபெறும் போது அந்த வீட்டில் ராகு கேது இருந்தால் மரணத்தை தராது அதன் பிறகு ராகு கேதுகளின் தசா ஆரம்பித்தால் மரணத்தை கொடுக்கும். ராகு கேது அமரும் இடத்தின் பலனை கொடுப்பதால் அவ்வாறு நடைபெறும். நீங்கள் ஏழாம் வீட்டு அதிபதியின் தசாதான் முடிந்துவிட்டதே என்று நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் பிறகு வரும் ராகு கேதுகளின் தசாவில் ஆளை கொன்றுவிடும் இதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஏழாம் வீட்டு தசா நடைபெறும் போது குலதெய்வ வழிபாடு மற்றும் அந்த தசா நாதன் வழிபாடு போன்றவை நன்மையளிக்கும். இதனை செயது நீங்கள் மரணத்தை தள்ளிபோட்டு உங்களின் கடமைகளை செய்யுங்கள்.

மிருத்துஞ்ச ஜெபம் அல்லது ஹோமம் செய்வதால் ஆயுள் நீடிக்கும். சுதர்சன ஹோமம் செய்யலாம் இதிலும் ஆயுள் நீடிக்கும். நோய்கள் வராமல் இருக்க தன்வந்தரி ஹோமம் செய்வதும் நன்மையளிக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Wednesday, October 24, 2012

ஈசாவாஸ்ய உபநிஷதம் 2


வணக்கம் நண்பர்களே அனைத்து நண்பர்களும் போன் செய்து பதிலை தருகிறீர்கள். நன்றி உங்களின் ஆவலை தீர்ப்பதற்க்கும் வழிகளை சொல்லுகிறேன்.

உங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது உங்களின் உரிமை அதில் யாரும் தலையிட வேண்டியதில்லை இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தையின் பேச்சை கூட கேட்பதில்லை இதில் சோதிடகாரன் பேச்சை மட்டும் கேட்பார்களா?

என் வாழ்க்கை இதில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று சொல்லுவதே ஏற்றுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கும் விலைவாசிக்கு இருவரும் சேர்ந்து வேலைக்கு சென்றால் தான் அவர்களால் குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். சும்மா ஆன்மீகம் அது இது என்று சொன்னால் உங்களின் வாழ்க்கையை கவனிப்பது யார்? 

நீங்கள் வரன் பார்க்கும் போது குறைந்தபட்சம் ஆன்மீக அறிவு இருந்தால் போதும் அதை வைத்து நீங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம். 

இந்த மாதிரி வரன் பார்க்கமுடியுமா பையன் என் வேலை பார்க்கிறான் அவன் மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிப்பான் என்று தான் நாம் கேட்கமுடியும். மாப்பிள்ளை ஆனமீகத்தில் எந்தளவுக்கு இருக்கிறார் என்று கேட்டால் ஏன் மடம், ஆசிரமம் ஏதாவது கட்ட போகிறாய என்று தான் கேட்பார்கள். இது எல்லாம் ஒத்து வருவாது. அவன் அவன் விதி மாட்டனும்னு இருந்தா மாட்டித்தான் ஆக வேண்டும்.

நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவரை ஆன்மீகவாதியாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

ஆன்மீகம் என்பது ஒரு உணர்வு என்று சொல்லுகிறார்கள் அதற்கான விளக்கம்

காற்று உடம்பில் படும் போது அது உணர்வு ஒரு பொருளை தொடும்போது அது உணர்வு. நீங்கள் கம்யூட்டரில் வேலை செய்கிறீர்கள் அந்த வேலை உடனே கிடைத்ததா நீங்கள் அதனைப்பற்றி படித்து அதில் தேர்ச்சி பெற்று அதில் வேலை செய்கிறீர்கள். கம்யூட்டரில் வேலை செய்யும் போது நாம் கம்யூட்டரில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது இந்த உணர்வை பெறுவதற்க்கு இவ்வளவு காலம் உழைத்து இருக்கிறீர்கள். அதைப்போல் ஆன்மீக உணர்வை பெறுவதற்க்கு நீங்கள் பல காலம் உழைக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும். அப்பொழுது மட்டுமே அதை நீங்கள் அனுபவிக்க முடியும். யாராது ஒரு சிலருக்கு இது எளிதில் நடைபெற்று இருக்கலாம். அது கோடியில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியப்படும். எல்லாருக்கும் நடைபெறாது இது கலியுகம் கஷ்டபடவில்லை என்றால் சாத்தியப்படாது.


ஈசாவாஸ்ய உபநிஷதம் 

ஆத்மாவை சார்ந்து இருப்பது கர்மம் என்று சொல்லுவார்கள். உபாசனை என்று ஒன்று இருக்கிறது நீங்கள் கூட பார்த்து இருப்பீர்கள் தேவி உபாசனை என்று சொல்லுவார்கள் ஏதாவது ஒரு தேவியை எடுத்து அதை செய்வது. நமது ஆன்மீக அனுபவங்களில் எழுதுகிறேனே அது தான் அது அதுவும் முக்திக்கு வழி கொடுக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

நான் சொன்ன நீங்கள் நம்பமாட்டீர்கள் அதற்கு நீங்கள் நிறுபி என்று சொல்லுவீர்கள் ஈசாவாஸ்ய உபநீஷத்தில் சொல்லி உள்ளார் உபாசனையும் ஆத்மா ஞானத்தில் ஒன்றும்போது முக்திக்கு வழி தான் என்று சொல்லிருக்கிறார். 

பல தேவதைகளின் உபாசனையினும் பரமாத்மாவுக்கே அர்ப்பணம் எனக் கருதிச் செய்யப்படுமாயின் செய்பவன் தேவதைகளின் பிரசாதத்தால் படிப்படியாக உயர்நது முடிவில் முத்தி எய்வான் என்று இந்த ஈசாவாஸ்ய உபநிஷத்தில் அருமையாக தன் மகனுக்கு சொல்லுவதை போல் உங்களுக்கு சொல்லிருக்கிறார்.

நீங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகத்தில் உயர இதைவிட்டால் வேறு வழி இல்லை என்று நினைத்து இதை செய்ய ஆரம்பித்தால் படிப்படியாக உங்களின் ஆன்மிகவாழ்க்கை உயர்வடையும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

அனைத்து சாமியார் மற்றும் ரிஷிகள் இறந்த பின்பு சொர்க்கம் என்று சொல்லுவார்கள் ஆனால் நான் வாழம் போதே சொர்கத்தில் இருப்பது தான் மிக சிறந்த வாழ்க்கை என்று சொல்லுகிறேன். நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே சொர்க்கமாக மாற்றுங்கள் என்று சொல்லுகிறேன் என்ன மாற்றுவீர்களா நண்பர்களே? 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஈசாவாஸ்ய உபநிஷதம் 1


R.Srishobana


ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதற்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது தான் முதலில் அவசியம் என்று நினைக்கின்றேன்...அதுவே பாதி வெற்றி தான்...ஆன்மிகத்தை நாம் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய செயலாகக் கருதி வணங்க‌ வேண்டும்...கடமைக்காக மட்டும் நினைத்துக் கொண்டு வணங்கக் கூடாது...பின்பு நாம் ஆன்மிகத்தில் செல்வதன் நோக்கத்தையும் உணர்தல் அவசியமாகும்...


நாம் முடிந்தவரையில் நல்லவர்களாகவும்,தூய்மையானவர்களாகவும் வாழ்தல் தான் நமது ஆன்மீகத் தேடலுக்கான காரணமாக அமைய வேண்டும்,அப்படி எண்ணி வணங்கினால் தான் நமது தேடல் பூர்த்தியாகும் என்பது என்னுடைய கருத்து...நன்றி... 


வணக்கம் தங்களின் பதிலுக்கு நன்றி உங்களின் விருப்பத்திற்க்காக தான் ஆன்மீக பதிவுகள் வெளியிடுகிறேன். தாங்கள் சொல்லுவது சரி. 

Raja

நீங்கள் சொல்லுவதை நான் சரிதான் என்கிறேன். ஆனால் அப்படி வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அதையும் ஏற்றுக்கொண்டு இறைஅருளை தேடுவது சிறந்தது ஆன்மிகத்தில் வெற்றி அல்லது தோல்வி கிடையாது. அது ஒரு உணர்வு.

வணக்கம் தங்களின் பதிலுக்கு நன்றி நீங்கள் ராஜா என்று உங்கள் பெயரை போட்டு இருக்கிறீர்கள் ஆனால் வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிருக்கிறீர்கள். ஆண்களுக்கு இது பிரச்சினை இல்லை. வாழ்க்கை துணையை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் சொல்லுவது பெண்களுக்கு தான். அவர்களால் தான் வெளியிடங்களுக்கு செல்லுவது ஆபத்து என்பதால் கணவரை தேர்ந்தெடுக்கும் போது ஆன்மிகவாதியாக தேர்ந்தெடுங்கள் என்று சொல்லுகிறேன். 

நீங்கள் ராஜா வாகவே இருந்தால் இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு இருக்கின்ற பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களை தேர்ந்தெடுங்கள் முதலில் ஆன்மிகத்திற்க்கு பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் பார்க்க முடியாது. நீங்கள் பணக்காரனாக இருந்தால் ஒரு ஆன்மீகம் உள்ள ஏழை பெண்ணை தேர்ந்தெடுங்கள். கண்டிப்பாக கிடைப்பார்கள். நீங்கள் பணக்காராக இருந்தால் ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்யும் பட்சத்தில் நீங்கள் கடவுள் தன்மையில் உயர்வீர்கள்.

ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி கிடையாது என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் சொல்லுவதை போல் இருந்தால் அனைவருக்கும் ஆன்மீக தேடல் இருந்து இருக்காது.

ஆன்மீகம் என்பது ஒரு உணர்வு என்று சொல்லியுள்ளீர்கள்.
அனைவரும் இப்படி தான் சொல்லுகிறார்கள். உணர்வு என்றால் அது எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.

உங்கள் மேல் கோபபட்டு இதை சொல்லவில்லை உங்கள் மூலம் பல பேருக்கு இதை சொல்லுகிறேன்.

ராஜா  அவர்களே ஆன்மீகத்தில் இருக்கும் பெண்ணை தேடுவது எளிது. ஆன்மீக தேடல் தான் கடினம். பொதுவாக ஆன்மீகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் மனிதராக தான் பார்ப்பார்கள்.

ஏற்ற தாழ்வு இருக்க கூடாது. நல்ல ஆன்மீக நாட்டம் உள்ள பெண்ணாக அமைய இறைவனை உங்களாக நான் பிராத்திக்கிறேன். நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Tuesday, October 23, 2012

ஈசாவாஸ்ய உபநிஷதம்



வணக்கம் நண்பர்களே ஈசாவாஸ்ய உபநிஷதம் என்று ஒரு உபநிஷதம் இருக்கிறது. இந்த உபநிஷதம் யஜூர் வேதத்தில் உள்ளது. இந்த உபநிஷத்தின் தந்தை தத்யங் ஆதர்வணர். இவருக்கு ஒரு பையன் இருந்தான். அந்த காலத்தில் ரிஷிகள் எல்லாம் திருமணம் ஆனாவர்கள். அந்த பையன் இளமையில் அதிக ஆன்மிக அறிவு உள்ளவனாக இருந்தான். பின்ன இருக்காத என்ன ரிஷியின் பையனாசே ஜீன் வேலை செய்யாமல் இருக்குமா என்ன. இளம் வயதில் ஞானபால் குடித்தவன். இப்ப இருக்கும் பையன்களாக இருந்தால் ஞானபால்னா கே எப் சி யில் கிடைக்குமா அல்லது வெளிநாட்டு புராடைக்டா அல்லது எந்த டிமார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும் என்று கேட்பார்கள்.

இவர்களை சொல்லி குற்றமில்லை எந்த குழந்தைக்கும் பத்து வயதிற்க்குள் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லி தரவில்லை என்றால் அந்த குழந்தையால் எந்த வயதிலும் ஆனமீகத்தில் முழுமை பெற முடியாது. இது உண்மையான விசயம் அதனால் உங்கள் குழந்தைக்கு ஆன்மீக அறிவை பத்து வயதிற்க்குள் சொல்லி கொடுத்துவிடுங்கள்.

ஒரு பிராமணர் ஆசிரியர் எனக்கு தொடக்கபள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார் அவர் பெயர் சங்கரநாராயணன். அவர் என் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் அவர் வீட்டிற்க்கு எல்லாம் என்னை கூட்டிக்கொண்டு செல்வார். அவர் அந்த வயதில் எனக்கு கற்பித்த ஆன்மீக விசயங்கள் தான் இன்று வரை சிந்தனையை தூண்டிய செயல்.

சரி விசயத்திற்க்கு வருகிறேன். இந்த உபநீஷதம் முழுவதும் பார்த்தால் இவருக்கும் அவரது பையனுக்கும் நடக்கும் உரையாடல் போலவே இருக்கும். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் விதமாக உள்ளன.

ஒரு நான் அந்த பையன் அவனின் தந்தையை அணுகி தந்தையே எனக்கு குரு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்கிறான். பார்த்தீர்களா தந்தையிடமே தீட்சை பெறுவது எவ்வளவு பெரிய விசயம் நாம் எல்லாம் இப்பொழுது குரு எங்கு கிடைப்பார் என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். அந்த காலத்தில் அவர்களின் தந்தை குருவாக இருந்து தனது குழந்தைகளுக்கு வழங்கி இருக்கிறார். இதை தான் நான் சொல்லுகிறேன். நீங்கள் கற்று உங்கள் குழந்தைக்கு கொடுங்கள் என்று ஆனால் நீங்கள் வாயை திறப்பதில்லை. அனைத்திற்க்கும் மௌனம் தான் பதிலாக தருகிறீர்கள்.

அவர் சொல்லுகிறார் ஓம் இது தான் பரிபூர்ணம். உலகம் உருவானது ஓம் என்ற பூர்ணத்தால் இந்த பூர்ணம் தான் என்னிடமும் உள்ளது உன்னிடம் உள்ளது. பூரணத்தினின்று பூரணத்தையெடுத்தும் பூரணமே எஞ்சி நிற்கின்றது.

உடனே அந்த பையன் கேட்கிறான். ஒரு பொருளில் இருந்து ஒரு பொருளை எடுத்தால் அந்த பொருளில் பாதி பொருள் போய்விடும் இது கணிதத்தின் நியதி ஆனால் நீங்கள் அதை எடுத்தாலும் பூர்ணமாக அதாவது முழுவதுமாக இருக்கின்றது என்கிறீர்களே எப்படி தந்தையை என கேட்கிறான். பாருங்கள் எப்படி கேள்வி கேட்கிறான்.

அதற்கு தந்தை அன்பு குழந்தையை கணித நியதி சாதாரணமாக உள்ள பொருளுக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கும். எங்கும் நிறைந்திருக்கும் பரும்பொருளை கணித நியதிக்கொண்டு பார்க்ககூடாது. என்று சொல்லுகிறார்.

ஓம் தோன்றி மறையக்கூடிய இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் ஈசனால் உருவாக்கப்பட்டது அந்த ஈசுவரனின் குணத்தால் ஏற்படும் தியாகத்தால் உன்னை அறிந்துக்கொள் என்கிறார்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்துள்ளான் என ஏற்றுக்கொண்டு வாழ்வாயாக எவருடைய பொருளுக்கும் ஆசைப்படாதே.

இறந்து போனவனிடத்தில் உயிருக்கு அடையாளமான உணர்ச்சி ஏதேனும காணப்படுவதுண்டா அவ்வண்ணமே ஞானம் இல்லாதவனிடம் ஆத்மா இருக்கும் அடையாளமே செயலில் காணப்படாது.

இனி நமது டச்

அவர் சொல்லுவது உடம்பு வேறு ஆத்மா வேறு என்று பாவனை கொள்ள வேண்டும் என்கிறார். இது இந்த காலத்தில் இப்படி இருக்க முடியுமா. நமது காலில் ஒரு முள் குத்தினாலும் அய்யோ முள் குத்திவிட்டது என்று கத்தி ஊரை கூட்டிவிடுகிறோம். அனைவரும் நான் என்பது எனது உடம்பு தான் என்று வாழ்கிறோம் இந்த காலத்தில் இப்படி இருக்கலாம் ஆனால் கடைசி வரை அப்படி இருப்பது தவறு. 

அனைவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அவர்கள் நான் வேறு இந்த உடம்பு வேறு என்று வீட்டில் சொன்னால் வீட்டில் இருக்கும் மனைவி இவர் காலையில் நன்றாக தானே ஆபிஸ் சென்றார் மாலையில் வரும் போது ஏன் இப்படி பேசுகிறார் சென்னையில் வெயில் ஒவராக அடிப்பதால் இப்படி ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு வரும் விடுமுறை நாளில் உங்களுக்கு எலுமிச்சை பழத்தை பிழிந்து உங்கள் மனைவி தலையில் தேய்த்துவிடுவார். 

நாம் அனைவரும் இந்த உடம்புக்காக வாழ்பவர்கள் நமக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் நாம் நன்றாக சுகமாக வாழலாம். கார் வாங்கலாம். வீடு வாங்கலாம் A /c யில் வாழலாமா என்று நினைப்பில் தான் இருப்போம். உடம்பை விடுவது என்றால் அது முற்றிலும் துறந்தவர்களுக்கு தான் முடியுமே தவிர குடும்பத்தில் இருப்பவனுக்கு ஒத்துவராது.

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலை கிடைக்க ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி கடைசியில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வாழ்க்கைக்கு தேவையானதை அனைத்தும் போராடி வெற்றி பெற்று இருக்கிறேன் இவன் என்னடா என்றால் எல்லாத்தையும் விடவேண்டும் என்று சொன்னால் எப்படி இது நடைமுறையில் சாத்தியப்படும்.

இதுக்கு ஏதாவது வழி இருக்க என்று பார்க்க வேண்டும். இன்றைய நிலைப்படி பிரச்சினை எங்கு அதிகம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பிரச்சினை அதிகம் குடும்ப வாழ்க்கையில் தான் ஏற்படுகிறது. குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் போது அங்கு தான் ஆன்மிகம் தேவைப்படுமே தவிர சந்நியாச வாழ்க்கைக்கு தேவைப்படாது. இன்று சந்நியாச வாழ்க்கை என்பது சொகுசு வாழ்க்கையாக மாறிவிட்டது. அங்கு எதற்கு ஆன்மீகம் குடும்பத்தில் இருப்பவனுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும். 

ஆன்மீகத்தில் இருப்பவன் உடம்பை விடாமல் இல்லறத்தில் இருந்துக்கொண்டே அதற்கான வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதே நேரத்தில் மனிதன் கடைசி நேரத்தில் அவன் ஆன்மீக வாழ்க்கையில் மோட்சத்தை அடைய வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன். படித்துவிட்டு செல்ல கூடாது உங்களின் பதிலை அப்படியே பதிவில் போடுவேன். அதனால் உடனே எழுதுங்கள்.

E-mail: astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்



வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.எந்த பண்டிகையும் குடும்பத்தோடு கொண்டாடும் போது மட்டுமே அது சிறக்கும் பல பேர் வேலை காரணமாக வெளியில் இருக்கலாம் அவர்கள் பண்டிகை நடக்கும் நேரத்தில் போன் செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷம் அடைவார்கள். கொஞ்ச காலம் தான் இந்த பூமியில் வாழ போகிறீர்கள் என்ன தான் பணம் பணம் என்று ஒடினாலும் ஒரு கட்டத்தில் தனித்துவிடபடுவீர் அதனால் அனைவரும் உங்களுக்கு வரும் பண்டிகையை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுங்கள். 

இந்த நவராத்திரி விழாவில் நான் எழுதிய மந்திர உச்சாடணம் படித்துவிட்டு மூன்று பேர் அவர்களின் மந்திர உச்சாடணத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். உங்களின் பின்னால் என்றும் நிற்பேன். 

சில நண்பர்கள் என்னிடம் பேசும் போது உதாரண ஜாதகம் மூலம் விளக்குங்கள் என்று கேட்டு உள்ளார்கள். உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் நமது பிளாக்கில் வருபவர் எண்ணிக்கை குறைவு ஒரு நாளைக்கு 500 பேர் வரும் போது அவ்வாறு செய்யலாம். இப்பொழுது அடிப்படையான விசயத்தை தெரிந்துகொள்ளுங்கள். நான் சோதிட தொழில் செய்கிறவன் களத்தில் இறங்கி வேலை பார்த்தவன் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை பார்த்து இருக்கிறேன். உதாரண ஜாதகங்கள் விளக்கும் போது உங்களுக்கு எளிதில் புரியும். 

கம்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு ஜாதகங்களை பார்ப்பது எளிது. அனைத்து அட்டவணையும் கம்யூட்டர் சொல்லி கொடுத்துவிடும். கிராமங்களில் சோதிடம் பார்க்கும் போது எந்த கம்யூட்டரை வைத்து பார்ப்பது உன்னுடைய அஷ்டவர்க்க அட்டவணையை கொடு இருக்கின்ற அனைத்து அட்டவணையும் கொடுத்தால் தான் சோதிடம் சொல்லுவேன் என்று சொன்னால் ஓங்கி ஒரு அறையை விட்டு நீ சோதிடம் பார்க்க வந்தியா இல்லை ஏதாவது பிராடு செய்து ஏமாற்ற வந்தியா என்று கேட்பார்கள் இருக்கின்ற ராசி அட்டணையை வைத்து சோதிடத்தை துல்லியமாக சொல்ல வேண்டும். அந்த தொழிலை உங்களுக்கு சொல்லி தருகிறேன். அப்பொழுது எளிதில் விளங்கும்.

நமது பிளாக்கை படித்துவிட்டு ஜாதக கதம்பம் என்று பெயர் வைத்து  விட்டு அனைத்தையும் எழுதுகிறீர்களே என்று சொன்னார்கள். ஒரு நாளைக்கு ஒரு பதிவாது சோதிடம் சம்பந்தப்பட்டது வரும் மற்றது ஆன்மீக விசயங்கள் வரும்.

நிறைய பேர் என்னிடம் ஆன்மீகத்தில் நிறைய எழுதுங்கள் என்று கேட்டுள்ளார்கள். அவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன். என்னிடம் இருப்பதை உங்களிடம் இறக்கி வைத்தால் தான் என் பைத்தியம் தீரும். என்ன தான் டைப் செய்து எழுதினாலும் ஒரு சதவீதம் மட்டுமே உங்களுக்கு தரமுடிகிறது மீதி என் தலையில் அப்படியே இருக்கிறது.  அதை கொட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். முடியவில்லை. மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, October 22, 2012

மருமகளால் அதிர்ஷ்டமா?



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் உங்கள் வீட்டிற்க்கு வந்த மருமகளால் அதிர்ஷ்டமா என்று பார்க்கலாம். இதை படித்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் சரியில்லை என்று அடித்து துரத்திவிட்டு விடாதீர்கள். இன்றைக்கு பெண்களுக்கு எதிரி பெண்களாக தான் இருக்கிறார்கள். 

அடுத்த வீட்டு பெண்ணையும் தன் பெண்ணாக தான் பார்க்க வேண்டும். உங்கள் மகனின் வாழ்வில் பங்கு எடுத்துக்கொள்ள வந்தவள். உங்களின் மகனின் இரத்த உறவாக ஆகபோகிறவள் அவள். அவளை நீங்கள் மதிக்கும் போது உங்களை அவள் மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொள்வாள். நீங்கள் முதுமையில் தனிமையில் இல்லாமல் இருக்க அவளை நீங்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. 

பதினோராவது வீட்டு அதிபதி முதல் வீட்டில் அல்லது ஐந்தாவது வீட்டில் இருந்தால் உங்கள் மருமகள் வந்த நேரம் உங்கள் வீடு செல்வ செழிப்பில் திளைக்கும். பணமழையாக கொட்ட ஆரம்பிக்கும்.தொட்டது அனைத்தும் தங்கமாக மாறும்.

அவள் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தால் கூட அவளை அதிர்ஷ்ட தேவதையாக மாற்றுவதற்க்கு வழி இருக்கிறது. அவளை வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியை மனதார பிராத்தணை செய்ய சொல்லுங்கள். ஏதாவது ஒரு வெள்ளி அன்று லட்சுமி கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள். ஒன்பது வாரம் இப்படி செய்யும் போது உங்கள் மருமகள் அதிர்ஷ்ட தேவதையாக மாறுவாள்.

ஒரு சில ஊர்களில் லட்சுமி கோவில் இருக்காது. பெருமாள் கோவில் மட்டும் இருக்கும் அப்படி பட்ட ஊர்களில் இருக்கும் பெருமாள் கோவிலில் லட்சுமி இருக்கும் அதை வணங்கலாம். அதே பலனை கொடுக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு செய்தால் உங்கள் மருமகள் அதிர்ஷ்ட தேவதையாக மாறுவாள்.செய்து விட்டு பலனை சொல்லுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஆன்மீக அனுபவங்கள் 9



வணக்கம் நண்பர்களே ஆன்மிக அனுபவங்களுக்கு சில கேள்விகளை நமது நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் கேள்விகள் மூலம் உங்கள் சந்தேகங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

நான் ஒரு மந்திரத்தை எடுத்து மந்திர உச்சாடணம் செய்து கொண்டு இருக்கிறேன். அதை விட்டு விட்டு அடுத்த மந்திரத்தை எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். எடுத்து செய்யலாமா?

நல்ல கேள்வியை கேட்டு இருந்தார் அந்த நண்பர் அதற்காக பதில் கொஞ்சம் சொல்லுகிறேன். நீங்கள் ஏன் அந்த மந்திரத்தை விட வேண்டும். அந்த மந்திரத்தில் ஏதாவது நடைபெறவில்லையா அந்த மந்திரங்கள் உங்களின் வாழ்க்கை மாற்றவில்லையா அப்படி என்றால் கண்டிப்பாக அடுத்த மந்திரத்தை எடுக்கலாம். நீங்கள் அடுத்த மந்திரத்தை எடுத்தாலும் அந்த மந்திரம் அது போல தான் இருக்கும். அதன் பிறகு வேறு ஒரு மந்திரத்தை எடுப்பீர்கள். இப்படியே வாழ்நாள் முழுவதும் போய் கொண்டே இருக்கும். எதுவும் நடைபெற போவதில்லை.

குரு நாதர் கிடைக்காமல் செய்வதால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது. நீங்கள் முதலில் தேடவேண்டியது குருநாதரை தான் தேட வேண்டும். அப்படி தேடும் பட்சத்தில் அவர் உங்களுக்கு கிடைப்பார். தேடினால் தான் கிடைக்கும்.

நீங்கள் அனைவரும் கோவில்களுக்கு செல்லுங்கள் அங்கு உள்ள இறைவனிடம் வேண்டுங்கள் அப்பொழுது அந்த இறைவனின் கருணை பார்வை பட்டு உங்களுக்கு நல்ல குரு அமைவார்.

எந்த கோவில் என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை ஏன் என்றால் எவருக்கு எந்த கோவிலில் ஸ்பார்க் ஆகின்றது என்று தெரியாது எந்த கோவிலும் நடைபெறலாம். அதனால் நீங்கள் கோவிலுக்கு செல்லும் பட்சத்தில் இது நடைபெறும்.

நேற்று ஒரு அம்மா போன் செய்தார்கள் நீங்கள் ஒரு  குருவை ஏற்பாடு செய்து தாருங்கள் எங்களால் இந்த வயதில் போய் தேடமுடியாது என்று கேட்டார் நான் எழுத தான் முடியும் குருவை தேட என்னால் முடியாது.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் திருமணம் முடித்தவர்கள் என்றால் உங்கள் கணவரை முதலில் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். அதன் பிறகு அவரை வைத்து அவரின் வழிகாட்டால் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளுவது நன்மை பயக்கும்.

நம் நாட்டு பெண்களை பொறுத்தவரை அவர்களின் கணவன் தான் உலகம். அந்த உலகத்தை வைத்து தான் ஆன்மீக உலகத்தையும் பார்க்க வேண்டும். ஏன் என்றால் நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டை விட்டு செல்வது என்பது முடியாத காரியம்.

முதலில் உங்கள் கணவரை இதற்கு தயார்படுத்துங்கள் அதன் பிறகு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு ஒரு எளிதான வழியை சொல்லிவிட்டேன்.

உங்கள் கணவர் மூலம் அடைவது எளிதான காரியமாக உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு இரண்டு வழியில் நன்மையளிக்கும். ஒன்று உங்கள் கணவர் நல்லவராக மாறிவிடுவார் அடுத்தது உங்களுக்கு அந்த சக்தி கிடைத்துவி்டும்.

உங்கள் அருகில் இருந்து தூண்டுதல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே சரியான திசையில் நீங்கள் செல்லமுடியும் ஏன் என்றால் அவ்வளவு கடினமான விஷயங்கள் இதில் இருக்கிறது. உங்கள் கணவர் மட்டுமே உங்கள் அருகில் இருந்து இதை செய்யமுடியும். நான் சொல்லுவது சரி என்று உங்கள் மனதில் படும் என்று நினைக்கிறேன்.

நேற்று ஒரு வீட்டிற்க்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள் அந்த வீட்டில் உள்ளவர் என்னிடம் சொன்னார் நான் ஒரு குருநாதரை தேடி அலைந்தேன் எனக்கு குரு அமையவில்லை. நான் ஐயப்பனுக்கு வருட வருடம் மாலை போட்டுக்கொள்வேன் அப்படி செல்லும் போது அந்த ஐயப்பனே எனக்கு ஒரு குருவை காட்டிக்கொடுத்தார் என்று சொன்னார்.

ஐயப்பனிடம் மானசீகமாக கேட்டு இருக்கிறார் அந்த ஐயப்பன் அவருக்கு சரியான குருவை அடையாளம் காட்டி இருக்கிறார். அவருக்கு குரு கொல்லிமலையில் கிடைத்து இருக்கிறார் அவரை வைத்து அவர் ஆன்மிகத்தில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அப்படியே அந்த நல்ல விசயங்களை அவரின் மனைவிக்கும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் அந்த அம்மாவும் இன்று நல்ல நிலையில் ஆன்மீகத்தில் உள்ளார். இப்படி செய்தும் நீங்கள் குருவை பெறலாம்.

எத்தனையோ வழிகளை உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் அதனை அடைய முடியவில்லை. பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சோதிடம்: தெய்வங்களுக்கு ஒரு ஆலோசனை



வணக்கம் நண்பர்களே இது பெற்றோர்களுக்காக பதிவு. திருமணம் ஆனாவர்கள் மட்டும் படிக்க வேண்டும்.இளைஞர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடன் பேசும் பெற்றோர்கள் அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி என் பையன் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டேன்கிறான். என் பெண் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டேன்கிறாள். நீ யாராவது காதல் பண்ணிக்கொண்டு இருந்தாலும் சொல்லு நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் சொல்லி பார்த்துவிட்டோம் ஆனால் அதற்கு அவன்/அவள் நான் யாரையும் காதல் செய்யவில்லை எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்கிறான் /ள் என்ன செய்வது என்று பல அப்பா அம்மாக்கள் என்னிடம் கண்ணீர் விடுகிறார்கள்.

நாங்கள் இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை ஆனால் எங்களுக்கு ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார் என்று தெரியவில்லை போகாத கோவில் இல்லை என்று என்னிடம் சொல்லுகிறார்கள். நாங்கள் செய்தா பரிகாரம் இல்லை என்று சொல்லுகிறார்கள். 

நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள் இப்பிறவியில் நீங்கள் தவறு செய்வதை இப்பிறவியில் அனுபவிப்பது என்பது குறைவாக தான் இருக்கும் உங்களின் முப்பிறவியில் செய்த வினைகள் பின் தொடரும் சோதிடம் என்பதே முற்பிறவியின் செய்த வினைக்கு இப்பிறவியில் என்ன பலன் என்று சொல்லுவது தான் நான் பூர்வ புண்ணியத்தை பற்றி நிறைய எழுதும் போதே என்னிடம் இந்த கேள்வியை பல பேர் கேட்டார்கள். ஏன் இந்த வீட்டிற்க்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறீர்கள். பூர்வபுண்ணியத்தில் இருந்து தான் அனைத்து வீட்டிற்க்கும் முன்வினை சப்ளை ஆகும் என்பதை மனதில் வையுங்கள்.

பரிகாரம் செய்யும் போது கூட பூர்வபுண்ணியாதிபதியை சாந்தபடுத்திதான் செய்ய வேண்டும் பல பேர் இதனை கவனிக்க தவறுகிறோம். முதலில் களத்திரபாவம் கெட்டால் திருமணத்தில் பிரச்சினை ஏற்படும். குரு,சுக்கிரன் போன்றவர்களின் நிலையும் வைத்து திருமணத்தை பார்க்க வேண்டும். இது கூட ஒரு சில நேரத்தில் இறங்கி திருமணத்தை நடத்தும் வாய்ப்பை உருவாக்கும்.

ஒரு ஜாதகத்தை எடுத்தால் அதில் ஒரே கட்டத்தில் மூன்று அல்லது நான்கு கிரகங்கள் உட்காரும் போது திருமண வாழ்வில் அதிகமாக விளையாடி விடும். இந்த மாதிரி அமைப்பு வரும்போது கடுமையான சந்நியாசி யோகத்தை கொடுத்துவிடும். திருமணத்தில் ஈடுபாடு வராது. இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்துவிடுவார்கள். அவர்கள் வேலை விசயமாக வெளியில் இருந்தாலும் வீட்டிற்க்கு வருவது என்பது அவர்களுக்கு பிடிக்காது. யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்புவார்கள்.

நீங்கள் வீட்டிற்க்கு கூப்பிட்டாலும் வேலை அதிகமாக இருக்கிறது அலுவலகத்தில் வேலை பளு காரணமாக வரமுடியாது அம்மா அடுத்த தடவை வருகிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்களை தவிர்ப்பார்கள். ஏன் என்றால் வீட்டிற்க்கு வந்தால் நீங்கள் தொந்தரவு செய்து திருமணத்தை நடத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறார்கள்.

இவர்களின் வாழ்க்கையை பற்றி சொல்லுகிறேன் பாருங்கள் இவர்கள் அதிகமான அறிவை அடைந்தவர்கள். இவர்கள் படிப்பிலும் கெட்டிகாரார்களாக இருந்து இருப்பார்கள் அதனால் ஒரு நல்ல நிலையில் இன்று இருக்கலாம். உலக விசயங்கள் மீது அதிக ஈடுபாடு இருந்து இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் யாராவது ஒருவரை காதல் செய்து இருப்பார்கள். காதலை வேண்டும் என்றே பிரச்சினையாக்கி பிரிவை ஏற்படுத்தி இருப்பார்கள். இதனை ஏற்படுத்தியது இவர்கள் கிடையாது இவர்களின் கிரகங்கள் அப்படி செய்து இருக்கின்றன ஏன் என்றால் அவர்களை எல்லாவிதத்திலும் அடிப்பட்டு சந்நியாசத்தை அடைய வேண்டும் என்று அப்படி செய்யும்.

ஒரு கிரகம் உங்களை தாக்குவது என்றாலும் அது உடனே வந்து உங்களை தாக்காது அதுக்கான வேலையை அது நீங்கள் பிறக்கும் போது இருந்தே ஆரம்பிக்கும் எல்லாவிதத்திலும் தயார்படுத்தி உங்களை தாக்கும். ஏன் மரணம் கூட அப்படி தான் நீங்கள் என்று பிறந்தீர்களோ அன்றே உங்களுக்கு நாள் குறித்து உங்களை கொல்ல வேலை ஆரம்பித்துவிடும். அதைபோல தான் இந்த நிலையும் அதாவது சந்நியாசியாக போக வேண்டும்..

இவர்கள் உலகத்தின் மீது அதிக சிந்தனை செயது கொண்டு இருப்பார்கள் சில பேருக்கு நரை முடி வருவது கூட அதிக சிந்தனை தான். இவர்கள் திருமண விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டதற்க்கு காரணம் நமக்கு வருபவள் அல்லது வருபவன் நம்மை மாதிரி இருப்பாரா அல்லது இருப்பாளா என்று நினைத்துக்கொண்டு திருமணத்தை தள்ளிபோடுவார்கள்.

இவன் ஏன் உலகத்தை பற்றி நினைக்க வேண்டும். எங்களை பற்றி நினைக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது இருந்த ஒரு சாமியாரையும் டிவியில் போட்டு காலி பண்ணிட்டானுவோ கிரகங்கள் ஏதாவது ஒரு புது சாமியபாரை உருவாக்க வேண்டும் கிரகங்களுக்கு உங்க பையன் உங்க பொண்ணு  தான் கிடைத்து இருக்கிறார்கள் என்ன செய்வது. கோபபட வேண்டாம் தெய்வங்களே இந்த பசங்க இப்படி தான் பண்ணுவானுங்க வழி சொல்லுகிறேன்.

மூன்று கிரகங்கள் ஒரு வீட்டில் இருக்கும் போது 30 வயதில் திருமணம் நடைபெறும் நான்கு கிரகங்கள் ஒரு வீட்டில் இருக்கும் போது 35 வயதில் திருமணம் நடைபெறும்.

நீங்கள் வரன் பார்க்கும் போது பணம் படிப்பு எல்லாத்தையும் விட்டு விட்டு நல்ல ஆன்மிகவாதியாக பாருங்கள். இவர்களின் தேடல்களுக்கு அது தான் நன்மை பயக்கும்.

பையனுக்கு பெண் பார்த்தால் பையனிடம் சொல்லும் போது பெண் மிக சிறந்த ஆன்மிகவாதி உலக விசயங்களின் மீது அக்கறை கொண்டவள் என்னுடன் பேசும் போது கூட நீங்கள் என்ன என்ன விரதம் இருக்கிறீர்கள் என்று கேட்டாள் டா என்று சொல்லுங்கள் பையன் அமெரிக்காவில் இருந்து அடுத்த பிளைட்டில் ஒடி வந்துவிடுவான்.

உங்கள் பெண்ணுக்கு வரன் பார்த்தால் பையன் சிறந்த சிவ பக்தன். கிரிவலம் மாதம் தோறும் செய்கிறான். பல வெப்சைட்களை படித்து நல்ல மந்திர ஞானம் உள்ளவன். சைவம் தான் சாப்பிடுவான் அப்படி என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் பெண் உடனே ஒத்துக்கொள்வாள்.

உண்மையான ஒரு விசயத்தை சொல்லுகிறேன் இவர்களுக்கு வரன் பார்க்கும் போது கண்டிப்பாக ஆன்மிகவாதியை தான் பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உங்கள் மகனை போல் இருப்பவர்கள் அதிகம் பார்வையிடுவது நம்ம சைட்டை தான் அவர்களின் தீனிக்கு இந்த சைட் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது என்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை. உண்மையை சொல்லுகிறேன். என்னை நாடி வரும் இளைஞர்கள் நீங்கள் சந்நியாசத்திற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் நானே ஆசாமி நான் எங்கே போய் சாமியாருக்கு பயிற்சி கொடுப்பது.அவர்களுக்கு நல்ல புத்திமதி சொல்லி அனுப்புகிறேன். 

பிரம்மசாரியாக இருந்து உலக வாழ்வில் இருந்து விடுபடுவது ரொம்ப ரொம்ப கடினமான ஒன்று அதை நான் பல சாமியார்களிடம் இருந்து கற்ற விசயம். எவன் ஒருவன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஆன்மிகத்தில் நுழைகிறானோ அவன் எளிதில் இறைவனை அடைந்துவிடலாம். இந்த விசயம் தெரியாமல் இருக்கிறார்கள் ஆன்மிக அனுபவத்தில் இந்த மேட்டரை சொல்லி அனுப்பிவிடுகிறேன். நல்ல ஆன்மிக வரனாக பார்த்து திருமணத்தை நடத்தி வையுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.