Followers

Monday, December 31, 2012

நன்றி



வணக்கம் நண்பர்களே !

நேற்று பதிவு எழுதவில்லை காரணம் மந்திர அனுபவங்களை பெறுவதற்க்கு நேரில் வரச்சொல்லிருந்தேன். அவர்களை சந்தித்ததால் எழுதமுடியவில்லை நேற்று மட்டும் என்னை சென்னையிருந்து ஏழு நபர்களை சந்தித்து பேசினேன். இது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் தான் ஏன் என்றால் நான் நினைத்தது யாராவது ஒருவர் அல்லது இருவர் வரலாம் என்று எதிர்பார்த்தேன் எதிர்பார்த்ததை விட அதிகமாகதான் வந்தார்கள்.

அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏற்பாடு செய்து தருகிறேன். அனைவரும் புதுவருட கொண்டாங்களில் ஈடுபட காத்துக்கொண்டு இருப்பீர்கள். குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்கபோவதில்லை அதனால் குறைத்து குடியுங்கள்.

நான் சென்னையில் இருப்பதால் கடந்த ஒரு வார காலமாக பார்ட்டி என்று அழைந்துக்கொண்டு தான் இருக்கிறேன். பல பார்ட்டிகள் நான் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் நடந்ததால் அனைத்தையும் விடாமல் கலந்துக்கொண்டேன்.அனைத்து பார்ட்டியிலும் மது என்பது தவறாமல் இருந்தது. அனைத்து பார்ட்டியிலும் நான் ஒருவன் தான் குடிக்காமல் இருந்திருப்பேன். குடிப்பது என்பது மனிதனின் அடிப்படை தேவை மாதிரி கொண்டுவந்து விட்டார்கள். 

அனைத்து பார்ட்டிலும் தவறாமல் கலந்துகொண்டதான் காரணம் அனைத்து பேர்களும் என்னிடம் நெருங்கி பழகியவர்கள். அவர்களின் அன்பு தொல்லையால் தவிர்க்க முடியவில்லை கலந்து கொண்டேன். இன்றும் நிறைய நபர்கள் டிக்கெட்களை அனுப்புகிறேன் வாருங்கள் என்று சொன்னார்கள் ஆனால் நான் போகவில்லை. ஏன் என்றால் சாதாரண மனிதன் பாதி மனிதனாக இருப்பான் இந்த கூட்டத்தில் நாம் போய் என்ன செய்யபோகிறோம். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

2013 வருடம் சோதிடப்படி கிரகநிலைகளைப் பார்த்தால் கெடுதல் தான் அதிகம் நடக்கும் என்று தோன்றுகிறது. ஒரு கிரகமும் நல்ல நிலையில் இருக்கபோவதில்லை. அனைவரும் கடவுளிடம் நன்றாக பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள். எப்பொழுதும் சனியும் செவ்வாயும் பார்த்துக்கொள்ளும் காலங்களில் தான் பிரச்சினை வெடிக்கும் ஆனால் இந்த வருடம் கேது மேஷத்தில் இருந்து சனியை பார்க்கிறது. கேது அமரும் இடத்தின் பலனை தரவேண்டும் என்ற நியதியால் செவ்வாயின் பலனை அப்படியே கொடுத்துவிடும். சனி துலாத்தில் இருந்து கேதுவை பார்ப்பதால் அதுவும் பிரச்சினை தான் குருவும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். சோதிடம் தெரியாதவன் கூட சொல்லிவிடுவான் கிரகநிலைகள் சரியில்லை என்று அதனால் கடவுளை பிராத்திப்பது நல்லது. 

2012 வருடத்தில் என்னால் முடிந்தளவுக்கு உங்களுக்கு பதிவுகள் தந்தேன். 2013 வருடம் நிறைய பதிவுகளை கொடுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன். அங்காளபரமேஸ்வரி அருளுடன் உங்களை சந்திக்கிறேன்.

அமைதியாக புத்தாண்டை கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, December 29, 2012

சக்தி மயம்



வணக்கம் நண்பர்களே!

                    இன்றைய தேதி வரைக்கும் எனக்கு வந்த மந்திர பயிற்சி மெயில்களில் 75 சதவீதம் பெண்களிடம் இருந்து வந்துள்ளது. நான் முதலில் நினைத்து இருந்தேன். பெண்களுக்கு சொல்லிதருவது முடியாத காரியம் என்று நினைத்து வைத்திருந்தேன். இப்பொழுது அதனை மாற்றி இவர்களுக்கும் கற்று கொடுத்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். 

ஆண்களை விட பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறிவிட்டார்கள் ஆனால் ஆன்மீகத்தில் அந்தளவுக்கு வரவில்லை என்று நினைத்தது தவறு. எனக்கு வரும் மெயில்களில் இருந்து தெரிகிறது ஆன்மீகத்திலும் உச்சத்தை தொட்டுவிடுவார்கள். 

பெண்களை ஏன் ஆன்மீகத்தில் ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று நினைத்த போதுபண்டைகாலங்களில் வேட்டை தான் தொழிலாக இருந்து வந்தது. அப்பொழுது ஆண் பெண் இருவரும் வேட்டையாட சென்று இருப்பார்கள். இவர்களை கண்டு மிருகங்கள் தாக்கி இருக்கும் அப்பொழுது நினைத்து இருப்பார்கள்.

ஏன் நாம் பதுங்கி தானே வேட்டையாடிகிறோம் எப்படி நம்மை தாக்கிறது என்று யோசித்தபோது அந்த பெண்னக்கு அந்த நேரத்தில் மாதாந்திர நாள் வந்து இருக்கும். இவள் உடலில் இருந்து இரத்தம் வரவும் போது இவர்கள் பதுங்கி வேட்டையாடினாலும் இவர்களின் இரத்த வாடையை பார்த்து விலங்குகள் தாக்கி இருக்கும். அதனை தெரியாமல் பெண்கள் வந்தால் வேட்டையாட முடியாது என்று நினைத்து ஒதுக்கி இருக்கார்கள் அது அப்படியே தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதனை ஆன்மீகவிசயத்திலும் பார்க்க ஆரம்பித்து இருப்பார்கள். அந்த காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் காடுகளில் தான் இருந்து இருக்கிறது.  இது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்

பெண்களை முதலில் ஒதுக்கி வைத்தது ஆதிமனிதனாக தான் இருக்கும். ஏன் இப்பொழுது ஒதுக்க வேண்டும் அது தான் தெரிந்துவிட்டதே அவர்களுக்கும் அனைத்தும் கொடுத்துவிடவேண்டியது தான். எந்த கடவுள் புத்தி கொடுத்தாரே தெரியவில்லை எதைச்சயாக நான் முதலில் ஒரு பெண்ணுக்கு தான் கொடுத்தேன். இல்லை என்றால் இந்த விசயத்தில் கர்மவினை என்ன பிடித்துக்கொண்டு இருக்கும்.

உலகே சக்தி மயம் அந்த சக்திதான். அனைவரும் சக்தியின் குழந்தைகள் தான் என்று நினைத்து சரிசமமாக கொடுத்துவிடவேண்டியது தான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஆன்மீக அனுபவங்கள் 42



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வ புண்ணியப்பகுதியில் ஆத்மாவின் தாகத்தைப்பற்றி எழுதினேம். அதனை மந்திர அனுபவங்களோடு சேர்ந்து இப்பதிவுகளில் பார்க்கலாம் 

மந்திர அனுபவங்களை கொடுப்பதற்க்கு நான் உங்களை தேர்ந்தெடுக்கும் போதே உங்களின் ஜாதகத்தை அனுப்ப சொல்லிருந்தேன். நேரிலும் வர சொன்னதும் உங்களை பார்த்து என்ன செய்யலாம் என்று பார்க்க தான். 

மந்திரங்களை கொடுத்து நீங்கள் செய்யும் போது உங்களின் ஆத்மாவின் தாகத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடும் உங்களின் முற்பிறவி தாகம் நன்றாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை அப்படி இல்லாமல் வில்லங்கமாக இருந்தால் என்ன செய்வது அதற்கு தான் நான் உங்களை கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொன்னது.

இப்பொழுது என்னை தொடர்புக்கொண்டுள்ள முக்கால்வாசி நண்பர்கள் அனைவரும் பெங்களுரில் வேலை செய்கிறவர்களா இருக்கிறார்கள் அவர்கள் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது எங்களுக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்கிறார்கள். வாரம் ஒரு முறை சென்னை வருகிறேன் என்று சொல்லுகிறார்கள் .

என்னை பொருத்தவரை செலவு செய்யாமல் இதனை நீங்கள் செய்யவேண்டும் என்று நினைப்பவன். நீங்கள் சென்னை வந்து செல்லும் செலவு அதிகமாகும் அதனை நினைத்தால் எனக்கு கவலை ஏற்படுகிறது.

அவர்களுக்காக ஏற்பாடு மற்றும் நமது வெளியூர் நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மாதத்திற்க்கு இரண்டு முறை என்னை வந்து பார்த்தால் போதும் என்று முடிவு எடுத்துக்கொண்டு அதற்க்கான வழிமுறையை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

நான் முதலில் இதனை அடுத்தவர்களுக்கு கற்றுதரும் என்று நினைக்கும்போது  ஆத்மாவின் தாகத்தை தீர்ப்பதற்க்கு என்ன வழி இருக்கிறது என்று ஆராய்ந்து தான் செய்தேன். 

இந்த மந்திரங்களை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு நன்றாக தூக்கத்தை கொடுத்துவிடும். நன்றாக தூங்கலாம். இதனை ஏன் செய்தேன் என்றால் பல வழிகளிலும் தாகம் ஏற்பட்டு வந்த ஆத்மாவிற்க்கு நன்றாக ஒய்வுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இதனை செய்து இருக்கிறேன். நன்றாக ஒய்வுக்கு பிறகு தான் அனைத்தும் கிடைக்கும் படி செய்து இருக்கிறோம். இதற்கு மேல் இதன் ரகசியங்களை அனுபவத்தில் உணர்ந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கர்மத்தை தொலைப்பதற்க்கான வழிகளை இதில் செய்து இருக்கிறேன் அதனால் தான் என்னவோ இதனை கற்கவருபவர்களுக்கு ஏகாபட்ட தடங்கல் ஏற்படுகின்றன.  நான் முதலில் கொடுக்கநினைத்தவர் இன்று வரை செய்யமுடியவில்லை என்றால் பாருங்கள்.

நான் முதலில் அனைவரிடமும் சொன்னது அனைத்தையும் கற்றுவிட்டு எதுவும் நடைபெறவில்லை என்றால் வாருங்கள் என்று சொல்லிருந்தேன். 

கர்மத்தை தொலைத்துவிட்டால் நாம் சாமியார் ஆகிவிடுவோம் என்று கவலைக்கொள்ள தேவையில்லை இதனை செய்து கொண்டு இல்லறத்தில் இருக்கலாம். அனைத்து கர்மமும் தொலையாது. எந்த கட்டுப்பாடும் இதற்கு கிடையாது. 

எனக்கும் எனது குருநாதருக்கும் சிறு வேறுபாடு உள்ளது அவர் எதனையும் அவ்வளவு எளிதில் கற்றுதரமாட்டார். ஏன் என்று கேட்டால் யார் யாருக்கு என்ன கிடைக்கும் என்று விதி இருக்கிறதோ அவன் என்னை தேடி வருவான் டா என்பார். அவ்வளவு எளிதில் அவரிடம் இருப்பதை சொல்லமாட்டார். அவர் மந்திரத்தை கொடுத்து 108 நாட்கள் வரை நன்றாக சோதிப்பார். அந்த 108 நாட்கள் அவர்கள் ஒழங்காக செய்துவிட்டால் அதன் பிறகு அனைத்தையும் கற்றுகொடுப்பார். யாரையும் இதனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கமாட்டார்.

நான் யாரையாவது பார்த்தால் இதனைப்பற்றி சொல்லி இதனை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லுவேன். அவர்களை கடைசி வரை விடாமல் இதனை செய் அப்படி என்று என்னால் முடிந்தளவுக்கு கீழ் இறங்கி சொல்லுவேன். அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை என்று விடாமல் சொல்லுவேன்.  ஏன் அப்படி செய்கிறேன் என்றால் அடுத்தவரைப்பற்றி அதிகம் தெரிவதால் இதனை சொல்லுகிறேன். உங்களின் கர்மா இதனை தடுக்கும் நீங்கள் மீறி வரவேண்டும். 

உங்களுக்கு குரு நான் கிடையாது நான் உங்களையும் உங்கள் குருநாதரையும் இணைக்கிறேன் அதனை தவிர எனக்கு ஒன்றும் கிடையாது. நீங்கள் ஏன் என்னை வந்து பார்க்கவேண்டும் என்றால் நான் அறிமுகப்படுத்தும் நபர் அனைவரும் சாமியார்கள் நீங்கள் ஒரே ஈர்ப்பு ஏற்பட்டு நீங்கள் சந்நியாசியாக மாறிவிடகூடாது என்பதால் என்னை சந்தியுங்கள் என்று சொல்லுகிறேன். 

நீங்கள் சந்நியாசியாக மாறுவதற்க்கு விருப்பம் இருந்தால் மூன்றே நாட்களில் உங்களை சந்நியாசியாக மாற்றிவிடுவார்கள். எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் சந்நியாசி தீட்சை பெற்று இருக்கிறார்கள்.

சந்நியாசியாக மாறாமல் அனைத்தையும் கற்று அனுபத்தை உணரவேண்டும் என்றால் என்னுடன் சென்னையில் இருந்துவிடவேண்டியது உங்களின் வேலை. நான் அறிந்து வைத்திருக்கும் அனுபவங்கள் கொஞ்சம் அல்ல என்னுடன் பத்து வருடங்கள் இருந்தாலும் கற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இருக்கிறது. பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை நீங்கள் ஆவலுடன் வந்து தெரிந்துகொள்வீர்கள் என்பதால் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




பூர்வ புண்ணியம் 5



வணக்கம் நண்பர்களே!
                                ஆத்மாக்களின் ஏக்கங்கள் தாகங்கள் மற்றும் அதனுள் படிந்துள்ள ஆசைகள் வெறிகள் என்ன என்று பார்த்தோம் அதனைப்பற்றி விரிவாக இந்து மதசடங்களில் இருந்தும் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆத்மாவிற்க்கும் பிறவிகளின் வாசனை உள்ளது. ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த கடைசி நேரத்தில் அவரின் உயிர் அந்த உடம்பு மேல் பாசம் கொண்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராடும். கடைசியில் அந்த உயிரை காப்பாற்றிக்கொள்ளமுடியவில்லை என்றால் இந்த ஆத்மா மிகவும் வெறிக்கொண்ட ஆத்மாவாக மாறிவிடும். இந்த ஆத்மாவிற்க்கு எப்படா உடம்பு கிடைக்கும் என்ற வெறியில் தான் இருக்கும்.

கடைசி நேரத்தில் அந்த ஆத்மா உடம்பின் மேல் பற்றுக்கொண்டு உடம்பை விடுவதால் அந்த வெறி இருக்கிறது. இதே போல் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்க்கும் கதி இது தான். அந்த ஆத்மா உடனே பிறப்பை எடுத்துவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை. பிறப்பை எடுக்கவில்லை என்றால் கஷ்டம் தான்.

நமது ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை சுடுகாட்டிற்க்கு எடுத்துச்செல்வார்கள் அப்படி எடுத்து செல்லும் உடலை பார்த்தீர்கள் என்றால் வீட்டிலிருந்து எடுக்கும்போது அந்த உடலின் தலை வீட்டை பார்த்துக்கொண்டு செல்லும் அதன் பிறகு ஒரு முச்சந்தியில் வைத்து அந்த உடலை சுற்றிவிட்டு சுடுகாட்டை பார்ப்பது போல் எடுத்துச்செல்வார்கள் இது ஏன் என்றால் அந்த முச்சந்தியில் அந்த ஆத்மாவை நிறுத்துவதற்க்காக இந்த சடங்கு செய்வார்கள்.

உடலை எரியூட்டப்படலாம் அதை அந்த ஆத்மா பார்க்ககூடாது அப்படி பார்த்தால் அந்த ஆத்மா கதறிவிடும் என்பார்கள். ஆத்மாவிற்க்கு வெறி ஏற்படக்கூடாது என்பதால் இந்த சடங்கு செய்து முச்சந்தியில் நிற்பாட்டுவது வழக்கம். இது எல்லாம் காலம் தொட்டு செய்து வருகின்றார்கள். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆத்மாவிற்க்கு அழிவு இல்லை என்பதை விளக்குவதற்க்காகதான் இது போதும் என்று நினைக்கிறேன். ஏகாபட்டதை எழுதி உங்களை பயப்படவைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். கூடுதல் தகவல் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

முற்பிறவியின் வாசனைகளை தீர்ப்பதற்க்காக ஆத்மா பிறப்பு எடுக்கிறது. அனைத்து வாசனைகளும் இந்த பிறவியிலேயே தீர்ந்துவிடும் என்றால் கண்டிப்பாக கிடையாது. அந்த அந்த கர்மாவிற்க்கு தகுந்தமாதிரி தீரும். இத்தனை வாசனைகளையும் இந்த ஆத்மா அடையும்போது மட்டுமே அது கடவுளின் திருவடியில் சரணடையும்.

கடவுளின் திருவடி

                  கடவுளை நோக்கி உங்களை திருப்பவேண்டும் என்றால் முற்பிறவி வாசனைகளை குறைக்கவேண்டும். அது எப்படி முடியும். முற்பிறவியில் எப்படி இருந்தோம் என்று எனக்கு எப்படி தெரியும் என்று கேட்கலாம். உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீடு என்று உள்ளது அல்லவா அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டியது தான். 

முற்பிறவியின் வாசனைகளை தீர்த்தால் மட்டுமே அது சாந்தப்படும். அப்படி தீர்க்காமல் சர்க்கரையை கொடுத்தாலும் வாந்தி எடுத்துவிடும் என்பது உண்மை. இன்றைக்கு இருக்கும் நவீன ஆன்மீகம் ஆத்மாவின் வாசனைகளில் தோற்கிறது என்பது மட்டுமே உண்மை. 

நீங்கள் யோகா தியானம் மந்திரம் எதையும் கற்கலாம் ஆத்மாவின் தவிப்பை தீர்த்தால் தான் உங்களுக்கு அனைத்தும் கைகூடும் அப்படி இல்லை என்றால் சமயம் கிடைக்கும் போது அது வெளிப்பட்டுவிடும். நீங்கள் அசிங்கப்பட்டு நிற்பீர்கள். ஆத்மாவின் வாசனைக்கும் ஆன்மீகத்திற்க்கும் போட்டி தான் நடைபெறுகிறது. ஆத்மாவின் வாசனைகளை தீர்க்காத ஆன்மீகம் தோற்று வெட்கப்பட்டு நிற்கிறது என்பது வெளிச்சொல்லப்படாத உண்மை. 

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் உங்களின் மனதினை மெஸ்மரிசம் செய்கிறார்களே தவிர உண்மையான ஆன்மீகத்திற்க்கு வழி காட்டவில்லை என்று தான் சொல்லவேண்டும். உங்களை பார்த்து அன்பு குழந்தைகளே என்று பாதி ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் நம்மீது சாமிக்கு இவ்வளவு பாசமா என்று நினைத்து அவருக்கு அடிமையாகிவிடுவீர்கள். நம்ம அம்மா அப்பா கூட இப்படி கூப்பிடவில்லை என்று மனது நினைக்க தோன்றும்.

என்றைக்காவது நமது பெற்றோர்கள் இப்படி கூப்பிட்டு இருக்கிறார்களா கடவுள் தாண்ட இப்படி கூப்பிடுவார் இவர் பூமியில் தோன்றிய கல்கி அவதாரம் டா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு காலம் பூராவும் இவருக்கு நாம் தொண்டு செய்து நமது கர்மத்தை தொலைக்கவேண்டும் டா என்று சொல்வீர்கள். சாமி அவருடைய கர்மத்தை தொலைக்கவே படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாது.

ஒரு சாமியரை வைத்து நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ஓகோ ஆகா என்று சொல்லிக்கொண்டு அவரின் சீடர் என்று பெயரை சொன்னாலே போதும் என்ற நிலை இருந்தது அவரின் கர்மா என்ன செய்தது டிவியில் படம் போட விட்டது.  பின்னாடி போனவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆன்மீகத்தில் கர்மாவின் தாகத்தை தீர்க்காமல் செய்கின்ற எந்த செயலும் முழுமை பெறாது.

இதன் தொடர்ச்சி ஆன்மீக அனுபவங்களில் வரும். மந்திரத்திற்க்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று அதில் தருகிறேன். வழக்கம்போல் பூர்வபுண்ணியம் தொடர் ஐந்தாவது வீட்டை வைத்து சோதிடமாக பதிவு வரும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, December 28, 2012

பூர்வபுண்ணியம் 3



வணக்கம் நண்பர்களே !
                                         இப்பதிவில் பூர்வ புண்ணியம் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் சேர்ந்து கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது அதனால் அனைவரும் இப்பதிவை படித்துவிடுங்கள். 

நான் ஆன்மீக அனுபவங்களை எழுதியவுடன் அதில் இருந்து பல நண்பர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு ஆன்மீக அனுபவங்களை பெறுவதற்க்கு கேட்டு வருகிறார்கள். அவர்களை சந்திப்பதாகவும் சொல்லியுள்ளேன். இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டவுடன் பல பேர் வெளியூரில் இருந்து தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்டார்கள். ஏன் நீங்கள் பாரபட்சம் காட்டுகிறீர்கள் எங்களையும் சந்தியுங்கள் என்று கேட்டார்கள். அனைவரையும் சந்திக்கலாம் எனக்கு ஒன்றும் பெரிய கஷ்டம் ஒன்றும் கிடையாது.

நீங்கள் சென்னை வருவதற்க்கு செலவுகள் ஆகும் அப்படி செலவு செய்து என்னை பார்த்து உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் உங்களின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதை நான் அறிவேன் அதனால் உங்களின் ஊர் பக்கம் வரும்போது என்னை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். என்னை சந்திப்பவர்களுக்கு எப்படியாவது ஒரு வழியை ஏற்படுத்தி தருகிறேன் என்ன கொஞ்ச காலம் ஆகும். யாரையும் ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது.

எனது பார்வையில் நீங்கள் இருக்கவேண்டும் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களின் உடலில் பலபிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் சேர்த்து வைத்திருக்கிறது உங்களின் ஆத்மா இந்த பிறவியில் ஏற்பட்ட அனுபவங்களும் சேர்ந்து இருக்கிறது. இதை ஆன்மீகத்தில் இருப்பவர்களை கேட்டால் சரியாக சொல்லுவார்கள்.

இதை நீங்களே பார்க்கலாம் எப்படி என்றால் உங்களுக்கும் உங்கள் சகோதர்களுக்கும் எந்த நேரமும் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அல்லது உங்களின் தந்தையுடன் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் எந்த வித காரணமும் இருக்காது. சிலருக்கு அம்மாவை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. சம்பந்தமே இல்லாமல் ஒரே பயமாக இருக்கும். எதற்காக பயப்படுகிறோம் என்று தெரியாது. 

ஒரு சிலருக்கு அடுத்தவர்களை கண்டால் ஏதாவது ஒரு சண்டையாது போட வேண்டும் என்று எண்ணம் ஏற்படும் அவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.  சிலருக்கு தன் மனைவியை பார்த்தால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சிலரை பார்த்தால் அவ்வளவு அழகாக இருப்பான் அவன் அழகே இல்லாத ஒரு பெண்ணை விரும்பிக்கொண்டு இருப்பான். இப்படி பலவிதம் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது பின்பு எப்படி இது எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பிறவி ஏற்பட்ட அனுபவங்கள் இப்பிறவியில் ஏற்படுகிறது. நீங்கள் முன்பிறவியில் ஒருவரை காதலித்து தோற்றால் அவரை இப்பிறவியிலும் உங்கள் ஆத்மா தேடுகிறது. 

ஒவ்வொரு ஆத்மாவிலும் பலவித ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், வெறிகள் இருக்கின்றன. இது அனைத்தும் உங்களிடம் சேமித்து வைத்திருக்கிறது.  இதனை சமயம் வரும்போது அது வெளிப்படும். நீங்கள் முற்பிறவியில் பணத்திற்க்காக ஆசைபட்டுக்கொண்டு கடைசிவரை அது கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இப்பிறவியில் பணத்தின் மீது வெறியாக இருப்பீர்கள். நீங்கள் முற்பிறவியில் கொலை செய்ப்பட்டு இறந்தால் அவரை பழிவாங்க இப்பிறவியிலும் உங்கள் எண்ணம் துடிக்கசெய்யும். அவரைப்பற்றி உங்களின் அறிவுக்கு தெரியாது ஆனால் பலி வாங்கவேண்டும் என்ற எண்ணம் அவரை பார்க்கும்போது ஏற்படும்.

என்னிடம் வரும் நபர்கள் சொல்லுவார்கள் நான் தவறு செய்துவிட்டேன். என்னை கடவுள் மன்னிப்பாரா நான் இதற்கு தகுதியானவான என்று கேட்பார்கள். நீ ஏங்கே தவறு செய்தாய் உன்னை ஆட்டிவைப்பவன் தானே அவ்வாறு செய்யவைத்தான் என்று நினைத்து பரவாயில்லை நீ தகுதியானவன் தான் என்று சொல்லுவேன்.

இப்பொழுது உள்ள இளைஞர்கள் தவறு ஏதாவது செய்துவிட்டு அதனைப்பற்றி கவலை அடைகிறார்கள். என்னை தொடர்பு கொள்ளும் பெண்களும் இப்படி தான் சொல்லுகிறார்கள் நான் தவறு செய்துவிட்டேன் நான் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியுமா என் மனசாட்சி உறுத்துகிறது என்று சொல்லுவார்கள்.

நான் ஒன்று சொல்லுகிறேன் கடவுள் உங்களை காப்பதற்க்கு அண்ணனாக வருவான். தம்பியாக வருவான் சகோதரியாக வருவான் தந்தையாக வருவான் தாயாக வருவான் உங்களின் துணைவராக வருவான் ஏன் உலகில் உள்ள அனைத்து பொருளாக வருவான் ஆனால் உங்களை அழிப்பதற்க்கு கடவுள் எடுக்கும் ஒரே அவதாரம் மனசாட்சியாக வருவான். மனசாட்சி மட்டுமே உங்களை அழிக்கும். இந்த அவதாரத்தில் இருந்து ஒருவனும் தப்பிக்கமுடியாது. 

கண்டிப்பாக நீங்கள் தவறு செய்யவில்லை உங்களை ஒரு கருவியாக பயன்படுத்தபட்டுவிட்டது என்பது தான் உண்மை. உங்களின் உடலை ஒரு கருவியாக பயன்படுத்தி செய்துவிட்டது உங்களின் ஆத்மா. ஆத்மாவை யார் இயக்கினார்கள் அதற்கு இதனை செய்ய சொன்னவர் யார் என்று பார்த்தால் நாம சோதிடத்தை படித்துக்கொண்டு இருக்கிறோமே அந்த கிரகங்கள் தான் இயக்கியது. 

நமது மனசாட்சியை தூண்டிவிடுவதில் முக்கியபங்கு கிரகங்களை சாரும். மனக்காரகன் சந்திரனை அனைத்து கிரகங்களும் தூண்டிவிடும் அப்படி தூண்டும்போது உங்களுக்கு உங்களை அறியாமலே அந்த செயலை செய்ய ஆரம்பிப்பீர்கள். இப்படி தான் நீங்கள் மாட்டிக்கொள்ளுவது சந்திரனை தூண்டிவிடுவதில் சனி, ராகு, கேது மூன்றாம் வீட்டு அதிபதி, ஆறாம் வீட்டு அதிபதி, எட்டாம் வீட்டு அதிபதி மற்றும் பனிரெண்டாம் வீட்டு அதிபதிகள் செய்வார்கள் இவர்கள் அனைவரும் கெடுதல் செயலை செய்ய சொல்லுபவர்கள் நல்ல செயலை மீதம் உள்ள கிரகங்கள் மற்றும் வீடுகள் செய்யும்.

உங்களின் ஆத்மாவில் உள்ள வாசனைகளை தூண்ட செய்வது தான் இந்த கிரகங்களின் முக்கிய பங்கு. நீங்கள் எப்பேர்பட்ட தவறு செய்தாலும் என்னை பொறுத்தவரை அது தவறு இல்லை என்று தான் சொல்லுவேன். சட்டங்களுக்கு அந்த செயல் தவறாக தெரியலாம். ஆனால் மனிதன் செய்வது அந்த ஆத்மாவின் ஏக்கத்தை தீர்த்தது அவ்வளவு தான். மது விற்பது தவறு என்று அரசாங்கம் சொல்லியது அதையே அரசாங்கம் செய்தால் தவறு இல்லை என்று ஆகிவிட்டது. தவறை பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது. நாம் ஆடையுடன் திரிகிறோம். காட்டுவாசி ஆடையில்லாமல் திரிகிறார்கள் .அவர்கள் நம்மை பார்க்கும் போது அவர்களின் கண்களுக்கு நாம் தவறு செய்கிறார்கள் என்று தான் தெரியும். 

இதற்கும் மந்திரஅனுபவங்களை பெறுவதற்க்கும் என்ன தொடர்பு?

பொறுமை தேவை அடுத்த பதிவில் எழுதுகிறேன். ஆவலுடன் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



Thursday, December 27, 2012

அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே!

நமது ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு அதில் உள்ள மந்திர அனுபவங்களை பெற பல நண்பர்கள் தொடர்ந்து என்னை தொடர்புக்கொண்டு வருகிறார்கள் இப்பொழுது அவர்கள் அனுப்பிய ஜாதகத்தை பார்த்துக்கொண்டு வருகிறேன். 

என்னிடம் மந்திரஅனுபவங்களை பெறுபவர்களுக்கு தனியான பதிவு தளம் உருவாக்கப்பட்டு வருகிறது அதில் நான் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே படிக்கமுடியும். அதிகபட்சமாக மந்திரஅனுபவங்கள் பெறுபவர்களுக்கு முதல் படியாக அந்த தளம் அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

புதிய தளத்தின் பெயர் ஆன்மீக அனுபவங்கள் என்று இருக்கும். அதை படிப்பவர்களுக்கு வேறு ஆன்மீக பயிற்சி என்பதே தேவையில்லை அந்தளவுக்கு உங்களின் மனதிற்க்கு தாலாட்டு போல் அமையும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. நீங்கள் நினைக்கலாம் என்ன வேறு பதிவு எழுதுகிறார் இதில் எழுதமாட்டாரோ என்று நினைக்கலாம் வழக்கம்போல் ஆன்மீக அனுபவங்கள் இதில் வந்துக்கொண்டே இருக்கும். ஆன்மீகத்தின் அடுத்தநிலை புதிய பதிவு தளத்தில் இருக்கும்.

30-12-2012 ஞாயிறு அன்று மந்திர அனுபவங்களுக்கு ஜாதகத்தை அனுப்பியவர்களை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். குருநாதர் சென்னையில் தற்பொழுது இல்லை என்பதால் அவரை சந்திக்கமுடியாது. என்னை மட்டும் சந்திக்கலாம். உங்களை பார்த்தபிறகு தான் என்னால் முடிவு செய்யமுடியும் அதனால் பார்த்தால் உடனே கொடுத்துவிடுவார் என்று நினைக்கவேண்டாம். சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்னை தொடர்புக்கொண்டுவிட்டு வாருங்கள்.  வெளியூரில் இருப்பவர்கள் வரவேண்டாம் உங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்கிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 41



வணக்கம் நண்பர்களே !
                                 ஆன்மீக அனுபவத்தில் ஒரு நல்ல கருத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

நமது நண்பர்கள் என்னிடம் வந்து பேசும் போது சொல்வார்கள் சார் எனக்கு அம்மன் தரிசனம் கொடுத்தது சிவன் எனக்கு தரிசனம் கொடுத்தார். பெருமாள் எனக்கு தரிசனம் கொடுத்தார் என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்லுவார்கள் அப்படியா பரவாயில்லையே நீங்கள் புண்ணியவான் தான் எனக்கு மட்டும் அப்படி தரிசனம் கொடுக்க மாட்டிங்கிறார்கள் எப்படி சாத்தியம் என்று கேட்டேன்.

நானும் என்ன என்னமோ செய்து பார்க்கிறேன் ஒருவர் கூட என்னை வந்து பார்க்க வருவதில்லை எப்படி உங்களை வந்து சந்தித்தார் எப்படி உங்களை ஆசீர்வதித்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்பேன். நாங்கள் மனதில் அவரை நினைத்து காலையில் பூஜை செய்வோம். இரவி்ல் எங்கள் கனவில் வந்து எங்களை அவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்வார்கள். 

இப்பொழுது வெளிஉலகில் என்ன நடக்கிறது என்றால் கற்பழிப்பு சீசன். உள்உலகில் என்ன சீசன் என்றால் சித்தர்கள் தரிசனம் நடக்கிறது. அட நாமும் ஆன்மீக அனுபவங்கள் எல்லாம் எழுதுகிறோம் நாமும் இவர்களை தரிசித்தால் ஏதாவது பதிவுகள் எழுதலாம் என்று பல வழிகளை செய்து பார்த்தேன். ஒன்றும் நடைபெறவில்லை எனக்கு ஒரு சந்தேகம் கிளம்பஆரம்பித்துவிட்டது என்னடா நம்ம அதிகமாக கர்மம் செய்து இருக்கிறோமோ அதனால் நமக்கு கிடைக்கவில்லையோ என்று மனதில் ஒரு கவலை. மோசமான ஆட்களுக்கு கூட தரிசனம் தருவார்கள் என்று சொன்னார்களே அப்ப மோசமானவர்களைவிட நாம மோசமாக இருக்கிறோமா நமக்கு ஏன் தரமாட்டேன்கிறார் என்று மனதில் கவலை கூடியது.

சரி நமக்கு தான் குரு இருக்கிறாரே அவரிடமே இதனை கேட்டுவிடலாம் என்று கேட்டால் அவர் நான் சந்நியாசியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது இதுவரை சித்தர்களை பார்த்ததில்லை என்று சொன்னார்.

என்னடா இது இவருக்கு சித்தரைப் பற்றி தெரியவில்லை நமக்கு தான் நிறைய சாமியார்களை தெரியுமே அவர்களிடம் இதனைப்பற்றி கேட்கலாம் என்று பல சாமியார்களை தொடர்புக்கொண்டு கேட்டேன். அவர்கள் என்னிடம் எங்களுக்கு தெரிவதில்லை அவர்கள் பெயர்களை சொல்லு பார்க்கலாம் என்று கேட்டார்கள் நான் பெயர்களை சொன்னேன் அவர்கள் சொன்னார்கள் அவர்கள் எல்லாம் எங்களுக்கு தெரியமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்டேன்.அவர்கள் சொன்னார்கள் எப்படிடா தெரிவார்கள் நாங்கள் வடநாட்டு சாமியார்கள் அவர்கள் தமிழ்நாட்டு சாமியார்கள் இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளுவது கஷ்டம் மொழி பிரச்சினை. எப்படி எங்களுக்கு தெரிவார்கள் என்று கேட்டார்கள். 

போச்சுடா என்ன செய்வது இருந்த ஒரு நம்பிக்கையும் போய்வி்ட்டது. நான் இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் விடவில்லை நான் தமிழன் தான். தமிழர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன் நமது தேடுதல் தான் சரியில்லை என்று நினைக்கிறேன் அதனால் பல பயிற்சியை இன்றும் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்ன ஒன்று எனக்கு நேரில் வரவேண்டும். சாமியாக இருந்தாலும் சரி சித்தர்களாக இருந்தாலும் சரி பகலில் அல்லது இரவில் நான் விழித்துக்கொண்டு இருக்கும்போது வரவேண்டும் என்று நினைப்பவன் அப்படி இல்லை என்றால் நம்பமாட்டேன்.

கனவில் வருவது நான் நம்புவது கிடையாது. ஏன் என்றால் ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ அந்த உருவம் அவன் கனவில் வரும் என்று மேலைநாட்டில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அறிந்து சொல்லிவிட்டார்கள். 

எப்படி என்றால் நானும் எனது நண்பரும் ஒரே அறையில் தங்கியுள்ளோம் இரவு 1 மணி இருக்கும் எனது நண்பர் சமந்தா வந்துவிட்டுடா என்று சத்தம் போட்டு கதவை திறடா என்று சொன்னான் என்னடா இப்படி சொல்லுகிறானே  ஏதோ பகலில் படம் பார்த்து இருப்பான் போல என்று நினைத்த டேய் படுடா என்று சொன்னேன் மீண்டும் திறடா என்று சத்தம் போட்டான், நான் கதவை திறக்கிறேன் நடிகைக்கு பதில் நாய் தான் நிற்கிறது. பகலில் நீங்கள் ஈடுபடும் செயலில் அதிக கவனம் வைத்தால் அது இரவில் கனவாக வந்துவிடும் அவ்வளவு தான் இது.

இந்த நிகழ்வு போல தான் நீங்கள் சிவனை பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் கனவில் அவர் வருவது போல் தோன்றும் அதற்க்காக சிவன் உங்கள் வீ்ட்டிற்க்கு வந்தவிட்டார் என்று அர்த்தம் இல்லை. என் நண்பன் சொன்னது போல நடிகை வீட்டிற்க்கு வருவதுபோல கனவு கண்டால் அந்த நடிகை எங்கள் அறைக்கு வந்துவிட்டால் என்று அர்த்தமா?

எந்த நிகழ்வும் நம் கண் எதிரில் நடந்தால் தான் அதற்கு சக்திவாய்ந்தது என்று அர்த்தம். என்ன தான் இருந்தாலும் இனப்பாசம் எனக்கு இருக்கிறது அதனால் தமிழன் சொல்லும் சித்தர்களைப்பற்றி பார்த்துவிடலாம் என்று எனது ஆராய்ச்சி தொடர்கிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ருது திதி பலன்கள்



வணக்கம் நண்பர்களே!
                                     இப்பதிவில் பெண்கள் ருதுவான திதியின் பலனை பார்க்கலாம்.

பெண்களை பொறுத்தரை இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று பிறந்த நேரத்தில் எடுத்த ஜாதகம் அடுத்தது பெண்கள் ருதுவான தேதியில் அன்று எடுத்த ஜாதகம். இரண்டு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிறந்த தேதியில் அவளுக்கு என்ன தோஷம் இருந்ததோ அதே தோஷம் ருதுவான் தேதியில்  உள்ள ஜாதகத்திலும் இருக்க வேண்டும். 75 சதவீதம் இரண்டும் ஒன்றே போல் தென்படும். 

பெண்கள் ருதுவான தேதி என்பது முக்கியமான ஒன்று தான். அன்றைய தேதியில் வரும் திதியை வைத்து அவளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பலன் சொல்லலாம்.

பிரதமை - நல்லவளாக வாழ்வாள்
துவிதியை- நல்ல அழகுடையவளாக வருவாள்
திருதியை- சுகபோகங்களில் நாட்டம் செல்லும்
சதுர்த்தி -விரோதிகளால் துன்பமடைவாள்
பஞ்சமி -நல்ல குழந்தை செல்வங்கள் இருக்கும்
சஷ்டி- தர்மம் செய்வாள்
சப்தமி- கணவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்பவள்
அஷ்டமி -கணவனுக்கு கீழ்படிந்து நடப்பவள்
நவமி -கஷ்டபடுவாள்
தசமி- தானங்கள் செய்வாள்
ஏகாதசி- கடவுள் நம்பிக்கையுடன் இருப்பாள்
துவாதசி- நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாள்
திரையோதசி- முன் கோபம் வரும்
சதுர்த்தசி- கணவனுக்கு துரோகம் செய்வாள்
பெளர்ணமி, அமாவாசை- அடிமையாக இருப்பாள்.

மேலே சொன்னவை அனைத்தும் பொதுபலன்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


நிருவிகற்ப சமாதி



வணக்கம் நண்பர்களே!
                                        மந்திர அனுபவங்கள் பெற ஏகாப்பட்ட நபர்கள் உங்களின் ஜாதகத்தை அனுப்பியுள்ளீர்கள், இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்தையும் நான் பார்த்துவிட்டு பதில் அனுப்புகிறேன். 

நிருவிகற்ப சமாதி என்று யோகாவில் இதனைப்பற்றி சொல்லியிருப்பார்கள் ஆனால் இதனை செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில பேர் இதனை செய்து இருக்கலாம். நிறைய சமாதி வகைகள் யோகாவில் இருக்கின்றன. இதில் நிருவிகற்ப சமாதியைப்பற்றி கொஞ்சம் நாம் பார்க்கலாம். 

இது மனமற்ற நிலை இந்த உலகம் என்பது பொய் எல்லாம் மாயை என்று புத்தகங்களில் எழுதிவைத்திருப்பார்கள் இதனை படித்து நாம் என்ன செய்யபோகிறோம். எனக்கு தெரிந்ததை சொல்லபோகிறேன். இந்த நிலையில் உங்களின் உடல் ஒரு செத்தஉடலாக மாறிவிடும். மருத்துவரை அழைத்துவந்து காண்பித்தால் அவர் நாடி எல்லாம் பார்த்துவிட்டு இவர் இறந்துவிட்டார் என்று சொல்லுவார்கள் உயிர் உடம்பில் இருப்பதற்க்கான அடையாளம் அந்த உடலில் சிறிதும் கூட இருக்காது. அவர் நினைத்தால் மட்டுமே மீண்டும் உயிர் அந்த உடலுக்கு வரும். இது மிகப்பெரிய செயல். இதனை நம்மிடம் இருக்கும் புனித ஆத்மாக்கள் செய்வார்கள். என்னுடைய குருநாதரும் இதனை செய்வார். 

நான் என்ன செய்தேன் என்றால் இதனை வைத்து நாம பெரிய ஆளாக மாறிவிடலாம் என்று நினைத்து என் குருவிடம் இதனை நீங்கள் வெளியில் செய்து காட்டுங்கள் என்று கேட்டேன் அப்பொழுது அவர் என்னிடம் கேட்டார் ஏன்டா என்னை வைத்து நீ சம்பாதிக்க பார்க்கிறாயா என்று கேட்டார், என்ன செய்வது எதாவது செய்து பெரிய ஆள் ஆகாவேண்டாமா என்று கேட்டேன். நீ அதனை செய்து காட்டிக்கொள் என்றார். என்னால் இப்பொழுது முடியாது இது எல்லாம் உங்களை போல் சாமியார்கள் செய்வது நான் ஆசாமி இது எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் கேட்டு அவர் எதுவும் இல்லை என்று இதுவரை சொன்னதில்லை அதனால் இதற்கு அவர் சம்மதம் சொல்லுவார். பார்க்கலாம் என்று சொல்லியுள்ளார். 

வரும் 2013 வருடத்தில் இதனை பொதுமக்கள் பார்வையில் நடத்தப்படலாம் என்று நினைக்கிறேன். இப்படி செய்பவர்கள் தினமும் தன் உடல் உழைத்து தான் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் நம்ம ஆட்களாக இருந்தால் என்ன செய்வார்கள் இந்தநேரம் பல ஆயிரம் கோடி பணம்,ஆசிரமம் வைத்திருப்பார்கள்.

இதனை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் இந்த மாதிரி புண்ணியஆத்மாக்களின் பார்வையில் உங்களின் மந்திரஅனுபவங்கள் நடைபெறபோகிறது நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்து இருந்தால் இவர்களின் ஆத்மா உங்களை கவனிக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இந்த ஜென்மம் எடுத்தது எவ்வளவு புண்ணியம் என்று உங்களுக்கு அப்பொழுது தெரியும்.

என்னை தேடி இத்தனை பேர்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் குரு தசா எனக்கு நடந்துக்கொண்டு இருக்கின்றது. குரு தசாவில் சனி புத்தி குரு தசா இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. சனி புத்தி முடியும் தருவாயில் இருக்கின்றது. குரு தசா தான் அனைத்து புண்ணியஆத்மாக்கள் மற்றும் தெய்வ தரிசனம் அனைத்திற்க்கும் காரணம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கோச்சார பலன் சனி நிறைவுபகுதி



சனி பகவான் பத்தாமிடத்திற்கு வரும்போது செய்தொழில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தேவையற்ற பேச்சு பிரச்சினைகளை கொண்டுவந்து தரும் என்பதால் எச்சரிக்கை தேவை. மனைவி மக்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தாய் வழி உறவினர்கள் உங்களிடம் கொண்ட அன்பு குறையும். எதிரிகளால் இருந்த எதிர்ப்பு குறையும். வீண் அலைச்சல் இருந்தாலும் மனதில் நிம்மதி இருக்கும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும்.

சனி பகவான் பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது நீங்கள் நினைத்தது கைகூடும். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் பார்த்து வியக்கும் அளவுக்கு உங்களின் வாழ்க்கை தரம் உயரும். திருமண ஏற்பாடு நடைபெறும். சொத்து வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும். வெளி பயணங்களால் ஆதரவு கிடைக்கும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசு துறையில் தனியார் துறையிலும் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பணிசெய்யும் இடத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

சனி பகவான் பன்னிரெண்டாமிடத்திற்க்கு வரும்போது ஏழரை சனி ஆரம்பம் ஆகிவிட்டது உடல்நிலை மற்றும் மனநிலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிரிகள் தொல்லை தர ஆரம்பிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு செலவு அதிகமாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆனால் அதற்கு கடும் முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சில பேருக்கு வேலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Wednesday, December 26, 2012

கோச்சார பலன் சனி பகுதி-3


சனிபகவான் ஏழாமிடத்திற்க்கு வரும்போது கண்டசனியாக வரும் அதனால் உங்களின் உடல்நிலையில் அக்கறை தேவை. உடல்நிலை பிரச்சினை ஏற்படுத்தும். உடல்நிலையில் மெத்தனபோக்கு இருந்தால் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் வழியில் கருத்து வேறுபாடு ஏற்படும். கடன் ஏற்படும் கடனால் துன்பம் ஏற்பட்டு மனக்கவலைக்கொள்ள செய்யும். குடும்பத்தில் சச்சரவு ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய கூட்டுத்தொழில் ஆரம்பித்தால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்வது நல்லது. தனிநபர் விசயங்களில் தலையிடுவது அவர்களுக்கு கையொழுத்து இடுவது தவறு. 

சனிபகவான் எட்டாமிடத்திற்க்கு வரும்போது அஷ்டமசனியாகிறார் இது கஷ்டகாலம் என்றே சொல்லலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. நீங்கள் அவமானபட நேரிடும் சம்பவங்கள் நடைபெறும். கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். அடிக்கடி கடின அலைச்சல் ஏற்படும். நாள் முழுவதும் வேலை செய்தாலும் கடைசியில் கூலி கிடைப்பது என்பது அரிதான காரியம். தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஏதாவது சொத்து ஆவணங்கள் வைத்திருந்தால் அடுத்தவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள்.

சனிபகவான் ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது அப்பாட அஷ்டமசனியிருந்து தப்பித்தீர்கள் என்று நினைக்க தோன்றும். நிம்மதி பிறக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்களின் தொழில் உயரும். அந்நிய நாடு செல்ல வாய்ப்பு உருவாகும். அடுத்தவர்களைப்பற்றி பேசக்கூடாது வயதானவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் மிதமான வளர்ச்சியை காணலாம். கேட்ட கடன் கிடைக்கும். தொழிலை மேம்படுத்தும் வழியில் செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. குலதெய்வம் மற்றும் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்தில் கெட்டபெயர் ஏற்படலாம். உங்களை ஊர்மக்கள் மதிக்கமாட்டார்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 40



வணக்கம் நண்பர்களே !

பிராணாயாமம் மற்றும் மந்திரங்களை சொல்லும் போது நமது கர்மா தடைசெய்கிறது அதற்கு வழி சொல்லுங்கள் என்று நமது நண்பர் ஒருவர் திருச்சியில் இருந்து கேட்டுருந்தார்.

நாம் நமது மூலத்தை தொடும் எந்த செயல் செய்தாலும் அதனை செய்கின்ற செயல் அனைத்திற்க்கும் தடங்கல் வருவது இயற்கை. நீங்கள் பிராணாயாமமோ அல்லது மந்திரங்கள் சொல்லும்போது பிரச்சினை ஏற்பட்டால் அதாவது தடங்கல் ஏற்பட்டால் அதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது அதனை சொல்லிவிட்டு மீண்டும் செய்தால் தடங்கல் ஏற்படாது. இதனை சொல்லுவதும் 108 முறை சொல்லவேண்டும் அப்படி சொல்லிவிட்டு மீண்டும் நீங்கள் ஆரம்பித்தால் தடையின்றி செய்யலாம். மந்திரம் இது தான்

ஓம் ஹ்ரீம் கபாலீனி
குல குண்டலியை
சித்திம் தேஹி பாக்யம்
தேஹிதேஹி ஸ்வாஹா

என்று 108 முறை சொல்லிவிட்டு செய்தால் உங்களின் பிராணாயாமம் மற்றும் மந்திரசித்தி கிடைக்கும்.

என்ன நண்பர்களே கர்மதடங்கல் நீங்க வழி சொல்லிவிட்டேன் செய்வீர்களா?


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


ஆன்மீக அனுபவங்கள் 39


வணக்கம் நண்பர்களே!
                                       காலையில் எழுதிய ஆன்மீக அனுபவங்கள் பதிவை படித்துவிட்டு அதற்குள் பல நண்பர்கள் தொடர்பு கொண்டுவிட்டார்கள். நாங்களும் புண்ணிய ஆத்மாவை தரிசித்து ஆசீர்வாதம் செய்கிறோம் என்று சொன்னார்கள்.

என்னுடைய நேரிடையான வாடிக்கையாளர்களை இப்படி சந்திக்கவைப்பது நான் சோதிடம் பார்க்க ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை நடந்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் நெட் வழியாக வரும் வாடிக்கையாளர்களை நான் அவ்வாறு சந்திக்க வைப்பதில்லை. ஏன் என்றால் பெரும்பாலும் இவர்கள் கணிணி துறையில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்தாலும் அவர்கள் குடும்பத்துடன் இருக்கின்ற பொழுது நிம்மதி கிடைக்கும் என்பதால் இதனை நான் சொல்லாமல் இருந்தேன். 

நெட்டில் படித்த நண்பர்கள் நெருங்கி பழகிவிட்டதால் அவர்கள் பேசும்போது எங்களுக்கும் இப்படி ஏற்பாடு செய்து தாருங்கள் என்று சொன்னார்கள் அத்துடன் இதனை பதிவுகளிலும் தெரியப்படுத்துங்கள் என்றும் சொன்னார்கள் அதனால் இதனை தெரியப்படுத்தினேன் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

புண்ணிய ஆத்மாக்களைபபற்றி சொல்லவேண்டும் என்றால் இவர்கள் சாமியார்கள் தான் இவர்களிடம் நீங்கள் ஆசீர்வாதம் வாங்கினால் உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும் இதனை நான் பல நேரிடையான சோதிடவாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நான் பார்த்து இருக்கிறேன். இவர்களை பார்ப்பதற்க்கு பரதேசி போல் இருப்பார்கள் வெளியில் அவ்வளவு எளிதில் அடையாளம் காணமுடியாது. நம் ஊர் சாமியார்கள் போல் இருக்கமாட்டார்கள் இவர்களுக்கு ஆத்ம பலன் அதிகம்.

இவர்கள் அனைவரும் சிவனின் அம்சம் தான். இவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். இவர்களில் ஒரு சிலர் போதை வஸ்துகளை உபயோகப்படுத்துவார்கள். நீங்கள் நினைக்கலாம் என்னடா போதை வஸ்துகளை உபயோகப்படுத்துபவர் எப்படிடா புனிதஆத்மாவாக இருக்கமுடியும் என்று கேட்கலாம். இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை மட்டும் வாழமாட்டார்கள் இவர்களின் பலமே அது தான் அதனை வைத்துக்கொண்டு உயர்நிலையை அடைவார்கள். நீங்கள் நல்ல ஆன்மீகவாதியாக இருந்தால் இவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவீர்கள்.

நான் இவர்களிடம் கேட்பேன் நீங்கள் போதை வஸ்துகளை உபயோகப்படுத்துகிறீர்கள் எப்படி சாமியார் என்று கேட்பேன் அவர்கள் பதில் நாங்கள் எதுவும் பயன்படுத்தலாம் ஆனால் எங்கள் உடலில் இருந்து விந்து மட்டும் வெளியில் வரக்கூடாது என்பார்கள். இவர்களுக்கு என்று தனியாக குடும்பம் ஏதம் இல்லை. அனைவரும் சந்நியாசிகளே இப்படிப்பட்ட சந்நியாசிகள் தமிழ்நாட்டிற்க்கு வருகிறார்கள் இவர்கள் வரும்போது அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் அப்பொழுது நான் எனது சோதிட வாடிக்கையாளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்வேன். இவர்கள் பொதுவாக அதிகமாக பேசமாட்டார்கள். தமிழ் தெரியாது.

இவர்களிடம் ஆசீர்வாதம் மட்டும் வாங்கினால் போதும். இப்படிபட்டவர்களை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். என்னுடைய குருநாதரையும் நீங்கள் சந்திக்கலாம்.  குருநாதர்வுடன் பேசும்போது நீங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். என்னுடைய குருநாதருக்கு பத்து இந்தியமொழிகள் தெரியும். இந்தி விருப்பமாக பேசுவார்.

இப்படிபட்டவர்களை நீங்கள் சந்திப்பது என்றால் என்னிடம் உங்களின் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள் அவர்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன். இதற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியதில்லை. அனைத்தும் இலவச சேவை.

அவர்களின் சந்திப்பு உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷத்திற்க்கு சரியான பரிகாரமாகக் கூட இருக்கும் என்பதை மறவாதீர்கள். அவர்களின் ஆசி மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காலசர்ப்பதோஷ பரிகாரம்



காலசர்ப்ப தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று கேட்டு இருந்தேன் அதனைப்பற்றி ஒரு சில நண்பர்கள் மட்டும் பதில் அனுப்பி இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி.


KJ said...
Every vinayagar has naagar on both sides. We can do milk abisegam for those will be good remedy.

For me ragu at 6th place and kethu at 12. Which one is heading for me. Ragu or kethu. Except budhan and sevvai, other planets locked in between these. Pl explain sir.

அமுதா கிருஷ்ணா said...
நாக தோஷத்திற்கு தான் காளஹஸ்தி போக வேண்டுமோ.”கால” சர்ப்ப தோஷத்திற்கு ”கால”பைரவரை வணங்க வேண்டும் என்று படித்தேன். சிவகங்கையில் இருக்கும் ஒரு சிவாலயத்தின் கால பைரவர் இதற்கு உகந்தவர்.

THOUGHT GURU said...
Buy and give slippers tp poor people and children,and go to shrivanjiyam-kumbakonam and shivan temple -in St.thomas mount chennai ... :)




காலசர்ப்ப தோஷம் உடையவர்கள் காளஹாஸ்தி திருநாகேஸ்வரம் செல்லுவதை விட திருகடையூர் செல்வது நல்லது. காலன் என்பன் எமன். எமனை வதம் செய்த இடம் திருகடையூர் அதனால் திருகடையூர் சென்று ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மனை தரிசனம் செய்தால் காலசர்ப்ப தோஷ நிவர்த்தியாகும். காலனையை எட்டி உதைத்த இடம் என்பதால் காலசர்ப்ப தோஷத்திற்க்கு இங்கு சென்றால் உங்களுக்கு தோஷத்தின் கடுமை குறைந்து நன்மை நடைபெறும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காக்கும் குலதெய்வம்



வணக்கம் நண்பர்களே !
                              குலதெய்வத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டவுடன் அதனைப்படித்து விட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள் எப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவது என்று அவர்களுக்கு சொல்லியுள்ளேன். இந்த பதிவிலும் குலதெய்வத்தைப்பற்றி பார்க்கலாம்.

இன்றைய தேதியில் நீங்கள் ஆன்மீக புத்தகங்களை வாங்கினால் அதில் பல மந்திரங்களின் பயிற்சி தான் போட்டு உள்ளார்கள். தினசரி நாளிதழ் கூட இதே கதை தான் நடந்துள்ளது. அதனை செய்பவர்கள் ஏதாவது நன்மை அடைகிறார்களா என்று பார்ப்பேன்.

அவர்கள் அடைவது ஒன்றுமே இல்லை என்று தான் அர்த்தம் ஏன் நடைபெறவில்லை என்ன காரணத்தால் அந்த தெய்வங்களின் தரிசனம் நமக்கு கிடைக்கவில்லை என்று பார்த்தால் ஒரே காரணம் ஒன்று உள்ளது. அது குலதெய்வம் அதனை தடுத்துவிடும் எப்படி என்று பார்ப்போம்.

உங்களுக்கு குலதெய்வம் அருள் இல்லை என்றாலும் உங்களை காப்பாற்றும் பொறுப்பு அந்த குலதெய்வத்திற்க்கு இருக்கிறது. உங்களின் வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவர்களின் ஜாதகங்களில் பூர்வபுண்ணியம் மூன்று பேருக்கு கெட்டு ஒருவருக்கு நன்றாக இருந்தாலும் உங்களின் குலதெய்வம் உங்களை காப்பாற்றிவிடும்.  

நாம் எந்த மந்திரபயிற்சி பெற்றாலும் குலதெய்வத்தினிடம் செல்லும்போது நீங்கள் எடுத்த இஷ்டதெய்வம் உங்களின் குலதெய்வத்திடம் வராது. இது நியதி. நீங்கள் மந்திர பயிற்சி செய்யும் போது முறையான அனுமதி உங்களின் குலதெய்வத்திடம் வாங்கவேண்டும். 

நீங்கள் மந்திர பயிற்சி செய்து கொண்டு இருப்பீர்கள் உங்களின் குலதெய்வம் அனுமதியிருந்தால் மட்டுமே உள்ளே உங்களின் இஷ்டதெய்வம் வரமுடியும் அப்படி இல்லை என்றால் உள்ளே அனுமதி இல்லை. நீங்கள் மந்திரபயிற்சியை 108 நாட்கள் செய்துக்கொண்டு என்னடா ஒன்றுமே நடைபெறவில்லை என்று பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் உங்களின் குலதெய்வம் அதனை உள்ளே விடாது ஏன் அப்படி என்று பார்த்தால். நியதி என்ன என்றால் எந்த தெய்வமும் உங்களின் குலதெய்வதின் வழியாக தான் உள்ளே வரமுடியும். குலதெய்வம் அனுமதி கொடுத்தால் தான் இஷ்டதெய்வம் வரமுடியும். 

நீங்கள் செய்யும் மந்திரங்களுக்கு முறையாக அனுமதியை உங்களின் குலதெய்வத்திடம் நீங்கள் வாங்கவில்லை அதனால் உங்களின் மந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். என்னிடம் மந்திரபயிற்சி பெற நினைப்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும் உங்களின் குலதெய்வம் என்ன என்று தான் இருக்கும். அவர்கள் என்னை பார்த்து சென்றவுடன் அவர்களின் குலதெய்வதிடம் அனுமதி வாங்கவேண்டும் .

அனுமதி வாங்கிறது என்று சொன்னால் சும்மா மந்திர பயிற்சி இவர்களுக்கு கற்றுக்கொடுக்கபோகிறேன் என்று சொல்லமுடியாது. அதற்கு என்று பல வழிகள் இருக்கிறது அப்படி செய்து தான் நான் தரமுடியும். உங்களின் குலதெய்வத்திடம் நான் அனுமதி வாங்கும்போது என்னால் எந்தவித சிறிய தீங்கும் உன் பிள்ளைகளுக்கு நடக்காது என்று உறுதி அளித்தபிறகு தான் மந்திரத்தை வழங்கமுடியும்.

உங்களின் குலதெய்வத்திடம் நான் அனுமதி வாங்குவதற்க்குள் பாடாத பாடு நான் படவேண்டியிருக்கும். அவ்வளவு எளிதில் அனுமதி கொடுத்துவிடாது. இப்படி கஷ்டபட்டு நான் அனுமதி வாங்குவேன். இவன் என்ன சொல்லுவான் நான் இப்பொழுது செய்யவில்லை சார் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பார். எனக்கு எப்படி இருக்கும் அவனின் கர்மா அவனை தடுக்கிறது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களின் குலதெய்வம் தான் உங்களுக்கு எல்லாம். எமன் கூட உங்கள் குலதெய்வத்தின் அனுமதி பேரில் தான் வருவார்.

பல வித மந்திரங்களை ஒவ்வொரு நாளும் நீங்கள் உரு ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் ஒன்றுமே நடைபெறவில்லை என்றால் அதற்கு ஒரே அர்த்தம் உங்களின் குலதெய்வத்திடம் அனுமதி இல்லை. அதனால் உங்களின் மந்திரங்கள் வெற்றி அடைவதில்லை.

மந்திரங்களுக்கு மட்டும் இல்லை நீங்கள் செய்கின்ற அனைத்து செயலுக்கும் குலதெய்வம் இல்லை என்றால் ஒன்றும் வெற்றிபெறாது என்பதை நீங்கள் நினையுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


ஆன்மீக அனுபவங்கள் 38


வணக்கம் நண்பர்களே! 
                              ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு அதில் ஈடுபடவேண்டும் என்று பல நண்பர்கள் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அதனைப்பற்றி சொல்லுவதற்கே இப்பதிவு.

இந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் இதில் ஈடுபட நினைப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. அதிலும் கணிணி துறையில் இருப்பவர்கள் அதிக பேர் தொடர்பு கொள்கிறார்கள். இதில் பெண்களும் அதிகமாக தொடர்புக்கொள்கிறார்கள். 

நான் முதலில் இது ஆண்களுக்கு மட்டும் கற்று தரவேண்டும் என்று நினைத்திருந்தேன் பிறகு பெண்களும் பல பேர் என்னை தொடர்பு கொண்டதால் நேற்று இரவு எனது குரு நாதரிடம் இதனைப்பற்றி பேசி ஒரு முடிவு எடுத்து பெண்களுக்கும் கற்று தர முடிவு எடுத்தேன். பெண்களை ஒதுக்குவது தவறு அல்லவா அதனால் இந்த மாற்றம். எனது இமெயில் முழுவதும் இப்பொழுது மந்திர பயிற்சி பெறுவதற்க்கு உள்ள மெயிலாகதான் இருக்கிறது.

இது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது தெருவுக்கு ஒரு சாமியார்கள் மடத்தை கட்டிக்கொண்டு யாரும் வருவார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்கின்ற காலத்தில் நம்மை தேடி இத்தனை பேர்கள் வருகிறார்களே என்று நினைக்க தோன்றுகிறது.

நம்ம பிளாக்கை படிப்பவர்கள் அனைவரும் என்னிடம் நன்றாக பேசக்கூடியவர்களா இருக்கிறார்கள் இதில் யாரை தேர்ந்தேடுப்பது யாரை விடுவது என்பது எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ஒருத்தரை விட்டாலும் எனக்கு பிரச்சினை தான். முடிந்தளவுக்கு அனைவருக்கும் ஏற்பாடு செய்கிறேன். 

உங்களுக்கு முதல் தகுதி நீங்கள் அனைத்துவித ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபட்டு இருக்கவேண்டும். ஏன் என்றால் அதில் எல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை என்றால் கடைசியில் மட்டுமே இதனை நீங்கள் எடுக்கவேண்டும். இதனை செய்துக்கொண்டு நான் வேறு ஆன்மீக பயிற்சி செய்கிறேன் என்று சொன்னால் அனுமதி கிடையாது. அதனால் அனைத்தும் முடித்துவிட்டு வாருங்கள்.

பல சாமியார்கள் இந்தியா நேபாளம் போன்ற நாடுகளில் நடந்தே அனைத்து புனித ஸ்தலங்களுக்கும் சென்று தரிசித்துவிட்டு புனித நதிகளில் குளித்துவிட்டு பல காடுகளிலும் தவம் இருந்து ஒரு உண்மையான விஷயத்தை எடுத்து கொடுத்து இருக்கிறார்கள் அதனை உங்களுக்கு தரபோகிறேன். அவர்களின் ஆத்மா புனித ஆத்மா அவர்கள் தரும் விஷயத்தை தவறாக பயன்படுத்தகூடாது. அபபடி பயன்படுத்தினால் உங்களின் கர்மாவை தொலைக்கமுடியாது.

நீங்கள் சென்னையில் இருப்பது நல்லது. ஏன் என்றால் நான் சென்னையில் தான் இருக்கிறேன். இதனை நீங்கள் செய்யும்போது உங்களின் உடலில் பல மாற்றங்களை நடைபெறும் அதனை நான் கவனிக்கவேண்டும். வெளியூரில் இருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்கிறேன்.  

நீங்கள் இதனை செய்வதற்க்கு பல கர்மாக்கள் உங்களை தடுக்கின்றன அதனால் நீங்கள் முதலில் என்னை வந்து நேரில் பார்த்துவிடுங்கள் அதன் பிறகு ஒரு நாள் நான் ஒரு சாமியாரிடம் கூட்டிக்கொண்டு அவரிடம் ஆசிவாங்க செய்கிறேன் அப்படி செய்தால் உங்களின் கர்மா குறைய வாய்ப்பு இருக்கிறது. அவரிடம் கூட்டமாக செல்லவேண்டாம் இரண்டு பேர் அல்லது ஒருவர் என்று போய் பார்த்துவிட்டு வரலாம்.

நீங்கள் முதலில் என்னை பார்க்கவருவதற்க்கே பல தடங்கள்களை சந்திக்கவேண்டியிருக்கும் ஏன் என்றால் பிறவி கர்மா உங்களை கடுமையாக தடுக்கும். அதனை மீறி நீங்கள் வந்துவிடுங்கள்.

ஒரு பெண் அறிவிப்பு வெளிவந்த அன்று சென்னையில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினார், நான் பல தவறுகள் செய்து இருக்கிறேன் என்னால் இதனை செய்யமுடியுமா என்று கேட்டார். ஒரு உண்மை என்ன என்றால் நீங்கள் செய்யும் தவறு இந்தபிறவியில் உங்களை தாக்காது அது சேவிங் அக்கோண்டில் வைத்து அடுத்த பிறவியில் உங்களை தாக்கும் என்பதே உண்மை. நீங்கள் செய்தது தவறு என்று உங்களுக்கு தெரிந்துவிட்டது கவலையை விடுங்கள் நீங்கள் தாராளமாக செய்யலாம். 

நீங்கள் எப்படிபட்ட மனிதர்களாகவும் இருந்து இருக்கலாம் அதனைப்பற்றி கவலையில்லை இதனை செய்தபிறகு நீங்கள் நல்லவராக மாறிவிடுவீர்கள் என்பதே உண்மை.

நீங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பீர்கள். இதனை செய்து பாருங்கள் உங்களின் பொருளாதார தேவை அனைத்தும் தீர்ந்துவிடும் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் முதலில் செய்ய சொல்லுவதே குபேரனை பார்த்து தான் செய்யசொல்லுவேன். இதனை ஒழங்காக செய்துவிட்டால் லட்சுமி தேவி உங்களின் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவாள். உங்களால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் பயனடைய முடியும்.

செல்வத்தை முதலில் கொடுத்துவிட்டால் உங்களின் முக்கால்வாசி ஏக்கம் தீர்ந்துவிடும் என்பதே உண்மை. 

முதலில் புண்ணிய ஆத்மாவின் தரிசனத்தை உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் அதன் பிறகு பயிற்சியில் ஈடுபடுவதை முடிவு செய்யலாம்.

அடுத்த பதிவில் விரிவாக தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Tuesday, December 25, 2012

கோச்சார பலன் சனி பகுதி-2


சனிபகவான் நாலாமிடத்திற்க்கு வரும்போது அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியாது. நான்காம் இடம் சனி அர்த்தாஷ்டம சனியாகிறார். அஷ்டம சனியின் தாக்கத்தில் பாதி பலனை சனி பகவான் தருகிறார். உங்களுடைய அந்தஸ்தை குறைக்கும் வகையில் சனிபகவான் செயல்படுவார். தாயாரின் உடல்நிலை கெடும். நீங்கள் வண்டி வாகனங்கள் வைத்திருந்தால் அதன் வழியாக பிரச்சினை ஏற்படும். யாரிடமாவது பணஉதவி கேட்டாள் உடனே கிடைக்காது அதனால் மனசஞ்சலம் அடையும்.நீங்கள் செய்கின்ற தொழிலில் கடும் போட்டி ஏற்பட்டு உங்களின் லாபம் குறையும். நீங்கள் நடத்தும் தொழிலில் பணியாளர்கள் பிரச்சினை ஏற்பட்டு உங்கள் தொழில் குளறுபடி ஏற்படும்.

சனிபகவான் ஐந்தாமிடத்திற்க்கு வரும்போது நீங்கள் செய்கின்ற தொழிலில் தடங்கல் மேல்அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகலாம். உங்களின் பிள்ளைகளால் உங்களுக்கு பிரச்சினை வரும். உங்களின் பூர்வீகசொத்து பிரச்சினையை தரும்.சனி அமருமிடம் பூர்வபுண்ணிஸ்தானம் ஆதலால் நீங்கள் செய்த பூர்வபுண்ணியத்திற்க்கு ஏற்ப பலன்களை தரும். உங்களின் குழந்தைகள் உங்களின் சொல்லை கேட்டு நடக்கமாட்டார்கள் அதனால் உங்களின் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். சுயதொழில் செய்கின்றவராக இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பங்குசந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் உங்களின் முதலீடு மீது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அப்படி இல்லையென்றால் உங்களின் முதலீடு நஷ்டத்தை சந்திக்கும்.

சனிபகவான் ஆறாமிடத்திற்கு வரும்போது நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இஷ்டதெய்வ அருள் நன்றாக கிடைக்கும். கடனை அடைப்பீர்கள். தந்தை வழி உறவினர்கள் முன்வந்து உதவுவார்கள். நீங்கள் சுயதொழில் செய்துவந்தால் உங்களின் முயற்சியால் உயர்வீர்கள். நண்பரகள் அனைவரும் உங்களுக்கு உதவுவார்கள். நண்பர்களுடன் விருந்து கேளிக்கை என்று ஈடுபடுவீர்கள். சொத்துக்களை வாங்கும் காலம் இது. தொழிலில் எதிர்ப்புகள் விலகும் காலம் இது. நீங்கள் அரசியலில் ஈடுபட இது பொற்காலம். அரசியலில் ஈடுபட்டால் எளிதில் வென்றுவிடலாம். ஏதாவது வழக்குகள் நீதீமன்றத்தில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்


அன்பு நண்பர்களுக்கு கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Monday, December 24, 2012

வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! 
உன் சேவடி செவ்விதிருக் காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு 
படையோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. 




வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்களுடன்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Sunday, December 23, 2012

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே !
            ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு என்னை பல பேர் தொடர்பு கொண்டீர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அதில் ஒருவர் மட்டும் ஏற்கனவே தொடர்புக்கொண்டு கேட்டு இருந்தார் அவர் சென்ற வாரம் என்னை வந்து பார்த்துவிட்டு சென்றார் இந்த வாரம் அவருக்கு கொடுத்துவிட்டேன்.

ஆன்மீக அனுபவங்கள் படித்துவிட்டு என்னை பாராட்டினால் மட்டும் போதாது நீங்கள் அதில் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. இப்பொழுது உள்ள இளைஞர்கள் நினைக்கிறார்கள் ஏதோ ரெடிமேட் கடையில் வாங்குவது போல அனைத்தையும் எளிதில் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு கிடைக்காது இதில் ஈடுபடும்போது பலவித சோதனை செய்து தான் உங்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

இதனை மட்டும் ஒருவர் கற்றுவிட்டால் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்பதை மனதில் வையுங்கள். இதனை அனைவருக்கும் என்னால் எடுத்துக்கொடுத்துவிடமுடியும் ஆனால் நீங்கள் அதற்கு செலவு செய்ய வேண்டிவரும். ஏன் என்றால் பல சாமியார்களிடம் இருந்து தான் நான் வாங்கி உங்களுக்கு தரமுடியும் என்பதால் அவ்வாறு சொல்லுகிறேன். என்னால் தருவது மட்டும் இலவச சேவை.

நீங்கள் செய்யவேண்டியது

உங்களின் ஜாதகநகலை அனுப்பவேண்டும் ஏன் என்றால் அந்த ஜாதகத்தில் எப்படி கிரகநிலைகள் உள்ளன உங்களின் பூர்வபுண்ணியம் எப்படி உள்ளது என்று பார்த்து அதற்கு தகுந்தவாறு ஏற்பாடு செய்யவேண்டும். உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை சரிசெய்யவே பாடாத பாடு படவேண்டியிருக்கிறது அதனால் நீங்கள் அனுப்பும்போது உங்களின் சரியான ஜாதகத்தை அனுப்புங்கள் மற்றும் உங்களைப்பற்றி விவரங்களை எனக்கு தெரியபடுத்துங்கள்.

உங்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு உங்களுக்கு தகவலை சொல்லுகிறேன் பிறகு என்னை வந்து சந்தித்துவிட்டு சென்ற மறுவாரம் நீங்கள் தகுதியானவராக இருந்தால் உங்களை தேடிவரும். கண்டிப்பாக என்னை சந்திக்கவேண்டும். நீங்கள் சென்னையில் இருந்தால் எளிதில் என்னை பார்த்துவிடலாம். வெளியூராக இருந்தால் நான் அந்த ஊருக்கு வரும்போது உங்களை சந்தித்துக்கொள்கிறேன். தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.

இந்த சேவை என்பது இலவச சேவை அதனால் ஒரு சில சோதனை இருக்கும் அதனை கண்டு இவர் ஏமாற்றுகிறார் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். உண்மையை தேடி வருபவர்களுக்கு கண்டிப்பாக இது புரியும்.

நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
regarding  for mantra என்ற தலைப்பு இட்டு அனுப்புங்கள்
E-Mail id : astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Saturday, December 22, 2012

குலதெய்வ அருள்



வணக்கம் நண்பர்களே!
                            குலதெய்வத்தை பற்றி பல பழைய பதிவுகளில் பார்த்திருந்தாலும் இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம்.

உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களின் குலதெய்வத்திற்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள். உங்களின் ஜாதகத்தில் மோசமான கிரக நிலைகள் இருந்தால் உங்களின் வளர்ச்சி முடங்கிவிடும். இந்த மாதிரி கிரகநிலைகள் அமையும் போதும் உங்களின் குலதெய்வ அருள் உங்களின் குடும்பத்திற்க்கு இருந்தால் அனைத்து பிரச்சினைகளில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளமுடியும். 

குலதெய்வ அருள் இல்லை என்றால் உங்களின் குடும்பத்தில் நிம்மதி என்பது சிறிதும் இருக்காது. உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைவார்கள். குழந்தைகள் வளர்ச்சி இருக்காது. குடும்பத்தில் எந்த நேரமும் பிரச்சினை தான் இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்குள்ளும் ஒற்றுமை என்பது இருக்காது. மனச்சிதைவு ஏற்படும். சரியான வயதில் திருமணம் நடைபெறாது. திருமணம் நடைபெற்றால் குழந்தை பாக்கியம் இருக்காது. விபத்துக்கள் ஏற்படுவது. இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.

என்னிடம் வரும் நபர்களுக்கு நான் சோதிடம் பார்க்கும் போது குலதெய்வ அருள் இல்லையென்றால் உங்களுக்கு குலதெய்வ அருள் இல்லை என்று சொல்லுவேன் அப்பொழுது அவர்கள் இல்லையே நாங்கள் அடிக்கடி அங்கு சென்று வழிபாட்டில் கலந்துக்கொள்ளுவோம் என்பார்கள். 

நீங்கள் வழிபாட்டில் கலந்துக்கொள்ளலாம் ஆனால் உங்களின் குலதெய்வம் உங்களின் பக்கம் நிற்காது ஏன் உங்களின் பக்கம் நிற்கவில்லை என்று சொல்லுவதற்க்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களுக்கு மட்டும் சொந்தமாக இருக்காது உங்களின் பங்காளிகளுக்கும் சொந்தமாக இருக்கும். 

உங்களின் பங்காளிகளின் ஒருவருக்கு மட்டும் அந்த குலதெய்வம் சாதகமாக செய்யும். அப்படி இருக்கும் குலதெய்வத்தை உங்களின் பக்கம் வருவதற்க்கு நீங்கள் ஒரு பூஜை செய்து கொண்டு வரவேண்டும். அந்த குலதெய்வத்தை கொண்டுவந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு அனைத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

இந்த மாதிரி பூஜை செய்து எடுத்துவருவது என்பது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இதனை நீங்களும் செய்து உங்களின் குலதெய்வத்தின் அருளை பெறச்செய்ய முடியும். 

உங்களின் குலதெய்வத்தை உங்களின் பக்கம் கொண்டுவருவதற்க்கு என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு செய்கிறேன். தொடர்புக்கொள்ளலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

கோச்சாரபலன் சனி பகுதி-1


சனிபகவான் ஜன்மராசியில் வரும்போது உடல் நிலை கெடும். வறுமை அளவுக்கு மீறி போகும். குடும்பத்தில் துக்கரமான சம்பவங்கள் நிகழும். இது ஏழரை சனியின் உச்சகட்டம் என்று தான் சொல்லுவார்கள் அந்தளவுக்கு உங்களை உடலாலும் மனதாலும் வாட்டிவிடும். தற்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்கு உங்களை கொண்டு வந்து விட்டுவிடும் இருந்தாலும் மரணத்தை அந்தளவுக்கு ஏழரை சனி நடக்கும்போது கொடுத்துவிடமாட்டார். 

குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்களின் துணைவரால் ஒரளவுக்கு நிம்மதி பிறக்கும். பயணங்கள் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செல்லுவது நல்லது இல்லையென்றால் விபத்தை சந்திக்க வேண்டிவரும். 

நீங்கள் ஏதாவது தொழில் செய்துக்கொண்டு இருந்தால் அந்த தொழிலில் பிரச்சினை ஏற்படும் நீங்கள் செய்கின்ற தொழில் ஒரளவுக்கு வருமானம் தரும். நீங்கள் வேலையில் இருந்தீர்கள் என்றால் உங்களின் உடல்நிலை அந்த வேலைக்கு ஒத்துக்கொடுக்காது அதனால் உங்களின் மேல் அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகலாம்.எதிரிகளின் கை ஓங்கும் அவர்களால் சண்டை சச்சரவு ஏற்பட்டு கைகலப்பு வரை கொண்டுவந்து விட்டுவிடும்.

சனி பகவான் இரண்டாமிடத்திற்க்கு வரும்போது ஏழரைசனியின் தாக்கம் பெரும்மளவு குறையும் என்று எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் விட்டுக்கொடுத்துச்செல்வது நல்லது. சிறு வாதங்கள் கூட பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். 

இரண்டாவது வீட்டிற்க்கு சனி வந்தவுடன் ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சியாது செய்துவிடுவது நல்லது அப்படி இல்லை என்றால் ஏதாவது இறப்பு நிகழ்ந்து விடும் ஏன் என்றால் வீட்டில் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதால் அப்படி செய்துவிடும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் சொத்து சேர்ப்பும் பொருள்வரவும் வரும். எதிர்களின் செயல் சிரமம் தந்தாலும் கடுமையான விளைவுகளை தந்துவிடாது. 

நண்பர்களின் உதவி ஒரளவு உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்தால் திரும்பிவராது. அதனை கேட்கும் போது வீணான சிரமங்களுக்கு ஆட்படுவீர்கள் அதனால் அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்காதீர்கள். தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் அக்கறையுடன் கையாளுவது மேலும் நன்மைபயக்கும்.

சனிபகவான் மூன்றாமிடத்திற்க்கு வரும்போது அப்பாடா ஏழரை சனி போய்விட்டதுடா என்று நிமிர்ந்து உட்காருவீர்கள். உங்களின் எதிரிகள் அழிவார்கள்.  கடந்த காலத்தில் இருந்த துன்பம் குறைந்து நல்ல நிலையை பெறுவீர்கள். 

உங்களின் குடும்பத்திற்க்க தேவையான பொருளாதார வசதி பெருமளவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வீடுகள் வாங்குவீர்கள். மேற்படிப்புக்கு உதவி கிடைக்கும். பங்கு சந்தை வழியாக பணம் வருவதற்க்க வாய்ப்பு இருக்கிறது. 

உங்களின் தொழிலி்ல் அதிக கவனம் செலுத்தி உங்களின் தொழில் சிறக்கும். உங்களின் தொழிலால் வாழ்க்கையில் புதிய திருப்பம் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் நல்ல நிலைமை காணப்படும். உங்களின் சேமிப்பு உயர்வதால் உங்களுக்கு தன்னம்பிக்கை உயரும்.நீங்கள் செய்யும் வேலையில் கவனம் செலுத்தி உங்களின் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். பதவி உயர்வுக்கு வழி உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.