Followers

Thursday, January 3, 2013

பூர்வ புண்ணியம் 13



ணக்கம் ண்பர்களே !
                      நேற்று பூர்வபுண்ணியத்தை சரிசெய்யும் ஒரு வழியை சொல்லிருந்தேன். இன்று ஒரு வழியை நாம் பார்க்கலாம்.

பூர்வபுண்ணியத்தை சரிசெய்ய நாம் மகான்களை வழிப்பட்டால் நல்லது. ஊழ்வினையை மாற்றும் சக்தி மகான்களுக்கு உண்டு. இவர்களை நாம் சந்தித்து ஆசி பெறும் போது நமது ஊழ்வினை குறையும்.  இதனை நீங்கள் பல மகான்களின் சத்சங்கங்களில் அவர்கள் சொல்லியே நீங்கள் கேட்டு இருக்கலாம் அல்லது படித்து இருக்கலாம். 

நாம் பிறக்கும்போது நமக்கு இதற்கு முன் எத்தனை பிறவி எடுத்துஇருக்கிறோம் என்று தெரியவரும். நாம் பிறக்கும்போது ஜண்டவாயு என்ற வாயு வந்து நம்மை போர்த்திக்கொள்ளும் இந்த வாயு நம்மை போர்த்திவிட்டால் நமக்கு முன்ஜென்மத்தைப்பற்றி தெரியவராது. பிறக்கும்போது இந்த ஜண்டவாயு வந்து போர்த்திவிட்டதால் நம்மால் முன்ஜென்மங்களைப்பற்றி தெரியாமல் போய்விடுகிறது. இந்த ஜண்டவாயுவை தாண்டி செல்பவர்களுக்கே ஒரு மனிதனின் முன்ஜென்மங்களைப்பற்றி அறியமுடியும். இந்த ஜண்டவாயுவை தாண்டிச்செல்லும் ஆற்றலை நமது மகான்கள் பெற்று இருக்கிறார்கள். 

மகான்கள் நம்மை பார்த்தவுடன் நமது முன்ஜென்மங்களைப்பற்றி அவர்களால் அறியமுடியும். அவர்கள் நமது முன்ஜென்மத்திற்க்கு தகுந்தவாறு ஆசியை நமக்கு வழங்குவார்கள். 

நம்ம ஆளுங்க மகான்களை பார்த்து பார்த்து இவர்களின் கர்மாவை அவர்களுக்கு விட்டுவிடுவார்கள் அதனாலேயே நீங்கள் பார்த்த படித்த மகான்கள் இறுதியில் கஷ்டப்பட்டு இறந்து இருப்பார்கள். ஏன் என்றால் யாராவது ஒருவர் கர்மாவை சுமக்கவேண்டும் என்ற நியதியால் அவர்கள் உங்களின் கர்மாவை அவர்கள் சுமந்ததால் வந்த விளைவு இது.

இந்த நேரத்தில் நீங்கள் நினைக்கலாம் நாம் போய் அவர்களை சந்தித்து நமது கர்மாவை ஏன் அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்று.அவர்கள் கடவுளின் படைப்பு. நீங்கள் வணங்கவேண்டும் அவர்கள் கொடுக்கவேண்டும் இது நியதி. அதனால் நீங்கள் அவர்களை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: