Followers

Sunday, January 20, 2013

பூர்வ புண்ணியம் 17


வணக்கம் நண்பர்களே !

இப்பதிவில் ஒரு நல்ல தகவலை பார்க்கலாம். நீங்கள் அனைவரும் குருவை தேடி அலைந்திருப்பீர்கள் அவரை கண்டுபிடிப்பதற்க்கும் கஷ்டப்பட்டு கொண்டுருப்பீர்கள்.

இந்த குரு சிஷ்யன் உறவு என்பது பல ஜென்மங்களாக உங்களுக்கு உறவினர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் தான் உங்களின் குருவாக வருவார்கள். இப்படி வருபவர்களும் பார்த்தீர்கள் என்றால் இப்பொழுதும் கடுமையான சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஏன் என்றால் இவர்களின் முன்ஜென்மத்திலும் சண்டையோடு தான் இருந்து இருப்பார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்திலும் இது நடைபெறும்.குரு ஒன்று சொல்வார் இவன் ஒன்றை செய்துக்கொண்டு இருப்பான்.இது அனைத்து குரு சிஷ்யன் உறவிலும் தினமும் நடைபெறும் ஒரு நிகழ்வு தான்.

உங்களுக்கு குருவாக வருபவர் முன் ஜென்மத்தில் உங்களுக்கு தந்தையாக இருந்து இருக்கலாம் அல்லது அண்ணனாக இருந்து இருக்கலாம். உங்களுக்கு மனைவியாக கூட இருந்து இருக்கலாம் ஏதாவது ஒரு உறவு முறை இருந்து இருக்கும்.

நீங்கள் ஆன்மீகத்தில் உள்ளே செல்ல செல்ல அனைத்தும் அப்பொழுது மட்டுமே புரியும். நான் என்னிடம் பயில வருபவர்களுக்கு அடிக்கடி சொல்லும் வார்த்தை எனக்கும் உங்களுக்கும் முன் ஜென்ம உறவு இருக்கிறது என்று சொல்லுவேன். அதற்கு அவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பிறகு அவர்களுக்கு தெரிந்த பின்பு என்னிடம் பாசமாக பழக ஆரம்பிப்பார்கள்.

நீங்கள் உங்களின் குருவின் மூலம் இதனை அறியமுடியும் உங்கள் குருவிடம் அதற்க்கான பயிற்சியை கேட்டுப்பாருங்கள் அவர் உங்களுக்கு சொல்லி தருவார்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: