Followers

Tuesday, January 29, 2013

பூர்வ புண்ணியம் 21



வணக்கம் நண்பர்களே !

                     பூர்வ புண்ணியபகுதியில் சோதிடம் வழியாக அலசும்போது நிறைய நண்பர்கள் பாராட்டி எனக்கு போன் வழியாக வாழ்த்தி நிறைய எழுத சொன்னார்கள் அவர்களின் விருப்பத்திற்க்காக நிறைய செய்திகளை பூர்வ புண்ணியபகுதியில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். 

ஒரு நண்பர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை பின்னோட்டத்தில் அளித்துள்ளார் அவரின் மனவேதனை நன்றாக தெரிகிறது. அந்த மனவேதனை தீர நாமும் ஆண்டவனிடம் பிராத்தனை வைக்கலாம். 

பொதுவாக ஐந்தில் சனி இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதை உணரமாட்டார்கள். நான் பலபேரை இப்படி பார்த்திருக்கிறேன. அவர்களுக்காக நான் கீழ் இறங்கி இப்படி இருக்காதே உன் நிலை சரியில்லை நீ இப்படி தான் வாழ்வாய் அதனை திருத்துவதற்க்கு ஒரு வழியை ஆண்டவன் கொடுத்து இருக்கிறான் இந்த வாழ்க்கை பயன்படுத்திக்கொண்டு நீ கர்மவினையை தொலை என்றால் அனைத்தையும் கேட்டுவிட்டு அடுத்தவனை கெடுப்பதில் தான் இவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள் இருக்கும்.

இவர்கள் இப்படி செய்வது ஏன் என்றால் முன்ஜென்மத்தில் இவர்கள் செய்த செயலை இந்த ஜென்மத்திலும் செய்துக்கொண்டு இருப்பார்கள் விட்டுகுறை தொட்டகுறை என்று செய்து கொண்டு இருப்பது தான் இவர்களின் வாழ்க்கையின் அதிகபட்சமான வேலையாக இருக்கும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவன் கடவுளிடம் சென்று தான் செய்த தவறை கேட்டு மன்னிப்பு கேட்கலாம். அந்த கடவுளை இவர்களை சேர்ப்பதில்லை என்றால் இவர்கள் எந்த மாதிரியான ஜென்மங்கள் என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளலாம். இதனைப்பற்றி எழுதவேண்டும் என்றால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு போகலாம்.

மறுபடியும் திருந்துவதற்க்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுங்கள் ஆண்டவன் உங்கள் மேல் கருணை மழை பொழிவான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆத்மா ஒரே இடத்தில் தான் பிறக்கும் என்பதை எதை வைத்து சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். பல ஆராய்ச்சி செய்து ஒரு ஆத்மா மறு ஜென்மத்தில் ஏற்கனவே பிறந்த ஊரில் இருந்து எழுபது கிலோ மீட்டரில் தான் பிறக்கிறது என்று சொல்லியுள்ளார்கள். இதனைப்பற்றி எட்டு வருடங்களுக்கு முன் படித்திருந்தேன். ஆத்மாக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்ய பல நிறுவனங்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் நேரம் கிடைக்கும் போது பல புத்தகங்களில் உள்ள முகவரியை தருகிறேன். நீங்கள் அங்கு தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

நான் கூட பல ஆராய்ச்சி செய்தும் பார்த்திருக்கிறேன். பல ஆத்மாக்களிடம் தொடர்புக்கொண்டு கேட்டதற்க்கு இது தான் பதிலாக தருகிறது. அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைப்போல் ஜென்மபந்தம் தொடர்கிறது. நீங்கள் இதனைப்பற்றி தெரிந்து இருந்தால் அல்லது ஆராய்ச்சி செய்திருந்தால் உங்களின் தகவலையும் தாருங்கள் பதிவில் வெளியிடுவோம்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: