Followers

Tuesday, January 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 43



வணக்கம் நண்பர்களே !
                                          ஆன்மீக அனுபத்தில் ஒரு நல்ல கருத்தை பார்க்கலாம். 

நேற்று ஒரு நண்பர் என்னிடம் போனில் பேசினார். அவரின் தந்தையார் அவர்களின் குலதெய்வத்துடன் பேசி நல்ல விசயங்களை எங்கள் குடும்பத்திற்க்கு மற்றும் வெளிநபர்களுக்கும் வழங்கிவருகிறார் அவரிடம் எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கேட்டேன் ஆனால் அதற்கு அவர் என்னால் கற்றுக்கொடுக்க தெரியவில்லை வேறு யாரிடமாவது கற்று வா பிறகு என்னிடம் வந்து கேள் அதனை தருகிறேன் என்று சொன்னார் உங்களின் பதிவை படிக்கும் போது அதற்கு விடை கிடைத்தது என்று சொன்னார். நான் அதற்கு பார்க்கலாம் நேரம் வரும்போது உங்களுக்கு அதனைப்பற்றி கற்றுதருகிறேன் என்றேன். 

இந்த நிகழ்வு வழியாக நாம் அறிவது என்ன என்றால் புத்தகத்தை பார்த்து படித்துவிட்டு அந்த தெய்வம் எடுக்கலாம் இந்த தெய்வம் எடுக்கலாம் என்பது கதை என்று தெரிகிறது. ஒரு தெய்வத்தை தன்னுடன் வைத்திருப்பவர்கள் அவர்களால் பார்த்து கொடுத்தால் தான் உங்களிடம் வரும் இல்லை என்றால் நீங்கள் என்ன தான் மந்திரங்களை உரு ஏற்றிக்கொண்டு இருந்தாலும் உங்களால் ஒன்றும் எடுக்கமுடியாது.

இதனை நான் பல பதிவுகள் வழியாக உங்களுக்கு சொல்லியுள்ளேன். யாருக்கு என்ன கிடைக்குமோ அவர்களுக்கு தான் அது கி்டைக்கும் நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் கிடைக்காது நான் பல பேர்களை இப்படி பார்த்துவிட்டேன் உங்களின் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும் பட்சத்தில் எளிதில் கிடைத்துவிடும். உங்களின் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். உங்களால் இதனை புரிந்துக்கொள்ளகூட முடியாது. என்னால் உங்களின் பூர்வபுண்ணியத்தை சரிசெய்துக்கொண்டு இருக்கமுடியாது. எனக்கு வேறு வேலை இருக்கிறது.

உங்களின் வீட்டில் உங்களின் பெற்றோர்கள் ஒரு தெய்வத்தை எடுத்து வைத்திருந்தால் கூட நீங்கள் அதனை அவரிடம் இருந்து எளிதில் பெற்றுக்கொள்ளலாம். நான் அனைவருக்கும் கொடுக்கவே ஏற்பாடு செய்துக்கொண்டு இருந்தால் என்னால் இந்த ஜென்மத்தில் முடியாத காரியமாக தான் இருக்கும். முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்னை வந்து சந்திப்பவர்கள் உங்களால் இதுவரை பல வழிகளிலும் ஆன்மீக முயற்சி செய்து எதுவும் நடைபெறாதவர்கள் மட்டும் வாருங்கள் முதல் முறையாக ஆன்மீக முயற்சி செய்பவர்களுக்கு இது சரிப்பட்டுவராது என்பதை பலமுறை சொல்லிக்கொள்கிறேன்.  

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: