Followers

Wednesday, January 9, 2013

ஆன்மீக அனுபவங்கள் 49




வணக்கம் நண்பர்களே !
ஆன்மீக அனுபவங்கள் வழியாக மந்திரம் கற்க அனுப்பிய நபர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு கேட்கும் கேள்வி என்னுடைய ஜாதகத்தில் அதற்கு வழி இல்லையா அல்லது எதனால் என்னால் கற்கமுடியாது என்று எனக்கு தெரியப்படுத்தவும் என்று கேட்கிறார்கள்
ஜாதகம் வாங்கி பார்ப்பதன் நோக்கம் உங்களின் குணங்களைப்பற்றி அறிவதற்க்கும் ஒரு வழி. அனைவரும் கற்கலாம் உங்களுக்கு தகுந்த குரு அமையவேண்டும். 

உங்களின் முன்ஜென்மாக்களில் அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒரு வழியில் தொடர்பு இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கு குருவாக அவர் அமைவார். அதனால் தான் அனைவருக்கும் என்னால் கொடுக்கமுடியவில்லை. 

என்னிடம் முதன்முதலாக கற்கநினைத்தவர் என்னை வந்து பார்க்கும்போது இவருக்கு எனக்கும் முன்ஜென்ம தொடர்பு இருந்ததை நான் கண்டுபிடித்து உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிருந்தேன். அவர் என்னிடம் முன்ஜென்மம் பற்றி எனக்கு தெரியாது ஒரு வேளை இருக்கலாம் என்று சொன்னார் நான் அவருக்கு அனைத்தையும் கற்று தரமுடிவு எடுத்தேன். 

என்னிடம் அவர் எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டு தான் இருப்பார். சிறிது கூட பாசமாக இருக்கமாட்டார் ஆனால் நான் அவருடன் பாசமாக பழகஆரம்பித்தேன். அவருக்கு முன்ஜென்மம் பற்றி அறிந்தவுடன் என்னை உடனே பார்க்கவேண்டும் என்று தவியா தவித்துவிட்டார் இப்பொழுது அவர் என்மேல் பாசமழை பொழிகிறார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இதைப்பற்றி சொல்லிக்கொடுப்பவருக்கும் உங்களுக்கும் கண்டிப்பாக ஜென்மஉறவு இருக்கும்.

முன்ஜென்மத்தில் அவர் என்னை எதிரியாக பார்த்து பலிவாங்கி இருக்கிறார். அதை அறிந்தவுடன் உங்களை போய் இப்படி செய்து இருக்கிறேனே என்று இப்பொழுது அழுகிறார். என்னை மன்னித்துவிடுங்கள் என்று அடிக்கடி என்னிடம் கேட்கிறார். இந்த ஜென்மத்தில் என்னை கொன்றாககூட நான் ஒன்றும் சொல்லமாட்டேன். முன்ஜென்மத்தில் இவர் செய்தற்க்காக நான் ஏதாவது செய்யபோகிறேன். எனது இப்பொழுது நிலை அனைவரிடமும் அன்பு காட்டுவது மட்டுமே.

இப்பொழுது அந்த நபர் எப்படி சொல்லுகிறார் என்றால் எனக்கு இது வேண்டாம். உங்களை பலி வாங்கிய பாவத்திற்க்கு நான் எப்படி இதனை தீர்க்கபோகிறேன் என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

நீங்கள் அனுப்பும் ஜாதகங்கள் மற்றும் உங்களை பார்ப்பது அனைத்தும் முன்ஜென்ம தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்க்கு மட்டுமே அனைவரும் பொறுமையாக இருங்கள் உங்களுக்கு தகுந்த குரு கிடைப்பார். 

முன்ஜென்மத்தைப்பற்றி அறிய முயற்சி செய்யாதீர்கள் அறிந்துவிட்டால் அவ்வளவு தான் உங்களின் நிம்மதி போய்விடும். இப்படி இருந்திருக்கிறேனே என்று உங்களின் மனது உங்களை கொன்றுவிடும். 

இதனைப்பற்றி தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்த பிராய்ச்சித்தம் செய்யவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை கேள்விகுறியாக போய்விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: