Followers

Friday, January 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 54



வணக்கம் நண்பர்களே!
           ஆன்மீக அனுபவங்களில் ஒரு நல்ல கருத்தை இப்பதிவில் பார்க்கலாம். 

இன்று என்னிடம் பேசிய நண்பர் ஒருவர் சொன்னார் ஆத்மாக்கள் எல்லாம் தூயஆத்மாக்கள் தானே நீங்கள் எப்படி அதனை துர்ஆத்மாக்கள் என்று சொல்லுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். ஆத்மாக்கள் எல்லாம் கடவுளிடம் தானே வந்துள்ளது எப்படி துர்ஆத்மாக்களாக மாறும் என்றார்.

 நீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள் அந்த கார் உங்களின் வீட்டில் மட்டும் நிறுத்தி வைத்திருந்தால் அந்த கார் மாசு அடையாது. அந்த கார் சாலையில் சென்றால் தெருவில் உள்ள மாசுக்கள் அடையும் அப்படி தான் ஆத்மாக்களும் அனைத்தும் கடவுளிடம் இருந்து வந்தாலும் பல ஜென்மாக்கள் எடுத்ததால் பிறவி மாசுக்கள் அதில் இருக்கின்றன அந்த மாசுக்களை துடைத்தால் மட்டுமே ஆத்மாக்கள் கடவுளை அடையமுடியும். 

ஆத்மாக்களின் விருப்பத்தை தீர்க்க பிறப்பு எடுக்கும் அப்படி இல்லை என்றால் வேறு விதமாக இந்த ஆத்மாக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். அப்படி தீர்க்க தான் பல ஞானிகளை இப்பூமியில் இறைவன் படைக்கிறான்.இப்படி உருவாக்கப்பட்டவர்கள் ஆத்மாக்களுக்கு வீடுபேறு அளிப்பதை செய்கிறார்கள். இதனைப்பற்றி யாரும் வெளியி்ல் சொல்லமாட்டார்கள். அது அவர்களின் கடமை என்று செய்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு சில ஞானிகள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இதனைப்பற்றி சொல்லியும் உள்ளார்கள். 

ஒரு சில சாதுகளிடம் நீங்கள் ஆசீர்வாதம் செய்யுமபோது அவர்கள் கையை மட்டும் ஆட்டுவார்கள். அவ்வாறு செய்தாலே போதும் உங்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் அவர்கள் உங்களின் பிரச்சினையில் உள்ள ஆத்மாக்களை அனுப்பி உங்களுக்கும் பிரச்சினையை தீர்ப்பார்கள் அந்த ஆத்மாக்களி்ன் விருப்பத்தையும் தீர்ப்பார்கள் இரண்டு பேருக்கு இடையில் இருந்து இதனை செய்வார்கள்.

இப்படி செய்து தான் உங்களின் பிரச்சினையை தீர்க்கிறார்கள். இதனை நீங்களே பல சாதுக்களிடம் பார்த்து இருக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: