Followers

Thursday, January 17, 2013

அறிவிப்பு



ணக்கம் ண்பர்களே !
                பல நாட்களாக பதிவு பக்கம் வரமுடியவி்ல்லை எனது சொந்த வேலை காரணமாக வெளியூரில் இருந்ததால் பதிவு எழுதமுடியவில்லை. பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை நேரில் சந்திப்பர்கள் மற்றும் போனில் தொடர்புக்கொள்ளுபவர்களுக்கு ஒரு தகவலை சொல்லவேண்டும் என்று பல நண்பர்கள் எனக்கு தெரிவித்து இருந்தனர் அதனை நான் சொல்லாமல் காலம் தாழ்த்திவிட்டேன். முதல் வேலையாக இதனை சொல்லவேண்டும் என்று நினைத்து தருகிறேன். 

என்னுடன் நீங்கள் பேசும்போது எனது சக்தி உங்களின் ஆத்மாவில் செல்லுகிறது அப்படி செல்லும்போது உங்களுக்கு ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் உங்களின் உடலில் நடைபெறுகிறது. சில பேருக்கு குண்டலினி சக்தி மேல் ஏறுகிறது. சிலருக்கு முன்ஜென்மங்களைப்பற்றி தெரியவருகிறது. நீங்கள் என்ன நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியாமல் விழித்துக்கொண்டு இருப்பீர்கள். இதனை அப்படியே விட்டுவிட்டால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது உங்களை காப்பாற்ற நான் வரவேண்டும்.

நான் இன்னும் சில காலங்களில் உங்கள் அனைவருக்கும் முன்ஜென்மங்கள் மற்றும் ஆன்மீக உணர்வை பெறுவதற்க்கு வழி செய்கிறேன். அதுவரை பொறுமை தேவை. என்னிடம் பேசிவிட்டு உங்களுக்குள் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் என்னை உடனே தொடர்பு கொண்டுவிடுங்கள்.  சிறு தலைவலி ஏற்பட்டாலும் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். 

என்னடா இவர் இப்படி சொல்லுகிறார் இவருடன் பேசினால் பிரச்சினை வருகிறதா என்று நினைக்க வேண்டாம். ஒரு சிலருக்கு நடந்துள்ளது அதனால் ஒரு எச்சரிக்கை செய்தி தான். எப்படி பட்ட பிரச்சினையும் தீர்க்கலாம்.

பல நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்னை எப்படியாவது ஆன்மீகத்தில் சிறு முன்னேற்றத்தை காட்டிவிடுங்கள் என்று கேட்கிறார்கள். உங்கள் அனைவரும் சில மாதங்கள் பொறுமையாக இருங்கள். உங்களுக்கு அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: