Followers

Friday, January 18, 2013

அறிவிப்பு


ணக்கம் ண்பர்களே !

அனைவருக்கும் மீண்டும் ஒரு செய்தியை விளக்கமாக தருகிறேன். என்னுடன் பேசும்போது பல நண்பர்களுக்கு ஆன்மீக சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

என்னிடம் பேசிவிட்டு உங்களுக்கு ஏதாவது நடைபெற்றால் உடனே என்னை தொடர்பு கொண்டுவிடுங்கள். உங்களுக்கு வேண்டும் என்று இதனை நான் செய்வதில்லை உங்களின் ஆத்மா என்னிடம் இருக்கும் சக்தியை பார்க்க விரும்புகிறது அந்த ஒரு காரணத்தினால் தான்  அவ்வாறு நடைபெறும். வேறு எந்த நோக்கமும் இல்லை. 

நீ்ங்கள் என்னுடன் பேசும்போது உங்களைப்பற்றி எனக்கு தெரியாது. நான் மந்திரங்கள் மாந்தீரீகங்கள் பற்றி சொல்லுவது எல்லாம் உங்களுக்கு அனைத்தும் தெரியவேண்டும் என்ற நல்நோக்கத்திற்க்காக தான் எழுதுகிறேன். நீ்ங்கள் என்னைப்பற்றி பயம் கொள்ள தேவையில்லை. உங்களுக்கு என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்தால் உடனே என்னை தொடர்புக்கொண்டுவிடுங்கள். 

ஆன்மீகத்தில் இருக்கும் அனைத்து செய்திகளையும் சொல்லவேண்டியது என்னுடைய சேவை அந்த சேவையால் தான் ஒன்றும் விடாமல் எழுதிக்கொண்டு உள்ளேன். அதனை பார்த்து நீங்கள் பயம்கொள்ள தேவையில்லை. உண்மையை என்றும் மறைக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


1 comment:

venkatesh said...

தங்களின் மின் அஞ்சல் முகவரி?