Followers

Tuesday, January 22, 2013

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                   ஆன்மீக அனுபவங்களில் ஒரு சில பதிவுகளை நீக்கிவிட்டேன். ஒரு சிலருக்கு மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது என்பதால் அதனை நீக்கிவிட்டேன். பல பேர் என்னை வந்து பார்த்துவிட்டு மற்றும் போனில் பேசிவிட்டு செல்லுபவர்களுக்கு ஒரு வித பரவசநிலை அடைகிறார்கள். இது என்னை பெருமையாக சொல்லுவதற்க்காக இதனை சொல்லவில்லை. ஒரு அறிவிப்புக்காக சொல்லுகிறேன்.

 உங்களின் ஆத்மா தூண்டப்படுவதால் அவ்வாறு நடைபெறுகிறது. ஆத்மா தூண்டப்படும் போது உங்களுக்கு முன்ஜென்மங்களின் நினைவுகள் வரலாம். உங்களின் கர்மாக்களை குறைப்பதற்க்காக அதுவாகவே ஒரு சில ஏற்பாடுகளை அது செய்யும். அதனை நினைத்தும் நீங்கள் பயம்கொள்ளலாம். அந்த ஏற்பாடுகளை செய்யும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவிதமான உணர்வு நிலைக்கு செல்லுகிறார்கள். உங்களின் உடல் முழுசக்தியும் இழக்கும்.அது உங்களின் மனதில் கவலையை ஏற்படுத்தும்.

இப்படி செல்லும்போது அவர்கள் எனக்கு போன் செய்து நீங்கள் எதையாவது செய்கிறீர்களா என்றும் கேட்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் நான் இதனை செய்துக்கொண்டு இருந்தேன் என்றால் என்னுடைய வேலையை யார் பார்ப்பது. 

உங்களுக்கு நடைபெறுவது அனைத்தும் உங்களின் ஆத்மாக்களால் செய்யப்படும் ஒரு செயல் என்பதை முதலில் நீங்கள் நினைவில் வையுங்கள். உங்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது அதற்கு வழி என்ன என்பதை மட்டும் என்னிடம் கேட்டுக்கொள்ளலாம். 

பல ஆன்மீகவாதிகள் என்னை தொடர்புக்கொண்டு அதை செய்யாதே இதை செய்யாதே என்று சொல்லுகிறார்கள். அப்படி செய்தால் ஜாதககதம்பத்தை முடக்கும் வேலையில் இறங்குவோம் என்று சொன்னார்கள். எதைப்பற்றியும் நான் கவலைக்கொள்வது கிடையாது. ஆன்மீகவாதிகளாக இருந்துக்கொண்டு செய்யமுடியாததை சாதாரணமாக இருந்துக்கொண்டு செய்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் ஒரு கருவி என்பதை மட்டும் சொல்லுகிறேன். ஆண்டவன் இந்த கருவியை பயன்படுத்துகிறான். இந்த கருவி கோளாறு ஏற்பட்டால் அடுத்த கருவியை பயன்படு்த்துவான். 

வரும் நாட்களில் ஆன்மீக அனுபவங்களில் எதிலும் இல்லாத புது கருத்துக்கள் வரபோகின்றன என்பதை இவ்வேளையில் மகிழ்வுடன் அறிவிக்கிறேன். அதனை நீங்கள் படிக்கும்போதே உங்களுக்குள் மிகுந்த பரவசநிலையை அடையமுடியும். நன்றி நண்பர்களே


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: