Followers

Monday, January 28, 2013

கடகம் : ஐந்தாவது வீட்டு தசா பலன்



ணக்கம் ண்பர்களே!
                     கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடக ராசிக்கு ஐந்தாவது வீட்டு அதிபதி செவ்வாய். செவ்வாய் பொதுவாக ஐந்தாவது வீட்டு அதிபதியாக வருவது நல்லதல்ல. செவ்வாய் ஐந்தாவது வீட்டு அதிபதியாக வருவதால் அதிகமாக கோபகாரராக நீங்கள் இருப்பீர்கள். பூர்வபுண்ணியம் பாதிக்க செய்யும். திருத்தணி முருகனை வணங்கி உங்களின் பூர்வபுண்ணியத்தை அதிகரிக்க செய்யுங்கள். திருத்தணி முருகனை மட்டும் தான் வணங்கவேண்டும்.

கடக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்

விளையாட்டு துறையில் வெற்றி வாகை சூடுவார். செவ்வாய் இதில் நீசமாக இருப்பதால் திடீர் யோகம் குறைவாக இருக்கும். மனதில் பிரச்சனை ஏற்படும். சம்பந்தமே இல்லாமல் கோபம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன் செவ்வாய் இந்த வீட்டிற்க்கு நட்பு

தனவரவு நன்றாக இருக்கும். தனவரவில் பிரச்சினை இருக்காது வீட்டில் சந்தோஷம் இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.புத்திர பாக்கியம் இருக்கும் அதிகமாக ஆண் குழந்தைகள் இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். செவ்வாய் இந்த வீட்டிற்க்கு பகை

கடுமையான புத்திரதோஷத்தை ஏற்படுத்தும். கோபகாரர்களாக நடந்துக்கொள்வார்கள். இளைய சகோதருக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று வருவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு நான்காவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன் செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

வாகன வசதி ஏற்படும். வாகனங்கள் தீ விபத்தை சந்திக்கும். புத்திரதோஷம் ஏற்படும். புததிரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படாது. வீடு அமையும் யோகம் ஏற்படும். தாயாரின் வழியில் நன்மை உண்டு.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஐந்தாவது வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.செவ்வாயின் ஆட்சி வீடு.

கடுமையான கோபத்தை தரும். வில்லங்க வேலையில் மனது ஈடுபடவைக்கும் விளையாட்டு துறையில் வெற்றி உண்டு. இஷ்டதெய்வ அருள் கிடைக்கும் அதுவும் முருகனாக இருந்தால் கூடுதல் நன்மையளிக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது தனசு அதன் அதிபதி குரு செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

பங்கு வர்த்தகம் நல்ல பலனை தரும். திடீர் யோகம் வரும். பணவரவுக்கு குறை இருக்காது. மாமன் வழியில் உதவி இருக்கும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உருவாகும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. செவ்வாய் இந்த ராசியில் உச்சம்

திருமணத்திற்க்கு பிறகு நல்ல யோகம் ஏற்படும். துணைவரால் நல்ல வருமானம் உண்டு கூட்டுதொழில் சிறக்கும் அதே நேரத்தில் அந்த தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. செவ்வாய்க்கு இந்த வீடு சமம்

யோகம் குறைவாக இருக்கும் அடிக்கடி விபத்தினை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். துணைவரால் பிரச்சினையை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு. செவ்வாய்க்கு இந்த வீடு நட்பு

பெரியோர்களின் ஆசி கிடைக்கும் மத சம்பந்தமாக விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். நல்ல பாக்கியத்தோடு குடும்பம் நடத்துவீர்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆட்சி வீடு

வேலை வாய்ப்பு காரணமாக நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதிக கோபம் வரும் சம்பந்தமே இல்லாமல் கோபத்தை ஏற்படுத்துவீர்கள். திருமண வாழ்க்கை அந்தளவுக்கு இருக்காது. உங்களை வீட்டில் உள்ளவர்கள் உங்களை நன்றாக பயன்படுத்துவார்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பதினோராவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். செவ்வாய்க்கு இந்த வீடு சமம,

புத்திரபாக்கியம் ஏற்படும். புத்திரர்களால் நல்ல நிலைக்கு வரலாம். பணவரவு நன்றாக இருக்கும். திடீர் யோகம் ஏற்படும். நண்பர்கள் உதவி உங்களுக்கு உண்டு

ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கடகத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். செவ்வாய்க்கு இந்த வீடு பகை

புத்திரதோஷம் ஏற்படும். புத்திரர்கள் வழியாக இழப்பு ஏற்படும். அதிகமான செலவு ஏற்படும். மருத்துவசெலவு வைக்கும். மொத்தத்தில் இதில் சம்பந்தப்பட்டு தசா நடைபெறுவது நல்லதல்ல.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: