Followers

Monday, January 28, 2013

தனுசு :ஐந்தில் சனி



ணக்கம் ண்பர்களே !
                     பூர்வ புண்ணியத்தில் ஒரு வித்தியாசமான அலசலை தருகிறேன். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களின் நண்பர்களுக்கு இந்த பதிவைப்பற்றி பரிதுரைக்கவும்.

பூர்வபுண்ணியம் என்னும் ஐந்தாம் பாவத்தில் சனிகிரகம் நின்றால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி பல பதிவுகளில் மேலோட்டமாக நாம் பார்த்து இருக்கிறோம் இப்பொழுது கொஞ்சம் உள்நுழைந்து இதனைப்பற்றி தகவலை தரலாம் என்று நினைத்து இதனை தொடங்குறேன். 

மேஷத்தில் சனிகிரகம் நீசமாக அமரும். சனிகிரகம் நீசமாக அமருவது மிகுந்த பாதிப்பை தான் அது தரும். ஐந்தாம் இடமாகிய மேஷத்தில் சனிபகவான் அமர்ந்தால் உங்களின் வாழ்க்கை போராட்டமாக தான் அமையும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லாமல் சொல்லிவிடலாம்.

பொதுவாக ஐந்தில் அமரும் சனி அடுத்து பிறப்பு மனித பிறப்பாக அமையாது. எத்தனை கோடி ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்த மனித வடிவத்தை எடுத்து இருக்கிறது என்பதைப்பற்றி நான் சொல்ல தேவையில்லை பல மகான்கள் சொல்லியுள்ளார்கள். மனித பிறப்பு எடுப்பதே முன்ஜென்மத்தின் கர்மாவை தொலைப்பதற்க்கு தான் ஆத்ம மனித பிறப்பு எடுக்கிறது. 

மேஷத்தில் சனி அமரும்போது முன் ஜென்மத்தில் இவர் ஒருவரை கொலை செய்திருக்ககூடும். எப்படி கொலை செய்திருப்பார் என்றால் ஆயுதங்களால் கொலை செய்திருக்ககூடும். பாதிக்கப்பட்ட நபருக்கு பல இடங்களில் ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலை செய்திருப்பார்.

யாரை கொலை செய்திருப்பார்?

தனுசு லக்கினத்திற்க்கு இரண்டாம் வீட்டிற்க்கும் மூன்றாம் வீட்டிற்க்கும் சனி அதிபதியாகிறார். 

குடும்பத்தில் உள்ள நபரை கொன்று இருக்ககூடும். இளைய சகோதர சகோதரிகளை அல்லது பக்கத்துவீட்டுக்காரரை கொன்று இருக்ககூடும்.

யாரோ என்று பல பேரை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் சரியான நபரை சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. அவர் அவர் ஜாதங்களை வைத்து தான் இதில் முக்கிய முடிவு எடுக்கமுடியும் நண்பர்களே.

ஏன் நீங்கள் சனி அமர்ந்தால் கொலை தான் செய்திருப்பார்களா வேறு ஏதும் செய்திருக்கமாட்டாரா என்று கேட்பது புரிகிறது. ஒரு மனித உடம்பில் இந்த உயிர் என்பதை பிடித்து வைத்திருப்பவன் சனிபகவான் ஆயிற்றே அதனால் கொலை செய்திருப்பார் என்று கூறுகிறேன். சனி அமரும்போது கடுமையான பிரேத தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் அவ்வாறு சொன்னேன் நண்பர்களே.
ஒரு மனித உடலுக்கு தீங்கு செய்தால் அது பிரேத தோஷமாக மாறும்.

இதற்கு என்ன பரிகாரம்?

பாதிக்கப்பட்ட நபர் உங்களோடு தான் இருப்பார் தேடி பிடித்து அவருக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் என்ன எனக்கு நடக்கும். கண்டிப்பாக இனிமேல் மனித ஜென்மத்திற்க்கு வாய்ப்பில்லை. 

எப்படி சொல்லுகிறீர்கள்?

மனித ஜென்மம் எடுப்பதற்க்கே பல கோடி வருஷங்கள் ஆகின்றது என்று பல மகான்கள் தன்னுடைய ஆன்மாவால் உணர்ந்துக்கொண்டு இதனை சொல்லுகிறார்கள். அப்படி பார்க்கும்போது இந்த அளவுக்கு ஒரு தீங்கு செய்யும்போது அந்த ஆத்மா இறைவனிடம் செல்லாது. மனித பிறப்பிற்க்கு கீழ் தான் இருக்கும்.

மேலும் விளக்கம்

சனி ஐந்தில் அமர்ந்தவனை பார்த்தால் மிகுந்த செல்வ செழிப்போடு வாழ்வான் அனைத்து வித போகங்களையும் அந்த ஆத்மாவிற்க்கு கொடுத்து கீழ் நிலையில் தள்ளிவிட்டுவிடும். ஏன் என்றால் மறுபடி மனிதபிறப்பு எடுக்காது அல்லவா அதனால் இது வரை ஏற்பட்ட ஆத்மாவின் தாகத்திற்க்கு ஒரு சிறிய திருப்தியை கொடுத்துவிட்டு மனிதஜென்மம் அல்லாத பிறவிக்கு சென்றுவிடும்.

சனி ஐந்தில் இருப்பவரின் நிலை மிகுந்த பரிதாப நிலை தான் சரியான பரிகாரம் செய்து உங்களின் நிலை உயர்த்திக்கொள்ள ஒரு வழியை சோதிடம் மூலமாக நீங்கள் தெரிந்துக்கொள்ளவே இந்த பிறப்பு எடுத்தீர்கள் என்பதை நீங்கள் முதலில் நினைவை வைத்து ஆக்கபூர்வ வேலையில் இறங்குங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


4 comments:

Swami said...

மேஷ லக்னமாக இருந்து அதில் சனி இருந்தால் என்ன பலன்? சனி 5ஆம் இடமாக துலாத்தில் இருந்தாலும் , இதே பலன் தானா ?

Sundararajan Srinivasan said...

எங்கும் கிடைக்காத அருமையான பதிவு. நன்றி. 5 ல் சனியுடன் நிறுத்தி விடமல் மற்ற கிரகங்களை பற்றியும் எழுதவும்.

சு. ஸ்ரீனிவாசன்
கோவை.

rajeshsubbu said...

//*Swami said...
மேஷ லக்னமாக இருந்து அதில் சனி இருந்தால் என்ன பலன்? சனி 5ஆம் இடமாக துலாத்தில் இருந்தாலும் , இதே பலன் தானா ? *//

வணக்கம் பொறுமையாக இருங்கள் அனைத்தையும் எழுதுகிறேன்

rajeshsubbu said...

//*Sundararajan Srinivasan said...
எங்கும் கிடைக்காத அருமையான பதிவு. நன்றி. 5 ல் சனியுடன் நிறுத்தி விடமல் மற்ற கிரகங்களை பற்றியும் எழுதவும்.

சு. ஸ்ரீனிவாசன்
கோவை. *//

வணக்கம் கண்டிப்பாக அனைத்தையும் எழுதுகிறேன், நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்