Followers

Tuesday, January 29, 2013

ரிஷபம் : ஐந்தில் சனி



வணக்கம் நண்பர்களே !

பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்தவருகிறோம் அந்த வரிசையில் இப்பதிவில் ரிஷபராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு என்ன தவறு செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம்

ரிஷப ராசியின் ஐந்தாவது வீடு கன்னி அதன் அதிபதி புதன். புதனின் வீட்டில் சனி அமருகிறார். சனிக்கு இந்த வீடு நட்பு வீடுதான். நட்பு வீட்டில் அமர்ந்தால் என்ன விட்டுவிடவா போகிறார் கண்டிப்பாக விடமாட்டார். 

யாரை கெடுத்து இருப்பார்?

ரிஷபத்திற்க்கு சனிபகவான் ஒன்பதாவது வீட்டிற்க்கும் பத்தாவது வீட்டிற்க்கும் அதிபதியாகிறார். உங்களின் தந்தையை கெடுத்து இருக்கலாம் மற்றும் தொழில் செய்யும் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களை கெடுத்து இருக்கலாம். இது அதிகபட்சமாக பெண்களாக கூட இருக்கலாம். இந்த மாதிரி உள்ள நபர்களுக்கு நீங்கள் தீங்கு விளைவித்து இருக்கலாம். சில பேர் ஒன்பதாவது வீட்டில் குரு சம்பந்தப்பட்டால் உங்களின் குருவிற்க்கு கூட கெடுதல் செய்திருக்ககூடும்.

நாம் ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பலனை பார்த்துவருகிறோம். ஒரு ஜாதகத்தை எடுத்து பார்த்தால் 75 சதவீதம் பூர்வ பலனை நாம் சொல்லிவிடலாம். 

எப்படி கெடுத்து இருப்பார்?

தொழில் செய்யும் இடத்தில் தேவையற்றவையை பேசி அதன் வழியாக வில்லகத்தை தயார் செய்து கெடுத்து இருப்பார். தந்தையிடம் தவறான வார்த்தை பேசி அவரை மனதால் கொன்று இருப்பார். நயவஞ்சகமாக செயல்பட்டு குருவுக்கு எதிராக நடந்திருப்பார். பெரும்பாலும் அடுத்தவர்களை வைத்து இவர்கள் செயல்பட்டு இருப்பார். மறைமுக தாக்குதல் நடத்துவது இவர்களின் வேலையாக இருந்திருக்கும்.

பரிகாரம் என்ன?

சம்பந்தப்பட்ட நபரை பார்த்து அவர்களுக்கு உதவி செய்வது தான் பரிகாரம். சனி சம்பந்தப்படும்போது கர்மாவின் பாதிப்பு அதிகம். சனி கிரகம் கர்மகாரகன் என்றும் அழைக்கப்படுபவர் அதனால் நீங்கள் நேரிடையாக அவர்களை பார்த்து உதவி செய்வது தான் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: