Followers

Tuesday, January 8, 2013

ஆனந்தம்


வணக்கம் நண்பர்களே !

கோயம்புத்தூர் பயணம் இனிதாக முடிந்தது முதல் நாள் சென்றவுடன் ஒரு நண்பர் இரயில்நிலையத்திற்க்கு என்னை அழைத்துக்கொண்டு செல்ல வந்துவிட்டார் அவருடன் சென்று ஒரு உணவுவிடுதியில் மதியம் சாப்பாடு முடித்துவிட்டு ஒரு சில நேரம் ஒய்வு எடுத்துவிட்டு தொடர்பு கொண்ட நண்பர்களை அவர் அவர் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் உரையாடிவிட்டு வந்தேன் கடைசியாக என்னுடன் இருந்த நண்பர் மருதமலை முருகன் கோவிலுக்கு கூட்டி சென்றார் முருகனை தரிசித்துவிட்டு நேராக அறைக்கு வந்துவிட்டுடேன். 

மறுநாள் அதிகாலையில் ஒரு போன்கால் வந்தது உடனே உங்களை சந்திக்கவேண்டும் என்று ஒரு நண்பர் தொடர்புகொண்டார் அவரை காலை பத்துமணியளவில் தான் சென்று சந்திக்கமுடிந்தது. 

பிறகு ஒரு நண்பரை மட்டும் சென்று பார்த்துவிட்டு இரயில் நிலையம் சென்றுவிட்டுடேன். மதியம் இரயில் நிலையம் இருந்து சென்னை புறப்பட்டுவிட்டேன். பல நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். நான் இன்று தான் உங்களின் அறிவிப்பை பார்த்தேன். என்னால் உங்களை சந்திக்கமுடியவில்லை என்று சொன்னார்கள். அவர்களை மறுமுறை நான் வரும்போது சந்திக்கிறேன் என்று சொன்னேன்.. 

கோயம்புத்தூரில் உள்ள நண்பர்களை சந்தித்தது எனக்கு நல்ல ஆனந்தத்தை கொடுத்தது, நமது தளம் வழியாக இவ்வளவு நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன் என்று எண்ணும்போது நமது குருவிற்க்கு தான் நான் நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள வேண்டும் ஏன் என்றால் அவர் கொடுத்த சக்தி தான் என்னை இந்தளவுக்கு தூக்கியுள்ளது.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



No comments: