Followers

Wednesday, January 9, 2013

என்னை சந்திப்பவர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்களைப்பற்றி கேட்க வருபவர்கள் அனைவருரின் கவனத்திற்க்கும் எனது ஒரு வேண்டுகோளை கேட்டுக்கொள்ளுங்கள்

சோதிடம் என்பது உங்களை மேன்மைபடுத்திக்கொள்ள மற்றும் அகம் மற்றும் புறத்தேடுதலுக்கு உள்ள ஒரு வழி, உங்களின் அடுத்த பக்கத்தையும் பார்ப்பது தான் இதன் முதல் வேலை எனவே தனியாக கேட்கவும். உங்களை நெருங்கியவர்கள் உங்களைப்பற்றி அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தால் நலம்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் சோதிடம் பார்ப்பவருக்கே சில செய்திகள் அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துகின்றது. என்னால் அவர்களின் முழுமையான தேடுதலுக்கு பதில் அளிக்கமுடியவில்லை. அதற்க்குள் அவர்களின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

ஆன்மீக அனுபவங்களை நான் அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போது கூட இப்படியான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாருக்கும் ஒரே மாதிரியாக கூட்டத்தில் கோவிந்த போட என்னால் முடியாத காரியமாக இருக்கிறது. புரிந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு