Followers

Monday, February 4, 2013

பூர்வ புண்ணியம் 25



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வபுண்ணியத்தொடரை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொள்பவர்கள் கேட்கும் கேள்வி எப்படி இதனை நம்புவது என்று கேட்கிறார்கள். 

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு விடையை தேடுங்கள். உங்களின் ஜாதகத்தை தேடும்போது கண்டிப்பாக அதற்கான விடை கிடைக்கும் அப்பொழுது நான் சொல்லுவது உண்மை என்பது புரியும். பூர்வபுண்ணியத்தில் உள்ள பிரச்சினையை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம். 

இதனைப்படித்துவிட்டு என்னிடம் வருபவர்கள் முழுமையான திருப்தியோடு அவர்களின் பூர்வபுண்ணியத்தைப்பற்றியும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களைப்பற்றியும் தெரிந்துக்கொண்டு செல்லுகிறார்கள். பல நண்பர்கள் இதனைப்படித்துவிட்டு பயந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். பயமாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். இதில் பயப்பட என்ன இருக்கிறது அனைத்தும் தெரிந்த பிறகு அதற்காக வழியை நாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

அனைத்து மகான்களும் சொல்லும் வார்த்தை நான் பிறவிகர்மாவை தொலைப்பதற்க்காக மனிதபிறவி எடுத்து இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். அவர்கள் காட்டில் போய் தவம் இருந்தாலும் அவர்களுக்கு எனறு ஞானம் ஏற்படுகிறதோ அன்று மக்களை தேடி வந்துவிடுகிறார்கள் ஏன் அவர்கள் காட்டிலேயே பிறவிக்கர்மாவை தீர்க்கமுடியாத என்ன? 

அவர்கள் ஏன் மக்களை தேடி வருகிறார்கள்?

அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் காட்டில் இருக்கமாட்டார்கள் நாட்டில் தான் இருப்பார்கள் அதனால் அவர்கள் உடனே நாட்டிற்க்கு ஓடி வந்துவிடுவார்கள். இதனைப்பற்றி அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை.

நீங்கள் முதலில் முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்டவரை அடையாளம் காண்பது முதல் கடமை அதன் பிறகு அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு எடுக்கவேண்டியது இரண்டாவது கடமை. அடையாளம் காண்பது எளிதான காரியமாக தான் இருக்கிறது. 

என்னிடம் பேசிய ஒரு நண்பர் சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சொன்னார் என்ன என்றால் ஆன்மீகம் என்பது ஆத்மாவில் நடப்பது தானே. அனைவரும் உடலுக்கு தான் தீங்கு செய்வார்கள். உடலுக்கு தீங்கு செய்தால் செய்யட்டும். நான் எப்படியும் என் இறுதிகாலம் முடிவதற்க்குள் எனது ஆத்மாவை அந்த பரமாத்வோடு இனணத்துவிடுவேன் என்று சொன்னார். அவரை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு தான் வருகிறது. ஆத்மா தங்கிருக்கும் உடல் கோவில் போன்று இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த ஆத்மாவால் பரமாத்வை தேடமுடியும். அடையமுடியும். ஏன் என்றால் அந்த பிரபஞ்ச சக்தியிடம் நம்மை அடைவதற்க்கு நமது கர்மாவின் பாவத்தை குறைக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் கண்டிப்பாக அதனைப்பற்றி நினைக்ககூட முடியாது. 

இப்படி சொன்ன ஆள் யார் தெரியுமா?

ஐந்தில் சனி இருக்கும் ஆள். அவரின் முன்ஜென்மத்தைப்பற்றி அவருக்கு நன்றாக தெரியும். முன்ஜென்மத்தில் இவர் யாருக்கு தீங்கு செய்தார் என்றும் நன்றாக தெரியும். இவருக்கு ஜாதகத்தின் வழியாகவும் முன்ஜென்மம் தெரியும். அவராகவும் முன்ஜென்மத்தை பற்றியும் தெரிந்தவர். அதனை எல்லாம் விட்டுவிட்டு இவர் பரமாத்வைவிடம் சரண் அடையபோகிறாராம். இவர் எங்கு போகப்போகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். 

மனிதன் மிகச்சாமார்த்திய சாலியாக இருப்பான். அதிலும் தமிழன் படு சாமார்த்திய சாலி. அவன் நினைப்பது போல் ஆன்மீகம் இருக்கவேண்டும் என்று நினைப்பது.

ஆன்மீகத்தை தேடுபவன் முதலில் மனிதனை மனிதனாக பார்க்க பழகிக்கொள்ளவேண்டும். நாமும் மனிதன் தான் அடுத்தவனும் மனிதன் தான் என்று நீங்கள் பார்க்கபோகிறீர்களோ அன்று மட்டுமே ஆன்மீகம் சாத்தியப்படும். 

உங்களுடன் முன் ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்கு கீழே இருக்கலாம். அவனை நீங்கள் மனிதனாக பார்க்கும்போது உங்களின் ஆன்மீகத்தை கொண்டுச்செல்லமுடியும். இதனை நீங்கள் கற்காமல் நீங்கள் எந்த கோவிலுக்கு போனாலும் உங்களால் ஒருபடி கூட முன்னேறமுடியாது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: