Followers

Monday, February 4, 2013

பூர்வ புண்ணியம் 26



ணக்கம் ண்பர்களே !

                    இரண்டு நாட்களுக்கு முன்பு அயல்நாட்டில் இருந்து ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார், அவர் என்னிடம் பேசும் போது நீங்கள்  இந்தியாவில் இருக்கிறீர்கள் அங்கு எதை செய்தாலும் சரியான நேரத்தில் பஞ்சாங்கத்தை பார்த்து செய்கிறீர்கள். இந்தியாவில் இருந்தால் ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு ஒரு சரியான இடமாக இருக்கும் என்று நமது இந்தியாவைப்பற்றி பெருமையாக பேசினார்.

உண்மையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து நண்பர்களும் இதனை சரியாக பயன்படுத்துகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. பயன்படுத்துகிறார்கள் என்று அயல்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.

ஒரு மனிதன் இந்தியாவில் பிறப்பதே ஒரு நல்ல செயலாக தான் நான் நினைக்கிறேன். ஏன் என்றால் நல்ல ஆன்மீகசூழல் இங்கு அமைந்துள்ளது. பிற நாடுகளைப்பற்றி நான் பேப்பரில் படித்ததோடு சரி. நான் நேரில் சென்று பார்த்தது இல்லை. என் மனம் நல்ல சூழல் இந்தியாவில் இருப்பது போல் நினைக்கிறது. இங்கு பிறந்ததால் நீங்கள் இதனை எல்லாம் பயன்படுத்தி உங்களை தயார் செய்துக்கொண்டு விடுங்கள். இல்லை என்றால் கிடைத்த பிறவியை வீணாக செலவு செய்ய வேண்டியதாகிவிடும். அடுத்த பிறவியைப்பற்றி சொல்லுவதற்க்கு இல்லை. 

மனிதப்பிறவியைப்பற்றி சொல்லும்போது கோயம்புத்தூரில் இருந்து நண்பர் சீனிவாசன் என்னிடம் தொடர்புக்கொண்டு ஒரு கேள்வி கேட்டார். மனிதப்பிறவி எத்தனை வரும் என்று கேட்டார்.

சில நூல்களில் சொல்லியுள்ளார்கள் 7x7=49 பிறவி வரும் என்று இருக்கிறது .பகவத்கீதையில் கிருஷ்ணர் கடலில் எழும்பும் அலைகளை கூட எண்ணவிடலாம் ஆனால் மனிதப்பிறவி எத்தனை என்று எண்ணமுடியாது என்று சொல்லுகிறார். அதன் அதன் கர்மாவால் மறுபிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கும் என்றும் சொல்லுகிறார். 

ஒரு சில மகான்கள் கிடைத்த மனிதபிறவியை ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டு நீங்கள் கடவுளை அடைய பாருங்கள். மனிதபிறவி அரிதான ஒன்று. இதில் மட்டுமே நீங்கள் கர்மாவை தீர்த்துக்கொள்ள வழி இருக்கிறது. வேறு பிறவிகளில் உங்களால் கர்மாவை தீர்க்கமுடியாது என்று சொல்லுகிறார்கள். அதனால் கி்டைத்த ஒரு பிறவியை நன்றாக பயன்படுத்துங்கள்.

இந்தியாவில் பிறந்தும் கர்மாவின் வினை தீர்க்கவில்லை என்றால் வேறு எங்கு போய் தீர்க்கமுடியும் என்று எண்ணிப்பாருங்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையையும் விடாமல் அதனோடு உங்களின் கர்மாவின் வினையும் தீர்க்க முயற்சி செய்து அதற்கு வழி என்ன யோசியுங்கள். 

மனிதனாக பிறப்பது மிகப்பெரிய செயல். பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் இடையில் கொஞ்சகால வாழ்க்கை.இன்று தான் பிறந்தது போல் இருக்கும் மரணம் உங்களின் வாசல் கதவை தட்டும். மனிதப்பிறவியை பயன்படுத்துங்கள்.

ஜாதகம் என்பது உண்மையை சொல்லும் கருவி. அந்த கருவியை பயன்படுத்தினால் அனைத்து வினாவிற்க்கும் விடையை அளிக்கும். அந்த கருவியை பயன்படுத்தி கர்மாவை தொலைக்க ஜாதககதம்பம் வழி செய்கிறது. பயன்படுத்துவது உங்களின் கடமை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: