Followers

Tuesday, February 12, 2013

ஆன்மீக அனுபவங்கள் 67



வணக்கம் நண்பர்களே!
                    என்னுடைய அனுபவத்தை பற்றி ஆன்மீக அனுபவத்தில் தருகிறேன். இது எனக்கு சிறுவயதில் நடந்தது. இது உண்மையான ஒரு நிகழ்வு. படித்து பாருங்கள்.

எனக்கு சிறுவயதில் ஒரு நிகழ்வை நான் செய்து பார்த்தேன். அப்பொழுது நான் இரவில் படுக்கும்போது திடீர் என்று ஒன்றைப்பற்றி சிந்தனை செய்துபார்த்தேன். 

நான் படுத்த பிறகு இறந்தது போல் கற்பனை செய்து பார்ப்பேன். இறந்தவுடன் என்னை சுற்றி அனைவரும் அழுவது போல் ஒரு கற்பனை செய்வது அதன் பிறகு பிணத்தை குளிப்பாட்டுவது போல் ஒரு கற்பனை. அதன் பிறகு பாடை கட்டி அதில என்னை ஏற்றுவது போல் ஒரு கற்பனை. சுடுகாட்டில் கொண்டு வைப்பது போல் கற்பனை அதன் பிறகு எனக்கு தீ வைப்பது போல் கற்பனை. நான் எரிவது போல் கற்பனை. எரி்ந்த பிறகு என்ன இருப்பது போல் ஒரு கற்பனை. இப்படி நான் செய்யும் போது எனது கண்களில் இருந்து கண்ணீர் அப்படி வரும். இதை ஏன் நான் அப்பொழுது செய்து பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு உணர்வு இருந்தது அது என்ன என்றால் உடல் முழுவதும் எரிந்த பிறகும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தோன்றியது. அந்த வயதில் அப்படி நினைத்து பார்ப்பது கடினமான விசயம் தான் ஆனால் நான் அவ்வாறு நினைத்து பார்த்தேன். 

இப்படி பல நேரங்களில் நான் நினைத்து பார்த்தது உண்டு. பிறகு பள்ளி கல்வி படிக்கும்போது நான் படித்து பல மகான்களின் புத்தகத்தில் இது ஒரு தியானம் என்று எழுதியிருந்தார்கள். அப்பொழுது தான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது. இதனை நான் சிறுவயதில் எந்த உந்துதல் சக்தியில் இதனை செய்தேன் என்று எனக்கு புரியவில்லை. 

செத்து செத்து விளையாண்டு பார்ப்பது எனக்கு பிடித்த ஒன்றாக தான் இருந்தது.ஏன் அவ்வாறு செய்து பார்த்தேன் என்று எனது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் செய்தது என்று சோதிடம் படித்த பிறகு தெரிந்துக்கொண்டேன்.

இதனை நீங்களும் செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி நீங்கள் செய்து பார்க்கவில்லை என்றால் ஒரு முறை இதனை செய்து பாருங்கள் .கொஞ்சம் நல்ல விளையாட்டு தான். இந்த விளையாட்டை விளையாடிவிட்டு எப்படி இருந்தது என்று எனக்கு சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: