Followers

Saturday, February 16, 2013

ஆன்மீக அனுபவங்கள் 68



வணக்கம் நண்பர்களே!
 ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் ஒரு முக்கியமான கருத்தைப்பற்றி பார்க்கலாம்.

நீங்கள் அனைவரும் சோதிடர்கள். இதனை ஒரு சிலர் தொழிலாகவும் செய்துக்கொண்டு இருப்பீர்கள். வருகின்ற பாதிபேர் சோதிடத்தின் மேல் ஆர்வத்தால் இதனை கற்றுக்கொள்ளவேண்டும் என்று வருவீர்கள். இப்படி நீங்கள் கற்றுக்கொள்ளும்போது ஒன்று உங்களை அறியாமலேயே நடைபெற்றுக்கொண்டு இருக்கும். சனி குரு என்று ஒவ்வொரு கிரகத்தின் பெயரை நீங்கள் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்.

ஒவ்வொரு கிரகத்தின் பெயரை சொல்லும்போதும். அந்த கிரகத்தின் அதிபதியின் மந்திர உரு ஏறுவது போல் ஏறிக்கொண்டே இருக்கும் அவ்வாறு உரு ஏறும்போது உங்களின் வார்த்தையால் சொல்லுவது நடக்க ஆரம்பித்துவிடும். இது நல்லது சொன்னால் பரவாயில்லை கெட்டது சொன்னால் பிரச்சினை தான் வரும். ஜாதகத்தில் இல்லாதை கூட நீண்ட நாள் சோதிடம் பார்ப்பவன் சொன்னால் நடந்துவிடும். அதனால் நீங்கள் பலன் சொல்லும்போது நிதானமாக வார்த்தையை உபயோகப்படுத்துங்கள். ஏதோ விபரீதம் நடப்பது போல் தெரிந்தாலும் அதனை வெளிப்படுத்துவது சுற்றி வந்து வெளிப்படுத்துங்கள் நேரடியாக விசயத்திற்க்கு வந்துவிடவேண்டாம்.

உங்களிடம் சோதிடம் பார்ப்பவர்களிடம் அதிக ஈடுபாடு காட்டவேண்டாம் ஏன் என்றால் மனிதர்களில் கண்டிப்பாக நமக்கு எதிராக ஒரு நாள் திரும்புவார்கள். அப்படி திரும்புவதால் என்ன நடக்கும் என்றால் உங்களுக்கு ஒன்றும் நடக்காது. எதிராக திரும்பியவர்கள் வாழ்க்கை கெட்டுவிடும். அவர்கள் வாழ்க்கை மட்டும் இல்லை அவர்களின் குடும்பத்தின் நபர்களும் சேர்ந்து கெட்டுவிடுவார்கள் இது எதனால் என்று இப்பொழுது பார்க்கலாம்.

சோதிடர்கள் அனைவரின் வேலையே கர்மாவின் கணக்கை குறைக்க உதவுபவது தான் அப்படி கர்மாவின் கணக்கை குறைக்க உதவுபவன் கடவுளின் குழந்தை. சிவன் உங்களை படைத்து இதனை நீ செய் என்று உங்களை அனுப்பியுள்ளான். ஆத்மாவின் கர்மாவை குறைக்க நீங்கள் உதவி செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் அப்பொழுது உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் தீங்கு செய்ய நினைக்கும் ஆட்களுக்கு உங்களுக்கு தெரியாமலேயே அந்த நபர் மற்றும் அவர்களின் குடும்பம் மோசமான நிகழ்வுகளை சந்திக்கும்.இதனை அவர்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் தீர்க்கமுடியாது. பல தலைமுறை பாதிக்கப்பட செய்யும்.

சோதிடத்தில் அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை சனீஸ்வரன். ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் இவரை நீங்கள் உச்சரிக்கும்போதே சிவனை உச்சரிப்பது போல் தான். நீங்கள் செய்யும் வேலை சிவன் செய்யும் வேலை. ஒரு உண்மையை சொல்லட்டுமா உங்களை அழித்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு கர்மாவின் கணக்கை தீர்ப்பவர்கள். அப்பொழுது நீங்கள் யார் என்று நான் சொல்ல தேவையில்லை.

யார் மீதும் கோபம் கொள்ளவேண்டாம். ஏன் என்றால் நீங்கள் கோபம் கொண்டுவிட்டு பிறகு சாந்தமாகிவிடுவீர்கள் ஆனால் ஈசன் சும்மா இருக்கமாட்டான். உங்களுக்கு தெரியாமலேயே அவர்களின் குடும்பம் அழிவை நோக்கி சென்றுவிடும். 

உங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும். ஈசனின் திருவிளையாடல் அவர்களின் குடும்பத்தில் நடந்துவிடும். சிவன் சொத்து குலநாசம் என்பது இப்படி தான் நடைபெறும்.நீங்கள் சிவனின் ஒரு அங்கம் என்பது உங்களுக்கு ஆரம்பத்தில் தெரியாது. சரியாக பத்து வருடங்கள் சோதிட தொழிலை செய்த பிறகு உங்களுக்கு தெரியவரும்.

எனக்கு இப்படி ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. நான் ஒரு நபருக்கு ஒரு உதவி செய்யபோனேன். யாருக்கும் கிடைக்காதா ஒன்றை அந்த நபருக்கு கொடுக்கலாம் என்று நினைத்து அவருடன் நட்பாக பழகினேன். அந்த உதவி செய்வதற்க்கு நான் ஒரு ரூபாய் கூட அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. அதற்கான வேலையை செய்துக்கொண்டு இருக்கும்போது அந்த நபரால் பலவிதத்திலும் நான் ஏமாற்றபட்டேன். இது எனக்கு தெரியாது. 

அவர்களின் வீட்டிற்க்கும் ஒரு முறை சென்று இருக்கிறேன் எதற்க்காக என்றால் அந்த நபர் ஒரு ஆன்மீக முயற்சியில் ஈடுபடும்போது அவருக்கு மிகப்பெரிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டது. எனக்கு போன் செய்து என்னை காப்பாற்றுங்கள் இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன் என்று கேட்டார். சரி ஒரு உயிர் என்னால் போககூடாது என்று போய் காப்பாற்றி விட்டு வந்துவிட்டேன்.

மூன்று நாளில் அந்த நபர் எனக்கு எதிராக திரும்பினார். நான் எதுவும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் அவர்களால் நடந்தது. நான் அன்று வந்து என்னுடைய இஷ்டதெய்வத்திடம் ஒரு வேண்டுதல் வைத்தேன். இந்த திருவிளையாடல் ஏன்? எனது கர்மாவை குறைக்க ஏற்பாடு செய்தாயா என்று கேட்டுவிட்டு அமைதி அடைந்துவிட்டேன். 

இன்று என் மனம் நினைப்பது சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்பம் அழிவதற்க்கு நான் துணை போய்விட்டேனே என்று தான். அந்த நபர் தெரியாமல் செய்திருக்கலாம் ஆனால் மிகப்பெரிய பாதிப்பை விதி ஏற்படுத்த போகிறது அது எந்த ரூபத்தில் என்று தான் தெரியவில்லை.இன்று நான் பிராத்தனை செய்வது எப்படியாவது அந்த நபர் மற்றும் அவர்களின் குடும்பம் காப்பாற்றபடவேண்டும் என்று தான் தினமும் பிராத்தனை செய்கிறேன்.

நான் ஏன் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் உங்களின் சக்தி உங்களுக்கு தெரியாது அது அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிடும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: