Followers

Friday, February 1, 2013

மேஷம் : ஐந்தில் ராகு


ணக்கம் ண்பர்களே !

                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் மேஷ லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷ லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடு சிம்மம் அதன் அதிபதி சூரியன்.

யாரை கெடுத்துருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

சூரியன் தந்தைக்கு காரகன் வகிப்பதால் தந்தையை கெடுத்துருக்கலாம்.

மகம் பூரம் உத்தரம் 1 ம் பாதம் ஆகிய நடச்திரங்களை கொண்ட ராசி சிம்ம ராசி.

அடையாளம்?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். பிற ஜாதியில் உள்ளவரை கெடுத்து இருப்பார். அந்த ஆள் நல்ல உயரமானவராக இருந்திருப்பார்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடு்த்த ஆட்களோடு நிறம் நல்ல வெண்மையான நிறம்போல் இருப்பார். பிராமண ஜாதியில் அவர் இருந்திருப்பார், மிதமான உயரமாக அவர் இருந்திருப்பார்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் உள்ளவரை கெடுத்திருக்கலாம். நடுத்தர உயரம் உள்ளவராக அவர் இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

ராகுவும் சனியைபோல் தான் செய்வார். இதுவும் கண்டிப்பாக உடல்ரீதியாக தாக்கிதான் கொன்றுருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

கை அல்லது தோள் போன்ற இடத்தில் தாக்கி இருக்கலாம்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

மர்மஸ்தானத்தில் தாக்கி உயிர் போயிருக்கும்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்கலாம்.

என்ன பரிகாரம்?

அனைத்திற்க்கும் ஒரே பரிகாரம் தான் நண்பர்களே சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு ஏதும் இருக்கமுடியாது.


நண்பர்களே முன்ஜென்மத்தில் நம்மால் கெடுதல் செய்தவர்களின் விபரங்களை ஏன் தருகிறீர்கள் எப்படி தாக்கினோம் என்ற தகவலும் நமக்கு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களைப்பற்றி சிறு அடையாளத்தை தருகிறேன். நம்மால் அந்த நபரை தாக்கபட்ட இடத்தில் இப்பொழுது உங்களுக்கு அந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்படலாம் இதனை வைத்துக்கூட உங்களுக்கு முன்ஜென்மத்தை அடையாளம் காணமுடியும்.

இன்னமும் நிறைய தகவலை அவரைப்பற்றி தரமுடியும். ஏன் அவர்களின் பெயர் உங்களின் பெயர் தற்பொழுது என்ன பெயரில் அவர் இருப்பார் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தரமுடியும். நான் சோதிட தொழிலை செய்பவன் அதனைப்பற்றி சொல்லி எனது வருமானத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை காலம் சென்ற பிறகு இதனைப்பற்றி விபரங்களை தருகிறேன். 


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: