Followers

Monday, February 11, 2013

மேஷம் : ஐந்தில் செவ்வாய்


வணக்கம் நண்பர்களே!

                     மேஷ ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். சிம்மத்திற்க்கு செவ்வாய் நட்பு கிரகம். நட்பு கிரகம் என்பதால் விட்டுவிடுவாரா என்ன. முடிந்தளவுக்கு கெடுதலை தருவார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார். சொந்த குழந்தைக்கு பாதிப்பை கொடுத்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார். 

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான் இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம்.

சனி, ராகு,கேது எல்லாம் விஷயத்தை கக்குபவர்கள், செவ்வாய் நெருப்பை கக்குபவர். நெருப்பு பட்டால் வீடு எரிந்துவிடும். பூர்வபுண்ணியமும் எரிந்துவிடும்.

அடையாளம்?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். நல்ல உயரமானவராக இருந்திருப்பார். பிற மொழிகள் பேசும் திறமை இருந்திருக்கும். உறைப்பு சுவையை அதிகமாக விரும்பி சாப்பிட்டுருப்பார். உங்களின் வீட்டிற்க்கு வடமேற்க்கில் அமைந்திருப்பார்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடு்த்த ஆட்களோடு நிறம் நல்ல வெண்மையான நிறம்போல் இருப்பார். மிதமான உயரமாக அவர் இருந்திருப்பார். தமிழ் மலையாளம் போன்ற மொழிகளை பேசிருப்பார். உங்களின் வீட்டிற்க்கு தென்கிழக்கு திசையில் இவரின் வீடு இருந்திருக்கும்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார்.நடுத்தர உயரம் உள்ளவராக அவர் இருந்திருப்பார். தாய்மொழி ஹந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்க வேண்டும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

செவ்வாய் ஒரு போர்கிரகம். கண்டிப்பாக ஆயுதங்களால் தாக்கி கொன்றுருப்பார். இவர் தாக்கப்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சென்று அவர் இறந்திருப்பார்.

செவ்வாய் தீக்காயங்களுக்கு காரகம் வகிப்பதால் தீயால் கூட அவருக்கு தீங்கு ஏற்படுத்திருப்பீர்கள்.

இப்பொழுது உங்களின் மனநிலையை பார்த்தீர்கள் என்றால் தீ போல் கொதிக்கும். நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்துவான். மனதிற்க்குள் தீ எரிந்துக்கொண்டு இருப்பதை நீங்களே உணர்ந்திருக்கலாம். இந்த ஒரு விசயத்திலேயே நீங்கள் பூர்வபுண்ணியத்தை 100 சதவீதம் நம்புவீர்கள். நான் சொல்லுவதும் உண்மை என்று உணர்வீர்கள்.

நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் 

கை அல்லது தோள் போன்ற இடத்தில் தாக்கி இருக்கலாம்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

மர்மஸ்தானத்தில் தாக்கி உயிர் போயிருக்கும்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்க்கில் அல்லது தெற்க்கில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசை அறிந்துக்கொள்ளுங்கள்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையில் மற்றும் தெற்கு திசையில் இப்பொழுது வசிப்பார்.உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசை அறிந்துக்கொள்ளுங்கள்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு திசையில் மற்றும் தெற்கு திசையில் இப்பொழுது வசித்து வருவார்.  உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர் அவரை நீங்கள் வணங்கி அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். முருகனை வணங்கினால் முன்ஜென்மத்தின் நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

இதனை படித்துவிட்டு யாரும் பயம்கொள்ள தேவையில்லை. உங்களின் ஜென்மத்தை பற்றி அறி்ந்துக்கொள்ளுங்கள் அதனுடன் கர்மாவை தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: