Followers

Friday, February 22, 2013

சிம்மம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே !
                      சிம்ம ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

குரு தனது சொந்த வீட்டில் அமருகிறார். சொந்த வீட்டில் அமர்வதால் விட்டுவிடுவாரா கெடுதலை தருவார்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

கோவிலில் உள்ள குருக்கள் மற்றும் வேதம் தெரிந்தவர்களுக்கு கெடுதல் செய்திருப்பார்.

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

குருவின் வீட்டில் குரு அமர்வதால் அவரை ஏமாற்றி இருப்பீர்கள்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குருவிற்க்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வாருங்கள் அந்த நபர் உங்களை தேடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: