Followers

Saturday, February 16, 2013

பூர்வ புண்ணியம் : குரு +செவ்வாய் + சந்திரன்



வணக்கம் நண்பர்களே !
                    குரு +செவ்வாய் + சந்திரன் மூன்று கிரகங்கள் ஐந்தில் அமர்ந்தால் அதுவும் பெண்களுக்கு அமைந்தால் இது கோவில் தீட்டு ஏற்பட்டதற்க்காக ஏற்பட்ட தோஷம் என்று நாம் சொல்லிவிடலாம். 

முன்ஜென்மத்தில் இவர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்க்காக சென்று இருந்தபோது அவர்களுக்கு தீட்டு ஏற்பட்டு இருந்திருக்கும் இது அவர்களால் கவனிக்கமுடியாமல் போயிருக்கும் அந்த வழியில் இந்த தோஷம் ஏற்பட்டு இருந்திருக்கும். நீங்கள் நினைக்கலாம் இயற்கையான ஒன்று தானே இதற்கு இந்த தோஷம் ஏற்படுமா என்று நினைக்க தோன்றும். 

முன்ஜென்மத்திற்க்கு முன்ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாது அல்லவா அதனால் அவ்வாறு கோயில் நடைபெற்று இருக்கலாம். அனைத்து ஜென்மத்தையும் சோதிடம் வழியாக அறியலாம் இருந்தாலும் இப்பொழுது ஒரு ஜென்மம் மட்டும் போதும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பூர்வபுண்ணியத்தில் கொலை பாவம் மட்டும் கிடையாது அனைத்து விதமான பாவங்களும் ஏற்படும். அதனை எல்லாம் நாம் படிப்படியாக பார்ப்போம் இப்பொழுது இது மட்டும் போதும். 

இந்த ஜென்மத்தில் கோவில் செல்லும் போது உங்களுக்கு தீட்டு ஏற்பட்டால் உடனே கோவிலை விட்டு வெளியே வந்துவிடுங்கள் நேராக வீட்டுக்கு சென்று குளித்து விடுங்கள். தீட்டு நாட்கள் முடிந்தவுடன் மூன்று நாட்களுக்கு நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றீர்களோ அந்த கோவிலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் பால் அபிஷேகம் செய்துவிட்டால் போதும். உங்களுக்கு இந்த தோஷம் ஏற்படாது.

இயற்கையான ஒரு நிகழ்வு தான் இருந்தாலும் சில சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும் என்று மதம் சொல்லுகிறது அதன் படி இதனை எடுத்துக்கொண்டு நீங்கள் செய்துக்கொள்ளுங்கள்.

பெண்களை பொறுத்தவரை செவ்வாய்யின் பங்கு அதிகமாக இருக்கும். செவ்வாய் பெண்களுக்கு அதிகம் பங்கு கொள்வதால் தான் பவழத்தை பெண்கள் அணியவேண்டும் என்று  அந்த காலத்தில் சொன்னார்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: