Followers

Tuesday, February 19, 2013

அம்மா அம்மா



வணக்கம் நண்பர்களே!
                    என்னபா தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். பெற்ற தாயைப்பற்றி ஒரு பதிவு. இதுவும் பூர்வபுண்ணிய தொடர் நீங்கள் ஏதோ இது கதை என்று நினைக்கவேண்டாம் உலகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற உண்மை சம்பவத்தை அப்படியே தருகிறேன். 

நாம் அடுத்து பார்க்கபோவது குரு கிரகத்தால் ஏற்படும் பாதிப்பை பூர்வ புண்ணியம் வழியாக பார்க்கபோகிறோம். பூர்வபுண்ணியம் ஆரம்பித்தவுடன் இதனை எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் எழுதமுடியவில்லை. இப்பொழுது எழுதவேண்டும் என்று கடவுள் நேரம் கொடுத்திருக்கிறார்.

இன்று நாட்டில் நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறது. ஒரு ஆண் தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒரு பெண் தவறு செய்ய அதிக வாய்ப்பு இல்லை அதிலும் தமிழ்நாட்டு பெண் நல்ல முறையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒழுக்கம் தான் முதலில் கற்பிக்கப்படுகிறது. ஆண் ஜாதகத்தில் அவன் செய்த பாவத்தால் ஐந்தாம் இடம் அல்லது குரு பாதிக்கப்படுகிறார். பெண் என்ன பாவம் செய்தால் அவளுக்காவது இறைவன் மனமிரங்கி குழந்தை பாக்கியத்தை தரவேண்டுமே ஏன் தரவில்லை என்று என்றாவது ஒரு நாள் சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?

இன்று இருக்கும் பெண்களின் ஜாதகத்தில் குரு கிரகம் மற்றும் ஐந்தாம் வீடு அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனனப்பற்றி ஒரு உண்மை நிகழ்வை தருகிறேன் படித்து பார்த்து விட்டு எனக்கு சொல்லுங்கள்.

முன்ஜென்மத்தில் ஒரு தாயிற்க்கு மகனாக ஒருவன் பிறக்கிறான். அந்த தாய்க்கு செய்யவேண்டிய அனைத்து கடமையையும் செய்துவிட்டு அந்த ஜென்மத்தோடு முடிவு அடைகிறது. 

நன்றாக வாழ்ந்துவிட்டு வாழ்க்கை முடிவு அடைகிறது.  அந்த தாய் வெளியூரில் இருக்கிறாள். அந்த தாய் இவனை ஏதோ ஒரு விசயத்திற்க்காக தொடர்புக்கொள்கிறாள். இருவரும் சந்தித்தது கிடையாது ஆனால் இவனை அந்த தாய் தொடர்புக்கொள்கிறாள் இவனிடம் ஒரு உதவி கேட்கிறாள். இந்த உதவி என்பது யாருக்கும் கிடைக்காத ஒன்றை அவனிடம் கேட்கிறாள். அவனும் செய்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறான். 

இருவரும் போனில் மட்டுமே தொடர்புக்கொள்கிறார்கள். இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை. அந்த பையன் எவ்வளவு கருணையாக இருந்திருப்பான். இந்த தாய்க்கு தருகிறேன் என்று ஒத்துக்கொண்டு அதற்க்கான வழியை உருவாக்கிக் கொண்டு இருக்கிறான். அந்த பையனுக்கு நாட்கள் ஆனபிறகு தெரியவருகிறது நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பது முன்ஜென்ம அவனுடைய தாய் என்று தெரியவருகிறது.  

கடவுள் எவ்வளவு கருணையானவன் இருவரையும் சந்திக்க செய்கிறார். இவன் பையனாக தான் இருக்கிறான் அந்த தாய் ஒரு திருமணமாகாத பெண்ணாக இருக்கிறாள். ஒரு நாள் சந்திக்கிறார்கள். அந்த பையனுக்கு வந்திருக்கிறது யார் என்று தெரியாது. அந்த பெண்ணிற்க்கு தெரியாது. இருவரும் சந்தித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். 

நீண்ட நாளுக்கு பிறகு அந்த பெண்ணிற்க்கு தெரியவருகிறது. அந்த பெண் அந்த பையனிடம் உண்மையை சொல்லுகிறாள். இருவரும் ஏற்றுக்கொண்டு பிறகு என்ன நடக்கிறது அங்கு தான் அந்த பெண்ணின் ஜாதகம் வேலை செய்கிறது. அந்த பெண் ஒரு வாரம் பேசிவிட்டு இவனின் தொடர்பு முறித்துக்கொள்கிறது. 

அந்த பையன் என்ன பாடு பட்டு இருப்பான். அவன் அந்த பெண்ணிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை. எப்படிபட்ட ஒரு உறவு அது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு. இருவரும் ஒரு ஆத்மா என்ற நிலையில் இருந்து புதிய ஆத்மாவாக வந்த உறவை தூக்கி வீசினால் எப்படி இருக்கும். இந்த ஆத்மா வேறு உடல் தாங்கி நிற்கிறது அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை. அவன் ஏதாவது எதிர்பார்த்தால் நாம் ஏற்றுக்கொள்ளலாம். அவன் தாயிடம் என்ன எதிர்பார்க்கபோகிறான். இந்த அளவுக்கு ஆத்மாவை கண்டுக்கொண்டவன் கண்டிப்பாக கீழ்தரமாக இறங்கமாட்டான். தாய்க்கு தான் உதவி செய்திருக்கிறான். எப்படிபட்ட உதவி தெரியுமா அது. அவ்வளவு எளிதில் கிடைக்காத ஒன்றை அந்த தாய்க்காக முன் ஜென்ம தாய்க்காக கொடுக்க நினைத்த பையனை அந்த தாய் அவனுக்கு செய்தது எப்பேர்ப்பட்ட பாவம். 

இந்த உலகத்தில் ஒரே ஒரு உறவு மட்டும் மிகவலிமையான உறவு அது தாய் உறவு தான். ஒருவன சந்நியாசி ஆனாலும் ஒரு தாய் இற்ந்துவிட்டால் அந்த தாயிற்க்கு அவன் இறுதிசடங்கை அவன் காவி எல்லாத்தையும் கழட்டிவைத்துவிட்டு செய்ய வேண்டும். அவன் தந்தை செத்தால் செய்ய வேண்டியதில்லை. தாய்க்கு அவ்வளவு உயர்ந்த இடத்தை கொடுத்து உள்ளார்கள். தாய் செய்வது என்ன என்று இந்த உண்மை சம்பவம் மூலம் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். 

அனைத்து பெண்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுக்கு குழந்தைகளாக இருந்தவர்கள் இந்த ஜென்மத்தில் உங்களை தேடிவருகிறார்கள். அவர்களை உங்களால் அடையாளம் கண்டுக்கொள்ளமுடியவில்லை. அந்த குழந்தைகள் உங்கள் மீது அளவற்ற பாசத்தை வைப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டியது உங்களின் கடமை. 

அவர்களை உதாசீனப்படுத்துவதால் அவர்களின் பாவ கணக்கு உங்களின் பூர்வபுண்ணியத்தில் சேர்கிறது. உங்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் இறைவன் தடைசெய்கிறான்.ஒரு தாயைப்பற்றி நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை ஆனால் நடக்கும் தவறுகளை நான் சொல்லும்போது நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் அல்லவா அதனால் சொல்லுகிறேன். 

உங்களின் குழந்தைகள் எங்கோ ஒரு இடத்தில் இருக்கலாம் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ என்று ஒரு நாள் நீங்கள் நினைத்தால் போதும் அவர்களை மனசார வாழ்த்துங்கள். இறைவனிடம் வேண்டும்போது நீங்கள் அவர்களுக்காக ஒரு பிராத்தனணயாவது செய்யுங்கள். நீங்கள் உண்மையான தாயாக இருந்தால் இதனை படிக்கும் உங்களின் விழியில் இருந்து கண்ணீர் வரும்.

இதனைப்படித்து விட்டு நீங்கள் நினைக்கலாம் இவன் எதையாவது எழுதுவான் என்று நினைக்க தோன்றும். நான் சொல்லுவது அனைத்தும் உண்மை. இந்த உலகத்தில் உள்ள மதங்களை விட இந்து மதத்தில் மட்டும் ஒரு மிகப்பெரிய விசயம் உள்ளது அது என்ன என்றால் திதி கொடுப்பது. இந்த திதியைப்பற்றி எழுத வேண்டும் என்றால் பக்கம்பக்கமாக எழுதலாம். 

உங்களின் முன்னோர்களுக்கு உங்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு உங்களோடு வாழ்ந்தவர்களு்க்கு என்று பலதரப்பட்ட ஜீவனுங்களுக்கு திதி செய்யவேண்டும் என்று வைத்தான். உங்களோடு இருந்தவன் எங்கேயே இருக்கிறான் அவனுக்கு இந்த புண்ணியம் போய் சேரவேண்டும் அவன் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்து கொடுக்கும் ஒரு வைபவத்தை இந்து மதத்தில் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் வைத்தான் அவ்வளவு கருணையோடு நீங்கள் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் வைத்தான் ஆனால் நம்ம ஆளுங்க கருணை எல்லாம் இப்ப கேள்வி குறியாக தான் இருக்கிறது. 

அனைவரும் சுயநலத்தோடு இருக்கிறீர்கள். கடவுள் அன்பு மயமானவன் என்று வேறு மதத்தில் முதன் முதலில் சொல்லவில்லை திதி மூலமாக இந்து மதத்தில் தான் சொல்லியுள்ளார்கள். இதனை நீங்கள் புரிந்துக்கொள்வதில்லை.

உங்களின் அடையாளத்தை தொலைத்துவிட்டு சித்தரை பார்க்கிறேன் கடவுளை பார்க்கிறேன் என்று அலைந்துக்கொண்டு இருக்கிறீர்கள். இவர்கள் எல்லாம் கலியுகத்தில் மனிதன் இப்படி செய்வான் என்று தெரிந்துக்கொண்டு அவர்கள் உங்களை பார்த்து பயந்துக்கொண்டு ஒடிவிட்டார்கள். நீங்கள் தேடி அலைந்தால் நான் பொறுப்பு கிடையாது. நீங்கள் மனிதனாக மாற முயற்சி செய்யுங்கள். கடவுள் உங்களை தேடிவருவார். நான் சொல்லுவதை இந்து மதத்தில் உள்ள கருத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் நான் சொல்லுவது நூறு சதவீதம் உண்மை என்பது புலப்படும்.

கடைசியாக தலைப்பிற்க்கே வருகிறேன் அந்த பெண்ணின் ஜாதகத்தில் குரு நீசம். இந்த ஜென்மத்தில் குழந்தைபாக்கியம் என்பது கடினம். அப்படியே குழந்தை பாக்கியம் இருந்தாலும் அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறி. இது ஆண்டவனின் திருவிளையாடல்.பெண்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் ஏன் கெடுகிறது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதனை டைப் செய்யும் போது அந்த குழந்தையின் மனதை நினைத்து கண்ணீர் எனக்கு வந்தது. இந்த காலத்தில் பெற்ற தாயை கண்டுக்கொள்ளாத நேரத்தில் முன்ஜென்ம தாயிற்க்காக எவ்வளவோ செய்த அந்த பையன் மனம் என்னை வருத்துகிறது.

ஜாதககதம்பத்தை படித்தால் ஒன்று கண்ணீர் வரவேண்டும் அல்லது சிரிப்பு வரவேண்டும் இதில் இரண்டில் ஒன்று கண்டிப்பாக வருவதற்க்கு முடிந்தளவு முயற்சி செய்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




1 comment:

AMIRTHARUBAN said...

உங்களின் மனவேதனை புரிகிறது நண்பரே