Followers

Saturday, February 2, 2013

ரிஷபம்: ஐந்தில் ராகு



ணக்கம் ண்பர்களே!
                      பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் ரிஷப லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ரிஷப லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன்

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

புதனின் வீட்டில் அமருவதால் மாமனை கெடுத்திருக்கலாம்.

உத்தரம் 2 3 4 பாதம் ஹஸ்தம சித்திரை 1 2 ம் பாதம் கொண்ட ராசி கன்னி.

அடையாளம்?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். சத்திரிய ஜாதியில் இருப்பார். மிதமான உயரமாக இருப்பார்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில்  ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறத்தில் இருப்பார். வைசிய ஜாதியில் பிறந்து இருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார்.

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் ராகு அமர்திருந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார். உயரமானவாராக இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

உடல்ரீரியாக தான் தாக்கிருப்பார் அதை நேரத்தில் சதி செய்து கொன்றுருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

முகத்தில் தாக்கிருக்ககூடும் மற்றும் வயிற்றில் தாக்கியும் கொன்றுருப்பார்கள்

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் ராகு அமர்திருந்தால்

கையை தாக்கி அதிக ரத்தம் வெளிவந்ததால் அவர் இறந்திருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

அனைத்திற்க்கும் ஒரே பரிகாரம் தான் நண்பர்களே சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு ஏதும் இருக்கமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: