Followers

Wednesday, February 27, 2013

கும்பம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே!
                     கும்ப ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

கும்ப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெற்ற பிள்ளைகள் மாமன் மற்றும் பெருமாள் கோவிலில் வேலை செய்பவர்கள்.

அடையாளம்?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்க்கு பக்கமாக இருந்திருக்கும்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருந்திருப்பார்.அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

புதனின் வீட்டில் குரு அமருவதால் அவரை சூழ்ச்சி செய்து கொலை செய்திருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் பாதங்களில் தாக்கி உயிர்போயிருக்ககூடும்.

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும். 

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மிதுன ராசி மிருகசிரிஷம் 3, 4 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

மிதுன ராசி புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் குரு பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்கும். 

பரிகாரம் 

புதன்கிழமை பெருமாள் மற்றும் குருவை வணங்கி வாருங்கள். நீங்கள் தேடும் நபர் கண்களில் தெரிவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: