Followers

Thursday, February 7, 2013

கன்னி : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் கன்னி லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கன்னி லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடு மகரம் அதன் அதிபதி சனி.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். சனியின் வீட்டில் ராகு அமரும்போது சனியின் பண்பை கொடுத்துவிடுவார். தன் குழந்தைகளை கொன்றுக்க வேண்டும்.

உத்திராடம் 2 3 4 ம் பாதம் திருவோணம் அவிட்டம் 1 2 ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது மகர ராசி.

அடையாளம் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். வைசிய ஜாதியில் பிறந்திருப்பார்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

சனியின் வீட்டில் அமர்வதால் சனி செய்வதைபோல் கொலை செய்திருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் ராகு பகவான் அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட குழந்தை அல்லது அந்த நபர் உங்களோடு வசிக்கலாம் அல்லது அருகாமையில் வசிக்கலாம் எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம். அவர்களுக்கு உதவி செய்வது மூலம் உங்களின் கர்மாவை தீர்த்துக்கொள்ளலாம்.

நண்பர்களே
பல நண்பர்கள் அவர்களின் முன்ஜென்மத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுக்கொண்டுவிட்டார்கள். அவர்களுக்கு உதவியும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனை எனக்கு போன் வழியாக நிறைய கால்கள் பாராட்டி வந்துக்கொண்டு உள்ளன. அதனைப்பற்றி விபரங்களை வெளியிடகூடாது என்பதால் பதிவுகளில் வெளியிடவில்லை. வெளியிட்டால் கண்டிப்பாக நீங்கள் ஆச்சரிப்படுவீர்கள் அந்தளவுக்கு இதில் உண்மை உள்ளது.இந்த பிளாக்கை ஆரம்பித்தற்க்கு இன்று நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: