Followers

Wednesday, February 20, 2013

கேள்வி பதில்



கிருஷ்ணா said...
For Mesha Lagna...9th lord is Sitting in 5th. How do you say "it is Paavam"?

For doing good things in his previous birth,the Guru may sit in 5th place..right?

The karma might occcur because of doing Good thing or bad thing...right?

It vanishes only when U surrender God...I think so...What do u think?


பதில்

வணக்கம் நண்பரே. குரு அமரும் இடம் பாழாகும் என்பது கணக்கு படி சொல்லுகிறேன். குரு அமரும் போது ஒரு சில நன்மையும் அளிக்கும். குருவைப்பற்றி நன்மை அளிக்கும் பலனை  பழைய பதிவுகளில் எழுதியுள்ளேன் அதனை படித்து பாருங்கள். ஒரு கிரகம் முழுவதும் நன்மை அளிக்காது. நான் எழுதுவது குரு அமர்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பை மட்டும் எழுதுகிறேன். ஒரு மனிதனுக்கு ஏகாப்பட்ட கர்மங்கள் இருக்கின்றன அதனை போக்குவதற்க்கு மனித பிறப்பு எடுக்கிறது. அந்த மனித பிறப்பின் ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஜாதகம் உதவுகிறது. 

நாம் ஒரு கோவிலுக்கு செல்லும்போது கூட ஏகாப்பட்ட தடைகள் வருகிறது. நமது கர்மாக்கள் தடை செய்கிறது. நம்மால் முழு மனதோடு நம்மை ஒப்படைக்க முடியவில்லை. நாம் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் கூட முழுமனதோடு கும்பிடமுடியவில்லை. நாம் இருப்பது இந்து மதம். இந்து மதம் என்ன சொல்லுகிறது என்றால் ஒரு கையை நீ வெட்டினால் உன்னை இந்த ஜென்மத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் உன்னுடைய கையை வெட்டுவான் என்று சொல்லுகிறது. இங்கு மன்னிப்பு என்பது கிடையாது. பட்ட கர்மத்தை நீ பட்டு தான் ஆகவேண்டும். நாம் முடிந்தளவு கொலையை செய்துவிட்டு கடவுளை சரணடைந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளும். 

ஒரு மனிதனால் உடனடியாக கடவுளை சரணடைய முடியாது. அவன் கர்மாவை தொலைத்து தான் கடவுளை அடைய முடியும். உங்களால் சரணடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் சரணடையுங்கள். 

நாம் கடவுளை சரணடைய கூட வேண்டாம். எனக்கு குரு அமைந்த பிறகு நல்ல சக்தியுள்ள கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலுக்கு சென்றவுடன் உடலில் ஒரு பரவசம் ஏற்படும். அந்த பரவசம் உங்களுக்கு ஏற்படுகிறதா என்று பாருங்கள். அநத் பரவசம் அடைந்தால் போதும். பிறகு அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

நமது ஜாதகம் உணர்த்தும் அடிப்படை எப்படி நாம் ஆன்மீகவாழ்வில் முன்னேறமுடியும் என்று காட்டும் ஒரு கண்ணாடி. அந்த கண்ணாடி வைத்து நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது நமது கடமை. சோதிடத்தை வைத்து அந்த கிரகம் இப்படி இருக்கிறது உனக்கு இப்படி நடக்கபோகிறது ஒரு பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்லலாம் அப்படி நான் சொன்னால் எனக்கு பணம் வரும். நான் நன்றாக இருப்பேன் பார்க்கும் நபர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள். 

நிறைய கேள்விகளை கேளுங்கள் நண்பரே உங்கள் மூலம் நமது தளத்திற்க்கு வரும் நண்பர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


1 comment:

தனி காட்டு ராஜா said...

பதிலுக்கு நன்றி நண்பரே.....

//// நாம் முடிந்தளவு கொலையை செய்துவிட்டு கடவுளை சரணடைந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளும்.///

அப்படி எல்லாம் பண்ணினா கடவுள் நெனைப்பே வராது ... :)