Followers

Sunday, February 17, 2013

மீனம் : ஐந்தில் செவ்வாய்




வணக்கம் நண்பர்களே !
                     மீன ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

மீன ராசிக்கு ஐந்தாவது வீடு கடகம். செவ்வாய்க்கு இந்த வீடு நீசம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரரகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார்.

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். இவர் மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். இவர் அந்நியமொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு பக்கமாக இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். தாய்மொழியை மீது அதிக ஈடுபாடு இருக்கும். இவரின் வீடு வடக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

செவ்வாய் சந்திரன் வீட்டில் அமர்வதால் நீர் மற்றும் நெருப்பு வழியில் பாதிப்பு ஏற்படுத்திருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

முருக பெருமானை வேண்டுங்கள். அந்த நபர் யார் என்று உங்களுக்கு அவர் அடையாளம் காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: