Followers

Thursday, February 21, 2013

மிதுனம் : ஐந்தில் குரு



வணக்கம் நண்பர்களே !
                      மிதுன ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.

குரு சுக்ரனின் வீடான துலாத்தில் அமருகிறார். எப்பொழுதும் குருவுக்கும் சுக்கிரனுக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை. இருவருக்கும் எப்பொழுதும் பிரச்சினை. ஐந்தில் அமர்ந்தால் பிரச்சினை அதிகமாக தான் இருக்கும். 

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பிராமணர் வேதத்தை கற்றவர். சுக்கிரன் வீடு என்பதால் பெண்களுக்கும் பிரச்சினையை கொடுத்திருப்பார். பெண்களாக இருந்தால் கந்தர்வர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

இருவருக்கும் எதிரும் புதிருமாக இருந்திருக்கும் அதனால் பிரச்சினையை கொடுத்து இருப்பீர்கள்.

அடையாளம்?

துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.உயரமானவாராக இருந்திருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு தெற்கு திசையில் அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். அந்நிய மொழி பேச தெரிந்திருக்ககூடும். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். கன்னடம், மலையாளம் மொழிகள் தெரிந்திருக்கும். நடுத்தர உயரம் இருந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் குரு அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் வடகிழக்கு இருப்பார். 

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் குரு அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடகிழக்கு திசையில் இருப்பார். 

பரிகாரம்

வியாழகிழமை தோறும் குருவை வழிபட்டு வாருங்கள் அந்த நபரை அடையாளம் காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: