Followers

Thursday, February 7, 2013

சிம்மம்: ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் சிம்ம லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம லக்கினத்திற்க்கு ஐந்தாவது ராசியாக வருவது தனுசு அதன் அதிபதி குரு.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். குரு வீடு சம்பந்தப்படுவதால் பிராமணர் மற்றும் உங்களுடைய குருவை கெடுத்திருக்கலாம்.

மூலம் பூராடம் உத்திராடம் 1 ம் பாதம் ஆகிய ராசிகளை கொண்டது தனசு ராசி.

அடையாளம் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். பிற மதத்தில் உள்ளவராக இருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் வெண்மை நிறமாக இருப்பார். வெள்ளை தோல் உள்ளதுபோல் இருக்கும். பிராமண ஜாதியில் பிறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் ராகு அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். சத்திரிய ஜாதியில் பிறந்திருக்ககூடும்.

எப்படி கெடுத்திருப்பார்?

குருவின் வீடு தனுசு ராசியில் ராகு அமர்வதால் ஏமாற்றி கொன்றுக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்வதால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்வதால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்வதால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

சம்பந்தப்பட்ட நபர் உங்களுடன் வசிப்பார் அல்லது உங்களை தேடிவருவார் அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் அப்பொழுது உங்களுக்கு நல்ல காலத்தை கடவுள் தருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: