Followers

Saturday, March 30, 2013

ஆன்மீக அனுபவங்கள் 80



வணக்கம் நண்பர்களே !
                    ஒரு நண்பர் என்னை நேற்று வந்து என்னை சந்தித்தார். அவர் பேசும்போது இந்த பதிவுகளில் ஆன்மீகத்தைப்பற்றி எழுதுவதால் என்ன நடந்தவிடபோகிறது ஒரு இன்ஜீனியர் கல்வியைப் பற்றி எழுதினாலும் அதன் மூலம் வருவாயை மக்கள் ஈட்டமுடியும் ஆன்மீகத்தை வைத்து என்ன செய்யமுடியும் என்று கேள்வி கேட்டார்.

இந்த கேள்வியை காலங்காலங்மாக பகுத்தறிவுவாதிகள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவரும் கேட்கிறார் இருந்தாலும் நானும் அவரின் கேள்விக்கு பதில் அளித்தேன். முதலில் கணிணி பெரும்பாலும் வந்தபோது நான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றேன் அப்பொழுது சொன்னார்கள் இனிமேல் திருவண்ணாமலையில் கிரிவலத்திற்க்கு கூட்டம் வராது என்று சொன்னார்கள் அனைத்தும் கணிணி செய்யும் என்றார்கள். ஒருவருடம் சென்று பார்த்தால் கணிணியில் வேலை செய்யும் அனைவரும் கிரிவலம் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். எதனால் இது ஏற்பட்டது.

நீங்கள் படிக்கும் கல்வி அறிவு என்பது உங்களின் வயிற்றுக்கு சோறு போடும். உங்களின் வாழ்க்கைக்கு வசதியை தரும் ஆனால் உங்களின் நிம்மதிக்கு ஆன்மீகம் தான் சோறு போடவேண்டும். மனிதனுக்கு சோறு தான் முக்கியம் என்றால் மாட்டிற்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்னவாக இருக்கும். மிருகத்திலிருந்து மனித மிருகத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அறிவால் தான். அந்த அறிவு சோறு போடுவது மட்டும் இருக்ககூடாது. அவனை பண்படுத்திக்காட்ட வேண்டும். மனிதனை பண்படுத்திக்காட்டுவது தான் ஆன்மீகம்.

மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் அமைதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு சாப்பாடு மட்டும் போதாது அவனை பண்படுத்திக்கொண்டு நிம்மதியாக வாழ அவனுக்கு ஆன்மீகம் வேண்டும். 

இன்று மக்களுக்கு சாப்பாட்டை விட ஆன்மிகம் தான் தேவை என்றாகிவிட்டது. ஏன் என்றால் அவ்வளவு பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு ஆன்மீகம் வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகத்தை நாடுகிறார்கள்.

உண்மையில் இந்த ஆன்மிகம் இவர்களுக்கு வழிகாட்டுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்வி. ஆன்மிகத்தை வழிகாட்ட சரியான ஆள் இருக்கவேண்டும். மக்கள் தயாராக உள்ளார்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு வழிகாட்டி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆன்மிகத்தை நமது மக்களுக்கு கற்றுக்கொடுக்க ஆன்மிகவாதிகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

நமது சாமியார்களும். சங்கராச்சாயர்களும், ஜீயர்களும் தன்னுடைய மனதை விரிவுப்படுத்தி தங்களுடைய ஆன்மிகத்தால் அவர்களை வழிநடத்தாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சினை. இவர்கள் ஒரு சிறிய கூட்டத்தை வைத்துக்கொண்டு அதிகபடியான மக்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இவர்களின் நினைப்பு என்ன என்றால் இறைவனின் அவதாரங்கள் நாங்கள் என்ற நினைப்பு வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவதாரங்களாகவே மாறிவிட்டார்கள். 

மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல. இந்த மக்களுக்கு பக்தியை பரப்பவேண்டுமே தவிர தன்னுடைய காலில் மக்களை விழவைக்க கூடாது. இன்று என்ன நடக்கிறது இவர்களின் காலில் மக்களை விழவைத்து பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்று மக்களுக்கு பாடம் நடத்த வேண்டியவர்கள் மாயையில் விழுந்துவிட்டார்கள். 

சில நாட்களுக்கு முன் ஒரு நபரை சந்திக்கும்போது அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் ஐயங்காரர் எங்களுடைய குலத்தில் கையில் சங்கு சக்கரம் சின்னம் குத்திவிடுவார்கள். அப்படி நாங்கள் குத்திவிட்டால் நாங்கள் நேரிடையாக இறைவனிடத்தில் சரணடைந்துவிடுவோம் என்றார். இதனை செய்பவர்கள் ஜீயர் என்றும் சொன்னார்.

இது ஒரு சடங்கு மாதிரி தெரிகிறது. இதனால் இறைவனிடம் செல்லமுடியும் என்றால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குத்திவிடலாம். அவன் அவன் எப்படியும் இறைவனிடம் போய் சேரலாம் என்று துடியாய் துடித்துக்கொண்டு இருக்கிறான். முதலில் இந்த ஜீயர் இறைவனிடம் போய் சேருவார என்பதே சந்தேகம். அப்புறம் இத்தனை மக்களை முட்டாளாக மாற்றினால் இவர் எப்படி போய் இறைவனிடம் சேரமுடியும். மிகச்சிறந்த அறிவாளிகளை மிகச்சிறந்த முட்டாள்களாக மாற்றுகிறார் இந்த ஜீயர். இப்படி பல உண்மை சம்பவங்களை உங்களுக்கு கூறமுடியும். இதை விடுவோம்.

இறைவனை உணர்ந்த பிறகு தான் அவனிடம் போய் சேரமுடியும் முதலில் உணர்வதற்க்கு பயிற்சியை கொடுத்து பிறகு சங்கு தான் குத்துங்கள் அல்லது சூலத்தை குத்துங்கள்.உங்களுக்கு எவன் உணர்வதற்க்கு வாய்ப்பை அளிக்கிறானோ அவன் தான் உங்களுக்கு இறைவனின் தூதுவர். 

இன்று பக்தியை பரப்பவேண்டியவர்கள் பணத்தின் பின்னால் போய்விட்டார்கள். பணத்தின் பின்பு போகிறவர்கள் பக்தியை பரப்பிக்கொண்டுள்ளார்கள். நமது தளம் என்பது குறைந்த எண்ணிக்கையில் உள்ள நபர்களை கொண்ட தளம் இது. இதில் பாதிப்பேர் ஆன்மீக பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் பாருங்கள். அந்தளவுக்கு தேவை இருக்கிறது. கொண்டு செல்ல ஆட்கள் இல்லை. 

மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது எளிது. குற்றம் சாட்டுவதில் மட்டுமே நமது வேலை முடிந்துவிடகூடாது என்பதால் தான் இந்த பதிவு மூலம் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். குறைகளை நிறைகளாக மாற்ற வேண்டும். அந்த குறைகளை ஜாதககதம்பம் வழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.  பல நல்ல பணியை செய்ய திட்டமிட்டு உள்ளேன் அதனைப்பற்றி விவரம் பின்பு தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

தனுசு: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     தனுசு ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் வேலையாட்கள்.

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மொழிகளை நன்கு பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். மலையாள மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு  அல்லது மேற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

பரிகாரம்

செவ்வாய்கிழமை மற்றும் சனிகிழமை சிவனை வணங்கி வாருங்கள். உங்களை தேடி அந்த நபர் வருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, March 29, 2013

காயத்ரி மந்திர உபாசனை



வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திரத்தை செய்துக்கொண்டு வருபவர்கள் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று நீங்கள் வருத்தம் அடையவேண்டாம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மந்திரமும் உங்களின் கர்மவினையை குறைப்பதற்க்காக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை மனதில் வையுங்கள்.

நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு தெய்வம் என்றும் கைவிடாது. நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும்போது ஒரு துளி அளவுக்கூட நம்பிக்கை இல்லாமல் மந்திரத்தினை உரு ஏற்றக்கூடாது. இது தான் கடவுள் நமக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு என்று எண்ணி நீங்கள் உரு ஏற்றும்போது அந்த கடவுள் மனமிரங்கி உங்களின் பிரத்தனையை கேட்பார். இத்தனை நாள்கள் நிராசையில் வாழ்க்கை பயணத்தை கடந்தீர்கள் இனிமேல் நம்பிக்கையு்டன் வாழ்க்கை பயணத்தை கடக்க நம்பிக்கையுடன் மந்திரஉரு ஏற்றுங்கள்.

நீங்கள் செய்யும்போது இந்த விசயம் சாதாரணமாக தெரியும் ஆனால் போக போக எப்படிபட்ட பொக்கிஷத்தை நான் எடுத்துள்ளேன் என்று அப்பொழுது நீங்கள் உணரமுடியும். அனைத்தும் பலம் தரும்போது மட்டுமே சாத்தியப்படும். கண்டிப்பாக சாத்தியப்படும்.

காயத்ரி மந்திரத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்து முடித்தவுடன் என்னை தொடர்புக்கொண்டு சில கருத்துக்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில நல்ல பயிற்சியை நான் தருகிறேன். அந்த பயிற்சியின் மூலம் உங்களின் ஆன்மீக வாழ்வை மேம்படுத்திக்கொள்ளமுடியும். 

நீங்கள் புதிதாக காயத்ரி மந்திரம் செய்ய தொடங்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் வளர்பிறையில் தொடங்குங்கள். வளர்பிறை வரும் வரை பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல காரியங்கள் வளர்பிறையில் தான் தொடங்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

விருச்சிகம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மீனம் அதன் அதிபதி குரு.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் வேலையாட்கள் மற்றும் வேதங்களை ஒதுபவர்கள்

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

குருவின் வீட்டில் இருவரும் அமர்வதால் கோவில் காரியங்களில் அதிக ஈடுபாடு கொடுத்தவர்களை நீங்கள் முன்ஜென்மத்தில் பிரச்சினை கொடுத்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் இவ்வாறு ஈடுபாடு உடையவர்களை காணும் போது அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள்.

பரிகாரம்

திருசெந்தூர் முருகனை வணங்கி வாருங்கள் உங்களுக்கு வழி காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, March 28, 2013

நீங்கள் பிரபலமாக வேண்டுமா? பரிகாரம்



வணக்கம் நண்பர்களே !
                     ஒரு மனிதன் பிரபலமாக அனைவருக்கும் தெரிவதற்க்கு குரு கிரகம் அவர்களின் சுயஜாதகத்தில் நல்ல முறையில் அமரவேண்டும். குரு கிரகம் நல்ல முறையில் அமரும்போது மட்டுமே அனைவராலும் அவர் நல்லவர் என்று போற்றப்படுவார். பிரபலமாகுவார். ஒரு சிலர் நிறைய பணம் வைத்திருப்பார்கள் ஆனால் அவரை வெளியில் எவருக்கும் தெரியாது எப்படியாவது வெளியில் தெரியவேண்டும் என்று போராடிப்பார்ப்பார்கள் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நல்லமுறையி்ல் அமர்ந்து அவரின் தசா நடக்கும்போது நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள். அப்படி உங்களின் ஜாதகத்தில் குரு நல்லபடியாக அமரவில்லை என்றால் எப்படி பிரபலமாகுவது. குரு தான் காரகம் வகிக்கிறார் என்னும்போது அவரை பிடிக்கவேண்டியது உங்களின் பொருப்பு. அவரை எப்படி பிடிப்பது?

குரு கிரகத்திற்க்கு தெட்சிணாமூர்த்தி காரகம் வகிக்கிறார் அவரை வியாழக்கிழமை தோறும் சென்று தீபம் ஏற்றி வணங்கவேண்டும். ஏழுவாரம் நெய்தீபம் ஏற்றிவரவேண்டும். அப்படி நெய்தீபம் ஏற்றிவிட்டு குறைந்தது 20 நிமிடமாவது அவரின் முன் அமைதியாக அமர்ந்து நான் பிரபலமாகிவிட வேண்டும் என்று பிராத்தனை செய்யுஙகள். 

கடைசியாக ஏழாவது வாரம் தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யுங்கள். அப்பொழுது உங்களின் பிராத்தனையை அவர் ஏற்றுக்கொண்டு நீங்கள் இருக்கும் துறையில் உங்களின் ஊரில் பிரபலமாக்கிவிடுவார். உங்களின் கோரிக்கை உங்களின் துறை சார்ந்தாக இருக்கும்போது நீங்கள் இருக்கும் துறையில் நீங்கள் பிரபலமாகிவிடுவீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

துலாம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     துலாம் ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் மற்றும் வேலையாட்கள்.

அடையாளம்?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார்.இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்

கும்ப ராசி பூரட்டாதி 1 2 3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு இறந்திருக்ககூடும்.

கும்ப ராசி பூரட்டாதி 1,2 ,3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுபட்டு கொன்றுக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கும்ப ராசி அவிட்டம் 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருக்கும். 

கும்ப ராசி பூரட்டாதி 1, 2 ,3 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

பரிகாரம்

சனிக்கிழமை சிவன் கோவில் சென்று நவகிரகங்களை வணங்கி வாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சிவமே: பகுதி 2



வணக்கம் நண்பர்களே!
                     சிவத்தை சுவாசிப்போம் என்று சொன்னேன் அல்லவா அதனை எப்படி சுவாசிப்பது என்பதை இனி வரும்பதிவுகளில் பார்க்கலாம். 

மண் தன்னை விழுங்கும் என்று எண்ணி மனிதன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். மரணத்தை பார்த்து ஒடி மறைக்கிறான் இவன் மறைந்தாலும் மரணம் இவனை விடபோவதில்லை. இன்று மருத்துவரையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதற்க்கு காரணம் எப்படியும் மரணத்தை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதில் ஒரளவு வெற்றி பெற்றாலும் இவனால் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை. இறப்பின் வயதை கூட்டி இருந்தாலும் முழுமையாக வெல்லமுடியவில்லை. 

இறப்பை வெல்ல என்ன வழி என்று கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வந்தது தான் ஆன்மீகம். இறப்பு மட்டும் இல்லை என்றால் ஆன்மீகம் என்பதே இருக்காது என்று தான் சொல்லவேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் தாங்கி நிற்பது மரணத்தில் தான். உலகில் உள்ள மதங்கள் அதிகம் பேசுவது மரணத்தை தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறான். இறப்பில் இருந்து எவன் வாழ்க்கையை தொடங்குகிறானோ அவன் ஆன்மீகவாதி. 

இன்று நல்ல ஆன்மீகவாதிகளின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவனின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எட்டில் இருப்பார். எட்டாம் இடம் மரணத்தை காட்டக்கூடிய இடம். எட்டாம் இடத்தில் லக்கினாதிபதி அல்லது சனி கிரகம் நின்றால் அவன் மரணத்தை வெல்லகூடியவன். சனி ஆயுள்காரகன் அவன் எட்டில் இருக்கும்போது மரணத்தை பற்றி அதிக சிந்திக்க வைப்பார் அதனாலேயே அவன் மரணத்தை வெல்ல வேண்டும் என்று ஆன்மீகபாதையில் சென்றுவிடுவான்.

இந்த இடத்தில் இரண்டு பிரிவாக மக்கள் பிரிகிறார்கள். ஒன்று பிறப்பில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது என்று எண்ணி இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டு மரணத்தை வெல்லுவது. மற்றோன்று இறப்பில் இருந்து வாழ்க்கை தொடங்கிறது என்று எண்ணி இல்லறத்தை துறந்து சாமியாராகிவிடுவது. 

இதில் யார் மரணத்தை வென்றார்கள்?

பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறவனுக்கு மரணம் விருப்பமே இல்லாமல் அதுவாகவே வருகிறது. மனிதன் விரும்பாத ஒன்று நடக்கிறது என்றால் அது மரணம் தவிர வேறோன்றும் இல்லை. மனிதன் ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் இப்படி தான் இருக்கவேண்டும் என்று எண்ணி தன்னுடைய வாழ்க்கையை செதுக்கிறான் ஆனால் அவன் மரணத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.

சாமியார்கள் மரணம் தானே வாழ்க்கை. இறப்பில் தான் வாழ்க்கை தொடங்குகிறது. இதில் வாழ்க்கை என்பது ஏது? மரணம் தான் வாழ்க்கை என்று எண்ணி மரணத்தை வரவேற்க தயாராக உள்ளார்கள். (நான சொல்லும் சாமியார்கள் அகோரி நாகாஸ் போன்றவர்களை சொல்லுகிறேன். சொகுசு சாமியார்களை அல்ல).

ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிறக்கும் குழந்தைகள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். பிறப்பைப் பற்றி அதிக ஆராய்ச்சி செய்கிறான். இப்பொழுது மனிதர்கள் பிறக்கும் நேரத்தை எல்லாம் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் நல்லபடியாக இருக்கும் என்று எண்ணி சோதிடர்களிடம் நல்ல நேரம் வாங்கிக்கொண்டு ஆப்ரேஷன் செய்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பில் இருக்கும் எதிர்பார்ப்பில் மரணத்தில் ஒரு துளிக்கூட காட்டுவதில்லை. ஏன் காட்டுவதில்லை அவ்வளவு பயம் நிறைந்ததாகவே மரணத்தை பற்றி எண்ணுகிறான். ஆன்மீகவாழ்வின் அடித்தளமே மரணத்தைப்பற்றி ஆராய்வது தான். 

உலகில் நாத்திகரும் அதிகம்பேர் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லுவது என்ன என்றால் மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை வாழ்வு. அதன் பிறகு அழிந்துவிடும் என்று நாத்திகர்களுடைய வாதம்.அழிந்த பிறகு ஒன்றும் இல்லை என அவர்கள் வாதாடுகிறார்கள்.

அறிவியல் துணையோடு அவர்களின் வாதத்தின் மேல் நாம் பார்த்தால் அவர்கள் சொல்லுவதும் தவறு என்று தான் எனக்கு தோன்றுகிறது. நமக்கும் படிப்புக்கும் கொஞ்சம் தூரம் அந்தளவுக்கு படிப்பறிவு எனக்கு கிடையாது இருந்தாலும் ஏதோ ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கையில் எங்கேயோ எப்பொழுதோ படித்த ஒரு அறிவியல் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

ஒன்று அழிந்தால் அது மற்றோன்றாக மாறும் இது அறிவியல். பிரபஞ்ச அறிவியல் சொல்லுவது பிரபஞ்சத்திற்க்கு முடிவு இல்லை. அனைத்தும் Recycle தான். ஒரு பொருளை அழித்தால் அந்த பொருள் வேறு ஒன்றாக மாறும். அதனை அழித்தால் அது வேறு ஒன்றாக மாறும். அதனை அழித்தால் அதவும் வேறு ஒன்றாக மாறும். கடைசியில் பார்த்தால் அந்த பொருள் எங்கு இருந்ததோ அதுவாகவே அதன் இறுதி முடிவில் வரும் அனைத்தும் ரீ சைக்கிள் தான். பின்பு எப்படி மனிதன் மரணத்திற்க்கு பிறகு எதுவும் இல்லை என்று சொல்லமுடியும்.

மனிதனை அழித்தாலும் அவன் சுழற்சியாகி சுழற்சியாகி அவன் மனிதனாக தான் வருவான். சுழற்சியை பற்றி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன் ஏன் என்றால் நீங்கள் அனைவரும் நல்ல படித்தவர்கள். அந்த நம்பிக்கையில் இத்துடன் இதனை முடித்துக்கொள்கிறேன்.

பிரபஞ்சத்தில் உள்ளது வெட்டவெளி தான். இந்த வெட்டவெளியில் இல்லாததை ஒருபோதும் உருவாக்கிடமுடியாது. வெட்டவெளியில் எங்கேயே இருப்பதை தான் உருவாக்கிடமுடியுமே தவிர இதில் இல்லாததை ஒரு போதும் உருவாக்கிட முடியாது. 

எந்த ஆன்மீகத்திலும் உச்ச நிலை எது என்றால் வெட்டவெளி தான். சூன்னிய நிலை என்று சொல்லுவார்கள். எதுவும் அற்ற நிலை என்பார்கள். தியானத்தில் இதனைப்பற்றி சொல்லுவார்கள் இதன் அனுபவம் கிடைப்பது கடினமான ஒன்று. மிகப்பெரிய தியான கூடத்தில் கூட இந்த நிலையை கற்றுக்கொடுப்பதற்க்கு இரண்டு வருடபயிற்சி கொடுப்பார்கள். அந்த நிலை கூட ஒரு சில நொடியில் முடித்துக்கொள்வார்கள் அதிகமாக கற்றுதருவதில்லை. இன்றைக்கு கற்று தரும் யோகா தியானம் எல்லாம் பேருக்கு தான் ஒழிய அதில் ஒன்றும் பெரியதாக சாதித்தது கிடையாது.

வெட்டவெளி அல்லது ஒன்றும் இல்லாத நிலை அது தான் சிவனின் நிலை என்பார்கள். இந்த உலகத்தில் அதிகமாக உள்ளது வெட்டவெளி தான். ஆகாய ரூபமாக சிவனை தரிசிப்பது என்பது மிகப்பெரிய ஆனந்த நிலை. இந்த வெட்டவெளிக்குள் தான் நானும் இருக்கிறேன் நீங்களும் இருக்கிறீர்கள். இந்த கிரகங்கள் நட்சத்திரங்கள் என்று பல கோடி விசயங்கள் இருக்கின்றன.

நீங்களும் உங்கள் நண்பரும் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி தான் வெட்டவெளி. நீங்கள் இருப்பதும் வெட்டவெளி வாழ்வதும் வெட்டவெளி நாளை நீங்கள் தொலைந்து போக போவதும் வெட்டவெளி. இந்த வெட்டவெளி தான் சிவன். நீங்கள் வாழ்வதே அவனில் தான். பிறகு எங்கே போய் அவனை தேடுவது. நீ்ங்களே அவனாக இருக்கிறீர்கள். அவனே நீங்களா இருக்கிறான். 

பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கிடமுடியாது என்று சொன்னேன் அல்லவா. அப்பொழுது நீங்கள் எங்கேயோ இருந்திருக்கிறீர்கள் எங்கேயோ போகபோகிறீர்கள். நீங்கள் பிறப்பதற்க்கு முன் எங்கேயோ ஒழிந்துக்கொண்டிருந்தீர்கள் வந்து பிறந்துவிட்டீர்கள். இறப்புக்கு பிறகு எங்கேயோ போகபோகிறீர்கள். எங்கு இருந்து வந்தீர்கள்? எங்கு போகபோகிறீர்கள்?

சிவத்தை சுவாசிப்போம்..

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, March 27, 2013

பூர்வ புண்ணியம் 48




வணக்கம் நண்பர்களே !
                     பல நண்பர்களின் விருப்பம் என்ன என்றால் நிறைய எழுதுங்கள் என்கிறார்கள். கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு எழுதுவது தான் என்னுடைய விருப்பம் எழுதுகிறேன். நீங்கள் படிப்பதோடு இருந்துவிடாமல் ஆன்மீகபயிற்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கு சரியான புரிதலை தரும்.

உங்களின் மனது பல புத்தகங்கள் பல பிளாக்யை படித்தாலும் ஒரு ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்போது மட்டுமே உங்களின் அனைத்து தேடுதலுக்கும் விடை அளிக்கும். வெறும் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது. பயிற்சி மட்டுமே உங்களை நெறிப்படுத்தும். 

பூர்வ புண்ணியத்தொடரை படிப்பவர்கள் பல பேர் அவர்களின் முன்ஜென்மத்தில் தொடர்புடையவர்களை சந்தித்து உள்ளார்கள். அப்படி சந்தித்தவர்கள் அனைவரும் என்னிடம் தகவலை அனுப்பியுள்ளார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி எப்படி அவர்க்கு நாங்கள் உதவி செய்வது என்று கேட்டுள்ளார்கள்.

நீங்கள் அவர்களை கண்டுபிடித்ததே ஒரு மிகப்பெரிய விஷயம் தான் இந்த கலியுகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று என்னிடம் கேட்டவர்கள் பல பேர். இன்று அனைவருக்கும் இது சாத்தியப்பட்டிருக்கிறது எனும் போது இந்த செயல் அம்மனின் அருளை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

உண்மையில் சொல்லபோனால் நான் இதனை எழுதும் போது என்னை பார்த்து நேரிடையாகவே பல பேர் என்ன பைத்தியம்போல் எழுதிக்கொண்டிருக்கிறாய் இந்த காலத்தில் அவன் அவன் வேலையை பார்க்கிறத்திற்க்கே நேரம் இல்லை இதில் எங்கே போய் தேடுவது என்று என்னிடம் கேட்டார்கள் பல பேர் பின்னோட்டத்திலும் எழுதி அனுப்பினார்கள். 

அனைவரும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று அம்மன் மேல் உள்ள நம்பிக்கையில் நான் எழுதினேன் அதன் பலனை இன்று பலபேர் அனுபவிக்கிறார்கள். மனிதப்பிறவி எடுத்ததின் அர்த்தத்தை உணர்ந்துக்கொண்டுள்ளார்கள். 

உங்களின் முன்ஜென்மத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். அவரிடம் அன்பாக பழகுங்கள் அதுவே உங்களின் அனைத்து கர்மாவும் தொலையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கன்னி: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே !
                   கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மகரம் அதன் அதிபதி சனி.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

உங்களின் வீட்டில் வேலை செய்த வேலையாட்கள். 

அடையாளம்?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். இவர் சமஸ்கிருத மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்ந்திருக்கும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

ஆட்களோடு நிறம் நல்ல வெள்ளை நிறமாக இருப்பார். இவர் தாய்மொழி எதுவோ அதனை மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் அமர்ந்திருக்கும்.

மகர ராசி அவிட்டம் 1 2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் தாய்மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசியிருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இருப்பீர்கள் ?

மகர ராசி உத்திராடம் 2 3 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

முகம் வயிறு போன்ற இடங்களில் தாக்கி அதனால் நோய்ப்பட்டு இறந்திருக்ககூடும்.

மகர ராசி அவிட்டம் 1 ,2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மகர ராசி உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மகர ராசி அவிட்டம் 1, 2 பாதங்களில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

சனிக்கிரகத்திற்க்கு சொந்த வீடு மற்றும் செவ்வாய் கிரகத்திற்க்கு உச்ச வீடு இதனைப்படித்துவிட்டு எப்படி கெடுதல் செய்யும் என்று நினைக்கலாம். மனிதப்பிறப்பு எடுத்ததின் நோக்கம் பூர்வகர்மாவின் தாக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்க்காக தான். ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இதனை பூர்த்தி செய்யதான் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.

பரிகாரம்

செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் நவகிரங்களை வணங்கிவாருங்கள். உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுடன் தொடர்பு உள்ளவர்கள் உங்களை சந்திப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, March 26, 2013

பூர்வ புண்ணியம் 47



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வபுண்ணிய ஞாபகம் வருவதற்க்கு கூட ஜாதகத்தில் வழி இருந்தால் தான் நடைபெறும். அப்படி இல்லை என்றால் ஒரு சில நேரத்தில் வரும் அதன் பிறகு அதனை மறந்துவிடுவோம்.

ஒருவருக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் கண்டிப்பாக உங்களின் முன்ஜென்மத்தில் உள்ள நபர்கள் உங்கள் முன் வந்து நிற்பார்கள். நீங்கள் தேடிபோகவேண்டியதில்லை சம்பந்தப்பட்ட நபரும் உங்களையும் கடவுள் சந்திக்க வைத்துவிடுவார்.அப்பொழுது நான் சொல்வது சரிதான் என்று உங்களின் மனதிற்க்கு தெரியும். 

ஐந்தாவது வீட்டில் அமரும் கிரகம் மற்றும் ஐந்தாவது வீட்டில் பார்வை வைக்கும் கிரகம் ஐந்தாவது வீட்டு அதிபரின் தசாவிலும் நீங்கள் கண்டிப்பாக அந்த நபரை நீங்கள் சந்திக்கலாம்.

ஐந்தாவது வீட்டு தசா நடைபெறாதவர்கள். ஒவ்வொரு தசாவிலும் புத்தி அல்லது அந்தரகத்தில் அவரின் நினைப்பு வரும். அவர் நேரில் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். நீங்கள் தேடுவது கூட ஐந்தாவது வீட்டு தசா மற்றும் புத்தி அந்தரங்கத்தில் தேடும் போது உடனே நீங்கள் அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நீங்களே உங்களை பரிசோதனை செய்துக்கொள்ள கூட இது எளியவழி உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் ஐந்தாவது வீட்டு தசா மற்றும் புத்திகளில் உங்களின் ஆத்மா உங்களை அறியாமலேயே ஏதோ ஒன்றை தேடுவதை நீங்களே பார்க்கலாம். அப்படி அந்த ஆத்மா தேடும்போது உங்களுக்கு எந்த வேலையில் ஈடுபட்டாலும் உங்களால் அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் டைரி எழுதிக்கொண்டு வாருங்கள். அப்படி எழுதும் போது உங்களின் எண்ணங்களையும் அதில் எழுதிவையுங்கள் பிறகு உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் டைரியில் உள்ள எண்ணங்களை எடுத்துக்கொண்டு ஐந்தாவது வீட்டு தசா அல்லது புத்தியின் காலகட்டத்தில் ஒரு தேடுதல் இருந்தை உங்களின் டைரியில் உள்ள எண்ணங்கள் பிரதிபலிக்கும்.

அனைத்தையும் நாம் சோதனை செய்துப்பார்த்தால் தான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பதை காணமுடியும். உங்களை சோதனை செய்யும்போது பலவித நிகழ்வுகள் உங்களை சுற்றி நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம்.உங்களை அறிந்த பிறகு தான் முன்ஜென்ம வினைகளை முறியடிக்கமுடியும்.


திருமந்திரத்தில் ஒரு பாடல் உள்ளது. இப்பொழுது சினிமா பாடல்களில் ஹிட் பாடல் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது போல திருமந்திரத்தில் ஒரு ஹிட் பாடல் உள்ளது. திருமந்திரம் படித்தவர்கள் அனைவருக்கும் இது ஹிட் பாடல் என்று தெரியும். அதனை உங்களுக்கு சொல்லுகிறேன். திருமந்திரத்தில் 2611 பாடல் இது.

"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனரு ளாலன்றே" 

தன்னை அறிந்தபிறகு தான் அனைத்து ஆன்மீகமும் உங்களுக்கு நடைபெறும்.மனிதபிறவி என்ன என்பது அப்பொழுது மட்டுமே தெரியவரும். பூர்வபுண்ணியம் என்ன என்று அப்பொழுது தான் தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


சிம்மம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே !
                    சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது தனுசு அதன் அதிபதி குரு.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

சகோதரர்கள்,கோவிலில் வேலை செய்பவர்கள். மதகுருமார்கள் வயது முதியோர்கள்

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

குருவின் வீட்டில் செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் சேர்ந்து அமரும்போது முன்ஜென்ம பாதிப்பு அதிகம் ஏற்படுத்தும். ஐந்தாவது வீட்டிற்க்கு காரகன் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான் அவர் வீட்டில் இரு கெடுதல் கிரகம் அமரும்போது முன்ஜென்மத்தில் கடுமையான பாவம் செய்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். 

முன்ஜென்மத்தில் கெடுதல் அதிகம் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்துவிட்டது அதனால் நொந்து உட்கார்ந்துவிடாமல் அடுத்த வழி என்ன என்று யோசிக்க வேண்டும். எப்படி பூர்வபுண்ணியத்தை சரிசெய்வது என்று சிந்தனை செய்யும்போது கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவார்.

பரிகாரம்

செவ்வாய் மற்றும் சனி தோறும் சிவன் கோவில் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். சம்பந்தப்பட்ட நபர் உங்களை தேடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

கடகம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கடக ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

சகோதர்கள் மற்றும் வேலையாட்கள்.

அடையாளம்?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு உயிர் போயிருக்கும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு  மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

செவ்வாயின் வீட்டிலேயே சனி அமரும் போது இருவருக்கும் யுத்தம் அதிகமாக தான் இருக்கும். அதன் பாதிப்பை அதிகமாக சம்பந்தப்பட்ட நபர் அனுபவிக்கவேண்டும். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களால் பிறரின் வாழ்க்கையை கெடுக்கும் வாய்ப்பு இருப்பதால் எந்த விசயத்திலும் நிதானமாக முடிவு எடுக்கவேண்டியது அவசியம்.

பரிகாரம்

செவ்வாய் பகவானையும் சனி பகவானையும் வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சொல்ல நினைக்கிறேன்



வணக்கம் நண்பர்களே !
                     நமது கட்டண சேவையில் ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்கள் சொல்லுவது என்ன என்றால் பிறரிடம் நாங்கள் ஜாதகப்பொருத்தம் பார்க்கும்போது ஜாதகம் பொருத்தம் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் நீங்கள் ஜாதகம் சரியில்லை என்று சொல்லுகிறீர்களே என்று சொன்னார்கள். 

அதிகப்பட்சமாக ஜாதகர்கள் பொருத்தம் பார்ப்பது நட்சத்திரப்பொருத்தம் மட்டுமே. நட்சத்திரப்பொருத்தத்திற்க்கு ஜாதக தேவையில்லை. நட்சத்திரப்பொருத்தம் அவர்கள் வாழ போகிற வாழ்க்கையை சொல்லாது. இருவரின் ஜாதகத்தையும் நன்றாக பார்த்துவிட்டு தான் ஜாதகப்பொருத்தம் பார்க்கிறேன். அதனால் பிறர் சொல்லுகிறார் ஜாதகம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கவேண்டாம். அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தான் ஜாதகப்பொருத்தம் பார்க்கிறேன். 

பல நண்பர்கள் என்னிடம் பேசும்போது நீங்கள் நிறைய எழுதுங்கள் என்று சொல்லுகிறார்கள் என்னால் எழுதமுடிந்ததை எழுதுகிறேன். நான் சொல்ல நினைப்பதை அனைத்தையும் எழுதவேண்டும் என்றால் ஒரு நாள் ஐம்பது பதிவாவது போடவேண்டும் அது முடியாத காரியம். முடிந்தளவுக்கு எழுதுகிறேன். நீங்கள் இவ்வாறு கேட்பது உங்களின் அறிவு வளர்ச்சி மட்டும் தான் அடையுமே தவிர உங்களின் ஆன்மா வளர்ச்சி அடையாது. நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தால் மட்டுமே ஆன்மா வளர்ச்சி அடையும். படிப்பது அனைத்தும் மனதில் குப்பை கொட்டும் செயல். 

பல நண்பர்கள் என்னிடம் நன்றாக பழகிவிட்டு பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி கேட்கிறார்கள். அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி வகுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டால் அதனைப்பற்றி பதிவில் அறிவிப்பு வெளியிடுகிறேன் அது வரை அதனைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் எதனை செய்தாலும் நமது அம்மனை கேட்டபிறகு தான் அந்த செயலில் இறங்குவது வழக்கம். 

பல சோதிடர்கள் பங்குசந்தை சோதிடத்தைப்பற்றி வகுப்பு எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அவர்களின் வகுப்பிற்க்கு சென்று கற்றுக்கொள்ளுங்கள். அம்மன் அதற்க்கான நேரத்தை இன்றுவரை தரவில்லை. 

உங்களால் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன் நீங்களே கண்டுபிடித்து கற்றுக்கொள்ளுங்கள்.உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள்.எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

ஆன்மீகப்பயிற்சிகள் ஜாதககதம்பம் வழியாக நடந்துக்கொண்டு இருக்கிறது விருப்பம் இருப்பவர்கள் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். கட்டணம் எல்லாம் கிடையாது. இலவச சேவை தான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, March 25, 2013

மிதுனம் : ஐந்தில் செவ்வாய்+சனி


வணக்கம் நண்பர்களே!
                     மிதுன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது துலாம். அதன் அதிபதி சுக்கிரன்.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

இவரின் குழந்தைகள்,சகோதர்கள், மாமனின் துணைவியார் மற்றும் பெண் வேலையாட்கள். 

அடையாளம்?

துலாம் ராசியில் சித்திரை 3,4 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.உயரமானவாராக இருந்திருப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு தெற்கு திசையில் அமைந்திருக்கும்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். உயரமானவராக இருக்ககூடும். அந்நிய மொழி பேச தெரிந்திருக்ககூடும். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும். 

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். கன்னடம், மலையாளம் மொழிகள் தெரிந்திருக்கும். நடுத்தர உயரம் இருந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கை தோள் மற்றும் மர்ம ஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தொடை பாதம் கணுக்கால் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயம் மற்றும் மர்மஸ்தானத்தில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

துலாம் ராசியில் சித்திரை 3, 4 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கில் மற்றும் வடகிழக்கு இருப்பார். 

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.

துலாம் ராசியில் விசாகம் 1, 2, 3 பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடகிழக்கு திசையில் இருப்பார். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

சுக்கிரனின் வீடாகிய துலாத்தில் சனி அமர்ந்தால் உச்ச வீடாக இருந்தாலும் கெடுதலை தரும். சனி மற்றும் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் சேர்ந்து அமரும்போது காம ரீதியாக அதிகமான பாதிப்பை பிறர்க்கு கொடுத்திருக்ககூடும். சுக்கிரன் கலைக்கு காரகம் வகிக்கிறார். நடிகர் நடிகைகள் கூட சுக்கிரனி்ன் ஆதிகத்தில் வருபவர்கள் தான். காம ரீதியாக நடிகைக்கு கூட நீங்கள் கெடுதலை கொடுத்திருக்கலாம்.

இதனைப் படித்துவிட்டு நீங்கள் நமக்கு தான் இப்படி ஆகிவிட்டது அதனால் நமக்கு பிரச்சினை தான் என்று அப்படியே உட்கார்ந்துவிடாமல் இதிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் பார்க்கவும்.

பரிகாரம்

செவ்வாய்க்கும் சனிக்கும் சேர்ந்து பரிகாரம் செய்யுங்கள் கூடுதலாக சுக்கிரனுக்கும் பரிகாரம் செய்யுங்கள். சம்பந்தப்பட்ட நபர் உங்கள் முன் வருவார்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

பூர்வ புண்ணியம் 46



வணக்கம் நண்பர்களே!
                    பகவத்கீதையில் மனித பிறப்பைப்பற்றி என்ன கிருஷ்ணர் சொல்லியுள்ளார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மனிதபிறவி என்பது மிகவும் அரிது. மிகவும் புண்யம் செய்திருந்தாலும் கூட பகவானுடைய க்ருபையின்றிக் கிடைக்காது. அப்படி கிடைத்தது கூட பகவானை அடைவதற்க்காகதான். இந்த அருமையான மனிதப் பிறவியைப் பெற்று மனித வாழ்க்கையின் பயனை அடையாமல் அதை இழந்துவிடுகிறான். பகவானை அடைவதற்க்காக சாதனை புரிபவருக்காக தான் மனிதப் பிறவி பயனுள்ளதாகிறது. 

புலன்கள் மூலம் அடையும் இன்பங்களைப் பெறுவது மனிதன் சுகம் என்ற நினைத்துவிட்டால் பிறகு திரும்ப திரும்ப பற்பல பிறவிகளில் பிறந்து கஷ்டத்தை அனுபவிக்கவேண்டியது தான். திரும்ப திரும்ப பிறவிகள் எடுப்பது மிகப்பெரிய துன்பமாகிவிடும். 

எந்த லட்சியத்திற்க்காக மனிதப்பிறவி கிடைத்ததோ அந்த லட்சியத்தை நிறைவேற்றி கொண்டுவிடவேண்டும். இந்த உடல் நொடியில் அழிவது காலதாமதம் செய்தால் லட்சியம் ஈடேறாது. அதனால் சுகம் தான் வாழ்க்கை என்று நினைத்துவிடாமல் அவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். கவனக்குறைவினால் இந்த மனித ஆயுள் வீணாகிவிட்டால் பிறகு நொந்து பயனில்லை. இந்த மனிதப்பிறவியில் பரமாத்மாவை அறிந்து கொண்டுவிட்டால் நன்று. அறியாவிட்டால் மிகப்பெரிய இழப்பு என்கிறார்.

இந்த கர்மாவை நீங்கள் தொலைக்க வேண்டும் என்றால் முன்ஜென்மத்தில் நீங்கள் பிறருக்கு செய்த குற்றத்திற்க்காக அவர்களுக்கு நல்லதை செய்து அவர்கள் மூலம் நீங்கள் பரம்பொருளை அடையவேண்டும்.

நீங்கள் எடுத்த மனிதப்பிறவியை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும். காலம் கடந்த ஞானம் தவறுதலை உண்டாக்கிவிடும். காலம் போனபிறகு பக்தி அது இது என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் அது வீணான ஒன்று. உங்களுக்கு மனிதப்பிறப்பு கிடைத்தால் அது அதிசயத்திலும் அதிசயம். மனிதப்பிறப்பு போல் வேறு எந்த பிறப்பும் சிறப்பாக அமையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, March 24, 2013

சிவமே : பகுதி 1



வணக்கம் நண்பர்களே!

இன்று பல ஆன்மீகவாதிகள் சிவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். சிவனின் ஆற்றல் வெளிப்பட்டுவிட்டது அவர் அந்த ஊருக்கு வந்துவிட்டார் இந்த ஊருக்கு வந்துவிட்டார் நீங்கள் அவரை வணங்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இன்று சிவவழிபாடு மிகப் பிரபலமாகிவி்ட்டது. இப்படி இருக்கும் நேரத்தில் என்னால் சிவனைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதிய தொடரை ஆரம்பிக்கிறேன். இதனை எழுதுவதற்க்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டால் என்னை எழுதவைப்பவன் யாரோ அதனால் அவனை நம்பி இறங்கிவிட்டேன். தொடரின் முடிவில் தான் வெற்றி தெரியும் தெரியும்.

இருட்டு அறையில் கருத்த பூனையை தேடும் குருட்டு உலகம் இது. உங்களை குருடர்களாக மாற்றிவிட்டார்கள். உண்மையான சிவத்தை காட்டும் புதிய தொடர் இது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிகிரகத்தில் மட்டும் மனித இனம் பெருபான்மையாக இருக்கிறது. வேற்றுக்கிரகத்தில் மனிதன் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள் ஆனால் இன்றும் நிருப்பிக்கபடவில்லை. எனது தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லுவார் மண்ணை ஆண்டவன் மண்ணத்தில் கோடி இனி ஆள்பவன் எத்தனை கோடி என்பார். இதன் அர்த்தம் இந்த மண்ணை ஆண்டவன் எண்ணில்லாடங்க கோடி இனி ஆள்பவர்கள் எத்தனையோ கோடி .
உங்களுக்கு முன் இருந்தவன் எல்லாம் எங்கே போனான். அனைவரும் மண்ணாகி போனான். ஒருவன் இறந்தால் அவனை புதைக்கிறார்கள் அல்லது எரிக்கிறார்கள் எப்படியோ அவன் மண்ணோடு மண்ணாக போகிறான்.

உன் தாத்தா உன் தாத்தாவிற்க்கு தாத்தா அனைவரும் எங்கே போனார்கள். இந்த மண்ணில் புதைந்து போனார்கள். அவர்கள் மேல் நின்று என் வம்சம் அதை செய்தது இதை செய்தது என்று வீரம் பேசிக்கொண்டு இருக்கிறாய். இந்த உலகம் முழுவதும் பிணக்குழி தான் நிறைந்திருக்கிறது. இந்த பிணக்குழியில் இருந்து தான் நீங்கள் உண்ணும் உணவு உற்பத்தியாகிறது. உலகத்தில் உள்ள அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள் தான். என்ன உருமாறி வருகிறது. 

நீங்களே பார்த்திருக்கலாம் உங்கள் வீட்டில் ஆடு மாடுகள் செத்தால் என்ன செய்வீர்கள் அதனை ஒரு தென்னை மரத்தின் அடியில் புதைப்பீர்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் தென்னை மரத்திற்க்கு நல்ல உரம் அதனால் அவ்வாறு செய்கிறோம் என்று சொல்லுவீர்கள். அந்த தென்னை மரத்தில் இருந்து இளநீர் காய் பிடிங்கி குடிப்பீர்கள். என்றாவது ஒரு நாள் அந்த தென்னை மரத்தின் வேரிடம் நீங்கள் உனக்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது என்று கேடடது உண்டா? அதற்கு உணவு நீங்கள் புதைத்த மாமிசத்தில் இருந்து தான் கிடைத்தது என்று சொல்லும். இதைப்போல் தான் அனைத்தும் உங்களுக்கு முன் இறந்தவர்கள் தான் உங்களுக்கு உணவாக வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அது தான் உண்மை. 

இந்த உலகத்தில் மனிதன் மனிதனை தான் சாப்பிடுகிறான். இன்று நீங்கள் ஆத்திகமோ அல்லது நாத்திகமோ பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களை நாளை இந்த மண் தின்னபோகிறது. மண் தின்றதை உங்களின் வாரிசுகள் உங்களை தின்பார்கள். இது தான் சுழற்சி. 

இந்து மதத்தில் உணவை வணங்கி சாப்பிடவேண்டும் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. சாப்பிடுவதற்க்கு முன்னால் அந்த உணவை வணங்கி விட்டு சாப்பிடுவார்கள். இது எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதன் அர்த்தம் நமக்கு இன்று கடவுள் இந்த உணவைக்கொடுத்துள்ளாரே அவருக்கு நன்றி என்று சொல்லுவது. உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா உன் முன்னோர்களை நீ உணவாக உண்கிறாய் அவர்களின் உடல் இன்று மாறி நமக்கு உணவாக வருகிறது அவர்களுக்கு நன்றி இது தான் உண்மையான அர்த்தம்.

நான் பலபேர்களிடம் சொல்லும் வார்த்தை இந்த மண்ணை மிதித்து நடக்காதே மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லுவேன். இன்று நாம் அகங்காரத்துடன் அதன் மீது நின்று ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மண் நாளை உன்னை தின்னும். இது தான் விதி.

இந்த உலகம் மிகப்பெரிய சுடுகாடு. பல லட்சகோடி மக்களை காவு வாங்கிய இடம் இந்த பூமி. அனைவரும் இந்த பூமியில் புதைந்து போயிருக்கார்கள்.  இந்த சுடுகாட்டில் நின்றுக்கொண்டு தான் நீங்களும் நானும் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

சிவனின் இருப்பிடம் சுடுகாடு. இந்த உலகமே மிகப்பெரிய சுடுகாடு ஆக இருக்கும்போது அந்த சிவனை அவனிடம் நின்றுக்கொண்டே சிவனை தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் குருடர்கள் தானே?

சிவத்தை சுவாசிப்போம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, March 22, 2013

பங்குச்சந்தை சோதிடம் 4



வணக்கம் நண்பர்களே !
                    பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம். பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்கும் கேள்வி பங்குச்சந்தை சோதிடத்தை வகுப்பு எடுங்கள். நாங்கள் கட்டணத்தை தருகிறோம் என்று சொன்னார்கள். நான் உங்களுக்கு ஏற்கனவே பதிவு மூலம் சொல்லியுள்ளேன். நான் சோதிடத்திற்க்கு என்று வகுப்பு எடுப்பது கிடையாது. 

பங்குச்சந்தையைப்பற்றி சிறிய தகவலை உங்களுக்கு தந்துக்கொண்டிருக்கிறேன். பங்குசந்தை சோதிடத்தை என்ன தான் நான் கற்றுக்கொடுத்தாலும் தீர்வு எடுப்பது என்பது உங்களிடம் மட்டுமே உள்ளது. பங்கு சந்தையில் பத்து நாட்கள் சம்பாதித்து ஒரு நாளில் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும் அதனால் தான் முடிவு எடுப்பது கடினம் என்று சொன்னேன். முடிவு எடுக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நாம் பங்குச்சந்தை சோதிடத்தில் எந்த மாதிரியான பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது என்ற கேள்வி நம் மனதில் எழும். இது மனிதனுக்கு பார்க்கும் சோதிடம் அல்ல இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு நொடி மாறினாலும் நஷ்டம் நமக்கு தலைமீறி போய்விடும். 

நான் திருக்கணிதத்தை வைத்து பங்குசந்தையை கணிக்கிறேன். இது எனக்கு கை கொடுக்கிறது. நான் முதலில் வாக்கிய பஞ்சாங்கத்தை  வைத்து கணித்து பார்த்தேன். அதில் எனக்கு சரியாக வரவில்லை பிறகு தான் திருக்கணிதத்தை வைத்து கணித்துக்கொண்டேன். எனக்கு சரியாக வருகிறது என்பதால் நான் திருக்கணித்தை பயன்படுத்துகிறேன். உங்களுக்கு எது சரியாக வருகிறதோ அதனையோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பங்குசந்தை சோதிடம் என்பது மிகதுல்லியமான கணக்கு அதனை நீங்கள் கணிக்கும்போது நல்ல மனநிலையி்ல் இருக்கும்போது மட்டுமே சாத்தியப்படும். மனதில் கஷ்டத்தை வைத்துக்கொண்டு இதில் ஈடுபட கூடாது. பொதுவாகவே சோதிடம் பார்க்கின்றவர்களுக்கு கஷ்டம் இருக்ககூடாது அப்பொழுது மட்டுமே சொல்லும் சோதிடமும் பலிக்கும்.

ப்ரசன்ன சோதிடத்தில் அமையும் சூழ்நிலை மிக அவசியம். நல்ல சூழ்நிலையில் நீங்கள் இருக்கும் போது நடைபெறும் சூழ்நிலையும் நீங்கள் கவனிக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

காயத்ரி சாதனை



வணக்கம் நண்பர்களே !
        காயத்ரி மந்திரத்தைப் பற்றி சொல்லிருந்தேன். அதனை பல நண்பர்கள் செய்துக்கொண்டு வருகிறார்கள். பல பேர் இனிமேல் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

காலத்தை வீணாக்காமல் உடனே ஆரம்பித்துவிடுங்கள். ஒரு நாள் போனாலும் திரும்பி அதனை பெறமுடியாது. நீங்கள் காயத்ரி மந்திரம் சொல்பவர்களாக இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அப்படி எதுவும் தெரியவில்லை என்றாலும் விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 

நம்பிக்கையுடன் செய்துக்கொண்டு வாருங்கள். ஆன்மீகத்தை பொருத்தவரை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை உங்களை உயர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையை கடந்துவிட்டீர்கள். இனிமேலாவது நம்பிக்கையுடன் இறங்கி வெற்றிக்கொள்ளுங்கள்.

காயத்ரி மந்திரத்தில் என்ன இருக்கபோகிறது என்று நினனக்கலாம். இது ஆன்மீகபாதைக்கு ஒரு வழிகாட்டுதல் இதனை செய்துக்கொண்டு வந்தால் அடுத்த பாதையை நீங்கள் அடையலாம். எந்த ஆன்மீகசெயலுக்கும் ஒரு குரு வேண்டும். இந்த காலகட்டங்களில் நீங்கள் ஆன்மீககுருவை தேடிப்போக முடியாது. அவ்வளவு எளிதாக கிடைக்க மாட்டார்.

உங்களுக்கு குரு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காயத்ரி சாதனையை நீங்கள் செய்யலாம். மிக எளிய வழியை நமக்கு நமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதனால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

பல நண்பர்கள் இதனைப்பார்த்து பயம் கொண்டுள்ளார்கள். இதனை செய்து ஏதாவது நடந்துவிடுமோ என்று எண்ணியுள்ளார்கள். கண்டிப்பாக நீங்கள் பயப்பட தேவையில்லை மிகவும் சாந்தமான பயிற்சி தான் இது. அதனால் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, March 21, 2013

கருப்பண்ண சாமி



வணக்கம் நண்பர்களே !
                      கடந்த வாரம் தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு சென்று வந்தேன். அங்கு இருக்கும் தெய்வ வழிபாடு அனைத்தும் உக்கிரவழிபாடாகவே இருக்கிறது. மக்களும் அப்படி தான் இருப்பார்கள் போல.

நான் பல தெய்வங்களை பார்த்தாலும் கருப்பண்ண சாமியை பல இடங்களில் பார்க்கமுடிந்தது. நமக்கும் கருப்பண்ண சாமியைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. இன்று தான் அந்த எண்ணத்தை கருப்பண்ண சாமி நிவர்த்தி செய்து வைத்திருக்கிறார். 

கருப்பண்ண சாமியைப்பற்றி நான் புத்தகங்களில் படித்தது கிடையாது. இது ஒரு எல்லையை காக்கும் தெய்வம் என்பது மட்டும் தெரியும். ஐயப்ப வழிபாட்டிலும் பிரச்சித்தப்பெற்றது என்பதை அறிவேன். இது அதிகமான சக்தி உடையது என்பது எனது அனுபவத்தி்ல் பார்த்திருக்கிறேன். அப்படிபட்ட கருப்பண்ண சாமியின் அருளாசியும் எனக்கு கிடைத்தது. நான் கொடுத்த வைத்தவன் என்று சந்தோஷப்பட்டு இருக்கிறேன். 

கருப்பண்ண சாமியிடம் நீங்கள் நியாமான கோரிக்கையை வைத்தால் கண்டிப்பாக அந்த கோரிக்கையை நிவர்த்தி செய்துக்கொடுப்பார். உங்களின் கோரிக்கை நியாயமாக இருந்தால் அது எப்பேர்பட்ட பிரச்சினை என்றாலும் அதனை நிவர்த்தி செய்துக்கொடுப்பார்.

கருப்பண்ண சாமி இருக்கும் கோவிலுக்கு சென்று அவருக்கு நைவேத்தியமாக பொங்கல் படைக்கவேண்டும். மாம்பழம் பலாபழம் இளநீர் வைக்கலாம். மிகச்சிறந்த நைவேத்தியமாக பாதம் பருப்பை வறுத்து படைப்பது நல்லது. பாயசம் வைத்தும் படைக்கலாம்

நீங்கள் நினைத்ததை கருப்பண்ண சாமி நடத்திக்கொடுத்தவுடன்   அவருக்கு  காணிக்கையாக குதிரை, ஈட்டி, அரிவாள் செய்துகொடுக்கலாம்.

கருப்பண்ண சாமிக்கு உகந்த நாள் அமாவாசை.

ஒரு அமாவாசைக்கு நீங்கள் சென்று காவல் தெய்வமான கருப்பண்ணசாமியை வணங்கிவாருங்கள் அனைத்து பிரச்சினையும் உங்களுக்கு தீரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.