Followers

Sunday, March 24, 2013

சிவமே : பகுதி 1



வணக்கம் நண்பர்களே!

இன்று பல ஆன்மீகவாதிகள் சிவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். சிவனின் ஆற்றல் வெளிப்பட்டுவிட்டது அவர் அந்த ஊருக்கு வந்துவிட்டார் இந்த ஊருக்கு வந்துவிட்டார் நீங்கள் அவரை வணங்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இன்று சிவவழிபாடு மிகப் பிரபலமாகிவி்ட்டது. இப்படி இருக்கும் நேரத்தில் என்னால் சிவனைப்பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதிய தொடரை ஆரம்பிக்கிறேன். இதனை எழுதுவதற்க்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டால் என்னை எழுதவைப்பவன் யாரோ அதனால் அவனை நம்பி இறங்கிவிட்டேன். தொடரின் முடிவில் தான் வெற்றி தெரியும் தெரியும்.

இருட்டு அறையில் கருத்த பூனையை தேடும் குருட்டு உலகம் இது. உங்களை குருடர்களாக மாற்றிவிட்டார்கள். உண்மையான சிவத்தை காட்டும் புதிய தொடர் இது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிகிரகத்தில் மட்டும் மனித இனம் பெருபான்மையாக இருக்கிறது. வேற்றுக்கிரகத்தில் மனிதன் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள் ஆனால் இன்றும் நிருப்பிக்கபடவில்லை. எனது தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லுவார் மண்ணை ஆண்டவன் மண்ணத்தில் கோடி இனி ஆள்பவன் எத்தனை கோடி என்பார். இதன் அர்த்தம் இந்த மண்ணை ஆண்டவன் எண்ணில்லாடங்க கோடி இனி ஆள்பவர்கள் எத்தனையோ கோடி .
உங்களுக்கு முன் இருந்தவன் எல்லாம் எங்கே போனான். அனைவரும் மண்ணாகி போனான். ஒருவன் இறந்தால் அவனை புதைக்கிறார்கள் அல்லது எரிக்கிறார்கள் எப்படியோ அவன் மண்ணோடு மண்ணாக போகிறான்.

உன் தாத்தா உன் தாத்தாவிற்க்கு தாத்தா அனைவரும் எங்கே போனார்கள். இந்த மண்ணில் புதைந்து போனார்கள். அவர்கள் மேல் நின்று என் வம்சம் அதை செய்தது இதை செய்தது என்று வீரம் பேசிக்கொண்டு இருக்கிறாய். இந்த உலகம் முழுவதும் பிணக்குழி தான் நிறைந்திருக்கிறது. இந்த பிணக்குழியில் இருந்து தான் நீங்கள் உண்ணும் உணவு உற்பத்தியாகிறது. உலகத்தில் உள்ள அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள் தான். என்ன உருமாறி வருகிறது. 

நீங்களே பார்த்திருக்கலாம் உங்கள் வீட்டில் ஆடு மாடுகள் செத்தால் என்ன செய்வீர்கள் அதனை ஒரு தென்னை மரத்தின் அடியில் புதைப்பீர்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் தென்னை மரத்திற்க்கு நல்ல உரம் அதனால் அவ்வாறு செய்கிறோம் என்று சொல்லுவீர்கள். அந்த தென்னை மரத்தில் இருந்து இளநீர் காய் பிடிங்கி குடிப்பீர்கள். என்றாவது ஒரு நாள் அந்த தென்னை மரத்தின் வேரிடம் நீங்கள் உனக்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது என்று கேடடது உண்டா? அதற்கு உணவு நீங்கள் புதைத்த மாமிசத்தில் இருந்து தான் கிடைத்தது என்று சொல்லும். இதைப்போல் தான் அனைத்தும் உங்களுக்கு முன் இறந்தவர்கள் தான் உங்களுக்கு உணவாக வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அது தான் உண்மை. 

இந்த உலகத்தில் மனிதன் மனிதனை தான் சாப்பிடுகிறான். இன்று நீங்கள் ஆத்திகமோ அல்லது நாத்திகமோ பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களை நாளை இந்த மண் தின்னபோகிறது. மண் தின்றதை உங்களின் வாரிசுகள் உங்களை தின்பார்கள். இது தான் சுழற்சி. 

இந்து மதத்தில் உணவை வணங்கி சாப்பிடவேண்டும் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. சாப்பிடுவதற்க்கு முன்னால் அந்த உணவை வணங்கி விட்டு சாப்பிடுவார்கள். இது எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதன் அர்த்தம் நமக்கு இன்று கடவுள் இந்த உணவைக்கொடுத்துள்ளாரே அவருக்கு நன்றி என்று சொல்லுவது. உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா உன் முன்னோர்களை நீ உணவாக உண்கிறாய் அவர்களின் உடல் இன்று மாறி நமக்கு உணவாக வருகிறது அவர்களுக்கு நன்றி இது தான் உண்மையான அர்த்தம்.

நான் பலபேர்களிடம் சொல்லும் வார்த்தை இந்த மண்ணை மிதித்து நடக்காதே மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லுவேன். இன்று நாம் அகங்காரத்துடன் அதன் மீது நின்று ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மண் நாளை உன்னை தின்னும். இது தான் விதி.

இந்த உலகம் மிகப்பெரிய சுடுகாடு. பல லட்சகோடி மக்களை காவு வாங்கிய இடம் இந்த பூமி. அனைவரும் இந்த பூமியில் புதைந்து போயிருக்கார்கள்.  இந்த சுடுகாட்டில் நின்றுக்கொண்டு தான் நீங்களும் நானும் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

சிவனின் இருப்பிடம் சுடுகாடு. இந்த உலகமே மிகப்பெரிய சுடுகாடு ஆக இருக்கும்போது அந்த சிவனை அவனிடம் நின்றுக்கொண்டே சிவனை தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் குருடர்கள் தானே?

சிவத்தை சுவாசிப்போம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

ATOMYOGI said...

//சிவத்தை சுவாசிப்போம்...//

சுவாசிக்க தயாராய் இருக்கிறோம்...

rajeshsubbu said...

வருக Mayavi வணக்கம் சேர்ந்து சுவாசிப்போம்.

தனி காட்டு ராஜா said...

///உங்களை நாளை இந்த மண் தின்னபோகிறது. மண் தின்றதை உங்களின் வாரிசுகள் உங்களை தின்பார்கள். இது தான் சுழற்சி.
////

உங்களையா (or) நம்மையா ??