Followers

Friday, March 1, 2013

பூர்வ புண்ணியம் 40



வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பேசும்போது சில நண்பர்கள் பதட்டத்துடன் பேசுகிறார்கள் அது எதற்க்கு என்று கேட்டால் பூர்வபுண்ணியத்தை படித்துவிட்டு அப்படி பேசுகிறார்கள். உங்களுக்கு பயம் ஏன் ? மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக முன்ஜென்மத்தில் பாவம் செய்திருப்பான். மனித பிறப்பு எடுத்து அந்த பாவத்தை கரைத்துக்கொள்ள ஆண்டவன் ஒரு நல்ல வாய்ப்பை நமக்கு தந்திருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் இதில் நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒரு விசயத்தை தெரிந்துக்கொண்டீர்கள் அல்லவா.

இதனை செயல்படுத்த கொஞ்சம் நாட்கள் ஆகும். ஒரு சிலர் இவ்வளவு நாட்களாக சம்பாதித்து வைத்துவிட்டேன் அதனை அனுபவிக்கலாம் என்று நினைத்திருந்தேன் எதைச்சையாக உங்கள் பிளாக்கை படித்துவிட்டேன் இதனை படித்த நாள் முதல் உடலில் ஏதோ நடக்கிறது எதனையோ தேடுகிறது மனதில் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். நான் உண்மையை எழுதுகிறேன் அதனை உங்கள் ஆத்மா ஏற்றுக்கொள்கிறது அதற்கு எங்கு விடிவு கிடைக்கும் என்று நினைக்கிறது அதன் தேடுதலுக்கு ஒரு சதவீதமாவது நமது பிளாக்கில் கிடைக்கிறது அதனால் உங்களுக்கு அவ்வாறு நடைபெறுகிறது என்று சொல்லிவருகிறேன்.

ஒரு பிளாக் இந்தளவுக்கு மாற்றத்தை தரும் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. அந்த மாற்றத்திற்க்கு காரணம் ஜாதக கதம்பத்தில் இருக்கும் அம்மன் தான் காரணம். அம்மன் செய்யும் லீலைகள் தான் அது. ஜாதக கதம்பத்தை படிக்கும் பல பேருக்கு ஆன்மீக வளர்ச்சி நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்ததற்க்கு அம்மன் தான் காரணம். நீங்கள் படிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த அம்மனை பாருங்கள் கண்டிப்பாக ஒரு ஆன்மீக நிகழ்வு உங்களுக்கு நடைபெறும். ஜாதககதம்பத்தில் வரும் கருத்துக்கள் எல்லாம் அம்மன் உங்களுக்காக தருகிறது.

அம்மன் உங்களுக்கு பலவிதத்திலும் உதவி செய்யபோகிறது. உங்களுக்கு எந்த கஷ்டமாக இருந்தாலும் ஜாதககதம்பத்தை திறந்து அதில் இருக்கும் அம்மனை பார்த்து நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு அது நடத்திக்கொடுக்கும். நான் எதனை செய்தாலும் பலமுறை ஆலோசித்து தான் செய்வேன் அவ்வளவு எளிதில் நம்பமாட்டேன். அம்மன் விசயத்தில் அப்படி இல்லை நான் சோதனை செய்யமுடியவில்லை. அதனைப்பற்றி ஒரு வார்த்தை என்னால் எதிர்த்து பேசமுடியாது.

ஜாதககதம்பத்தை படித்துவிட்டு பல பேருக்கு ஆன்மீக அனுபவம் நடைபெற்றதற்க்கு நான் காரணம் இல்லை அனைத்தும் இதில் இருக்கும் அம்மன் தான். என்னிடம் பல பேர் கேட்டார்கள் நீங்கள் மந்திரங்கள் பயன்படுத்துகிறீர்களா? நான் சொன்னேன் நீங்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. பின்பு எதற்க்காக நான் மந்திரங்கள் பயன்படுத்தபோகிறேன். அனைத்து செயலும் அம்மன் உங்களுக்கு செய்கிறது

பூர்வபுண்ணியத்தில் அடுத்து எந்த கிரகத்தை எடுக்கலாம் என்று நிறைய யோசித்துக்கொண்டுருந்தேன். பல நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கிரகத்தைப்பற்றி சொன்னார்கள் ஆனால் காலையில் அம்மன் என்னிடம் பூர்வபுண்ணியத்தில் ஒரு வித்தியாசமான அலசலை சொல்லியுள்ளது. அந்த அலசலை முதலில் தந்துவிடுகிறேன். அதன் பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்பை தருகிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

dreamwave said...

அது புதன்

rajeshsubbu said...

வருக வணக்கம் நீங்கள் சொல்லுவது ஒரு நாள் வரும். நாளை பார்க்கலாம்.