Followers

Sunday, March 3, 2013

பூர்வ புண்ணியம் 41



வணக்கம் நண்பர்களே!
                    நாம் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். இதன் நோக்கம் மறுபிறவி இல்லாமல் கடவுளிடம் சென்றடைய வேண்டும் என்பதற்க்கு என்ன வழி என்பதை பார்க்கிறோம்.

உலகில் உள்ள மனிதர்களில் முக்கால்வாசி பேர்களுக்கு முக்தி அடையவேண்டும் என்று விரும்பவில்லை. உலகவாழ்க்கையில் சிக்கி மனது இதுவே நன்றாக தான் இருக்கிறது எதற்கு முக்தி அடையவேண்டும் என்ற ஆசை. மனிதனுக்கு மரணம் என்பது மட்டும் இல்லை என்றால் கடவுளாவாது கத்தரிக்காயாவது என்று சொல்லஆரம்பித்துவிடுவார்கள். 

என்னை பொருத்தவரை மரணம் மட்டும் தான் கடவுள் என்று நினைக்கிறேன் யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்துவிடுகிறது.இதற்க்காகவே மக்கள் கடவுளை நாடி போகிறது தெரிகிறது அதுவும் சிவவழிபாடு இருக்கிறதே அது இப்பொழுது அதிக பிரபலமாகிவிட்டது. ஏன் என்றால் சிவன் அழிப்பவன் அல்லவா. சிவனை போய் வணங்கி என்னை இப்பொழுது எதுவும் செய்துவிடாதே இன்னும் கொஞ்ச காலம் நான் வாழ்க்கிறேன் என்று அவரை விடாமல் வணங்கிவருகிறார்கள்.

மனிதன் இந்த வாழ்க்கை அருமையாக இருக்கிறது என்று நினைப்பதால் நாம் இப்பொழுது அழியகூடாது என்று எண்ணி அழிக்கும் தொழில் செய்யும் கடவுள் சிவனிடம் அன்பு அதிகம் வைக்கிறார்கள். உண்மையி்ல் அவர் மேல் அன்பு வைப்பது கிடையாது பயத்தால் அன்பு வைப்பதுபோல் நடிக்கிறார்கள்.இவர் கொன்று தொலைத்துவிடவார் போலிருக்கு என்று அப்படி வணங்கிவருகிறார்கள்.

நீங்கள் முக்தி அடையாவிட்டாலும் பரவாயில்லை. உங்களின் கர்மாவின் வினையை குறைத்துக்கொண்டு உங்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்திக்கொண்டு அடுத்த ஜென்மத்திற்க்கும் ஒரு நல்ல பிறப்பை எதிர்நோக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு தான் இந்த பூர்வபுண்ணியதொடர். 

பூர்வபுண்ணியதொடர் நான் முதலில் எழுதும்போது பலபேர் நம்பவில்லை இப்பொழுது அவர் அவர்களின் ஜாதகத்தை பார்த்துக்கொண்டு நீங்கள் சொல்லுவது சரி தான் எனக்கு அப்படி தான் இருக்கிறது. என்று பலபேர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பல நண்பர்களுக்கு நானே போன் செய்து கேட்டேன் அப்பொழுது அவர்கள் சொல்லும் பதிலும் இதுவாகவே தான் இருக்கிறது.

உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் நன்றாக படித்துவிட்டு உங்களின் ஜாதகத்தை வைத்து அலசிபாருங்கள் ஏதாவது ஒரு சிறிய தகவலாவது உங்களின் ஜாதகத்தில் தெரியவரும். அதனை வைத்து படிப்படியாக கண்டுபிடித்துவிடலாம்.

இப்பொழுது பூர்வபுண்ணியத்தொடர் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அடுத்ததாக ஒருவருக்கு எப்படி மரணம் வரும். அடுத்த பிறவியில் எப்படி பிறப்பீர்கள் என்பதைப்பற்றி தொடர் எழுத உள்ளேன். கொஞ்ச நாட்கள் ஆகும் அதுவரை பொறுமையாக இருங்கள். பூர்வபுண்ணியத்தைப்பற்றியே நிறைய எழுதவேண்டியுள்ளது. இடையில் நிறுத்தப்பட்ட ஐந்தாவது வீட்டு தசா தொடர் விரைவில் தொடரும்.

நண்பர்களே நீங்கள் இதனை படிப்பதோடு இருந்து விடாமல உங்களின் நண்பர்களுக்கும் உங்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்களும் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: