Followers

Wednesday, March 27, 2013

பூர்வ புண்ணியம் 48




வணக்கம் நண்பர்களே !
                     பல நண்பர்களின் விருப்பம் என்ன என்றால் நிறைய எழுதுங்கள் என்கிறார்கள். கண்டிப்பாக நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு எழுதுவது தான் என்னுடைய விருப்பம் எழுதுகிறேன். நீங்கள் படிப்பதோடு இருந்துவிடாமல் ஆன்மீகபயிற்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கு சரியான புரிதலை தரும்.

உங்களின் மனது பல புத்தகங்கள் பல பிளாக்யை படித்தாலும் ஒரு ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்போது மட்டுமே உங்களின் அனைத்து தேடுதலுக்கும் விடை அளிக்கும். வெறும் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது. பயிற்சி மட்டுமே உங்களை நெறிப்படுத்தும். 

பூர்வ புண்ணியத்தொடரை படிப்பவர்கள் பல பேர் அவர்களின் முன்ஜென்மத்தில் தொடர்புடையவர்களை சந்தித்து உள்ளார்கள். அப்படி சந்தித்தவர்கள் அனைவரும் என்னிடம் தகவலை அனுப்பியுள்ளார்கள். அவர்கள் கேட்கும் கேள்வி எப்படி அவர்க்கு நாங்கள் உதவி செய்வது என்று கேட்டுள்ளார்கள்.

நீங்கள் அவர்களை கண்டுபிடித்ததே ஒரு மிகப்பெரிய விஷயம் தான் இந்த கலியுகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று என்னிடம் கேட்டவர்கள் பல பேர். இன்று அனைவருக்கும் இது சாத்தியப்பட்டிருக்கிறது எனும் போது இந்த செயல் அம்மனின் அருளை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

உண்மையில் சொல்லபோனால் நான் இதனை எழுதும் போது என்னை பார்த்து நேரிடையாகவே பல பேர் என்ன பைத்தியம்போல் எழுதிக்கொண்டிருக்கிறாய் இந்த காலத்தில் அவன் அவன் வேலையை பார்க்கிறத்திற்க்கே நேரம் இல்லை இதில் எங்கே போய் தேடுவது என்று என்னிடம் கேட்டார்கள் பல பேர் பின்னோட்டத்திலும் எழுதி அனுப்பினார்கள். 

அனைவரும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று அம்மன் மேல் உள்ள நம்பிக்கையில் நான் எழுதினேன் அதன் பலனை இன்று பலபேர் அனுபவிக்கிறார்கள். மனிதப்பிறவி எடுத்ததின் அர்த்தத்தை உணர்ந்துக்கொண்டுள்ளார்கள். 

உங்களின் முன்ஜென்மத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். அவரிடம் அன்பாக பழகுங்கள் அதுவே உங்களின் அனைத்து கர்மாவும் தொலையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: