Followers

Monday, March 4, 2013

ஆன்மீக அனுபவங்கள் 75



வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பேசும்போது நீங்கள் சோதிடர் தானே கிரகத்தைப்பற்றி சொல்லாமல் ஆன்மிகத்தை அதிகமாக சொல்லுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னை கேட்பார்கள். நான் முதலில் சோதிடத்தைப்பற்றி தான் நிறைய பேசிக்கொண்டிருந்தேன் என் குரு நாதரை சந்தித்த பிறகு ஆன்மீகத்தைப்பற்றி அதிகமாக பேச ஆரம்பித்துவிட்டேன்.

நாம் சோதிடத்தைப்பற்றி அனைத்து விதிகளையும் படித்து வைத்திருப்போம். இப்படி தான் நடக்கபோகிறது. இப்பொழுது நல்ல நேரம் வரப்போகிறது. இப்பொழுது கெட்ட நேரம் வரப்போகிறது என்று அதற்கு தகுந்தார்போல் நாம் முன் ஏற்பாட்டுடன் இருந்துக்கொண்டு இருப்போம் பார்த்தீர்கள் என்றால் நல்ல நேரத்தில் கெட்டது நடக்கும் கெட்ட நேரத்தில் நல்லது நடக்கும். நாம் தலையை பிய்த்துக்கொண்டு எப்படி இது நடந்து என்று சிந்தனை செய்வோம். நாம் எப்படி கணித்து சோதிடத்தை வைத்திருந்தாலும் ஒரு நொடியில் நம்மை ஏமாற்றிவிடும். இப்படி நான் சொல்லுவதற்க்கு வெட்கபட வேண்டும் ஆனால் என்ன செய்வது நடப்பதை உண்மையுடன் உங்களிடம் சொல்லவேண்டும் அல்லவா அதனால் சொன்னேன்.

நான் குருவிடம் சோதிடத்தைப்பற்றி பேசும்போது ஜாதககட்டத்தை காட்டி இந்த ஜாதகருக்கு இப்படி நடக்கபோகிறது சாமி என்று அவரிடம் சொல்லுவேன் அவர் சொல்லுவார் நீ இப்படி சொல்லுகிறாய் அல்லவா நான் சொல்லுகிறேன் அவருக்கு வேறு மாதிரி நடக்கும் என்பார். அவர் சொன்னது போல் நடந்துவிடும். நான் எப்படி சாமி நீங்கள் சொல்லுவது போல் நடக்கிறது என்பேன். அதற்கு அவர் நீ சொன்னது போல் நடந்திருக்கவேண்டும் ஆனால் நான் அதனை மாற்றி அமைத்தேன் என்பார். அப்பொழுது தான் கிரகத்தை மீறி ஒரு சிலரால் செயல்படமுடிகிறது என்பதை தெரிந்துக்கொண்டேன். 

அவர் அதற்காக வழியையும் எனக்கு சொல்லிக்கொடுத்தார். ஆனால் அதிலும் ஒரு சில சிக்கல்கள் உள்ளன. அப்படி வரும்போது நாம் கிரகப்படி தான் நடக்கவேண்டும் என்று சொன்னார். இப்படி பல பேர்களை நான் சந்தித்து இருக்கிறேன். நீங்களும் இப்படி முயற்சி செய்து பாருங்கள். 

நாம் ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்ய அந்த சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு மட்டும் பரிகாரம் செய்யவோம் ஆனால் ஒரு சிலர் வேறு கிரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட கிரகத்தை சாந்தப்படுத்திவிடுவார்கள் இப்படியும் வழி இருக்கிறது. நீங்கள் ஜாதகத்தை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது பல வழிகளிலும் ஆராய்ந்து பார்த்தால் நல்ல வழி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு சில பணக்காரர்கள் எப்பொழுதும் அவர்களுக்கு பணவர வேண்டும் என்று அதற்கு என்று பல ஆன்மீகவாதிகள தங்கள் வசம் வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்துக்கொண்டே இருப்பார்கள். நாம் தான் பல அறிவு தரும் விசயங்கள் இருக்கிறது அதனை எல்லாம் விட்டு விட்டு இதனை போய் செய்வது முட்டாள் தனம் என்று பேசி நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டுருப்போம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: