Followers

Monday, March 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 77



வணக்கம் நண்பர்களே !
                      காயத்ரி மந்திரத்தைப்பற்றி சொல்லி இருந்தேன் அல்லவா. காயத்ரி மந்திரத்தை பல நண்பர்கள் எடுத்து செய்துக்கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு வெற்றி பெறுவதற்க்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

காயத்ரி மந்திரத்தால் என்ன பயனை நாம் அடையபோகிறோம் என்று ஒரு சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். நமக்கு குரு அமையவதற்க்கு பல தடங்கல் ஏற்படுகின்றன. இந்த காலத்தில் ஒரு குரு கிடைத்தாலும் அவர் நமக்கு அனைத்தும் கற்றுதருவாரா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது. 

அனைவரும் ஆன்மீக வளர்ச்சி பெறவேண்டும் என்று நான் எண்ணியப்போது மந்திர தீட்சை கொடுப்பதற்க்கு அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். உங்களை அப்படியே விட்டுவிட்டு செல்லகூடாது. உங்களுக்கும் ஒரு ஆன்மீகமுயற்சியை ஜாதக கதம்பம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் காயத்ரி மந்திரத்தை தந்தேன். 

உங்களின் விருப்பம்போல் இஷ்டதெய்வத்தை எடுத்து செய்யவேண்டும் என்பதால் நான் எந்த மந்திரத்தையும் நான் கொடுக்கவில்லை. உங்களின் விருப்பம் எதுவோ அதனை நீங்கள் எடுத்து செய்யலாம்.

மக்களுக்கு நிர்பந்தம் கொடுக்ககூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் மட்டும் அசைவம் சாப்பிடவேண்டாம் என்று மட்டும் சொல்லியுள்ளேன். நீங்கள் சாப்பிடுவேன் என்று சொன்னால் சாப்பிட்டுவிட்டு செய்யுங்கள். எந்த வித கட்டுபாடும் நான் கொடுக்கவில்லை. நீங்கள் மனதிற்க்குள் யாரையும் குருவாக ஏற்றுக்கொண்டு இதனை செய்யலாம். 

நீங்கள் யோகா தியானம் செய்தால் மனது உடனே கட்டுபடாது அதனால் முதலில் இந்த காயத்ரி மந்திரத்தை செய்து வர உங்களின் மனம் பக்குவப்படும்.  அதன் பிறகு ஒவ்வொரு சாதனையாக நீங்கள் செய்துக்கொள்ளலாம்.

தன்னுடைய ஆத்மாவை பற்றி எளிதில் அறிந்துக்கொள்ளலாம். காயத்ரி மந்திரம் மூலம் தன்னுடைய வாழ்க்கையும் பிறருடைய வாழ்க்கையும் அழகுப்படுத்திக்கொள்ளமுடியும். ஒரு மனிதனுக்கு உயிர்சக்தி என்பது பிராணா சக்தி தான் அந்த பிராணா சக்தியை பலப்படுத்திக்கொள்ள காயத்ரி மந்திரம் உங்களுக்கு உதவுகிறது.

நீங்கள் தியானம் செய்கிறேன் என்று உட்கார்ந்தால் உங்களின் மனம் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும். உங்களால் அந்த தியானத்தில் நிலைப்பெற்று இருக்கமுடியாது. உங்களின் மனம் உங்களின் விருப்பத்திற்க்கு வரவேண்டும் என்று நினைத்தால் முதல் சாதனையாக நீங்கள் செய்யவேண்டியது காயத்ரி மந்திரம் தான் என்பதை உணருங்கள்.

மனக்காரகன் சந்திரன். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவர்களால் மனதை வெல்வது கடினம். அந்த மாதிரி உள்ளவர்கள் முதலில் செய்யவேண்டியது காயத்ரி மந்திரம். இது ஒரு நல்ல பரிகாரமாக கூட இருக்கும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: