Followers

Tuesday, March 12, 2013

ராகு கேது இன்றைய நிலை



வணக்கம் நண்பர்களே!
                    ராகு கேதுக்கள் ஏழாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டில் ஒரு ஜாதகருக்கு அமரும்போது அது தோஷத்தை தரும். மணவாழ்வில் பிரச்சினை ஏற்படும் என்று பலவித கருத்துக்கள் இருந்தாலும். இது அந்தளவுக்கு இந்தியாவில் வேலை செய்யாது என்பது ஒரு கருத்து இருந்தது ஆனால் இது இந்தியாவில் இப்பொழுது நல்ல வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

ராகு கேது ஏழாம் மற்றும் எட்டாம் வீட்டில் அமரும்போது சோதிட விதி என்ன சொல்லும் என்றால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கும் ஒரு சிலர் அதனால் பிரிவார்கள் என்று எல்லாம் சொல்லுவோம் நடைமுறையில் இவ்வாறு இருந்த ஜாதகர்கள் நல்ல முறையில் வாழ்ந்திருக்கிறார்கள். இது எப்படி என்றால் இந்திய கலாச்சாரம் அவர்களை காப்பாற்றிக்கொண்டு இருந்தது. 

கணவன் மனைவிக்குள் எப்படிபட்ட சண்டை வந்தாலும் அதனை தீர்த்துவைக்க அனைத்து சொந்தங்களும் ஊரும் இருந்தது. இன்று இந்திய கலாச்சாரம் அழிந்துக்கொண்டு வருகிறது. கணவன் மனைவிக்குள் ஏகாப்பட்ட சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. விவாகாரத்தை நோக்கி பல பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நமது கலாச்சாரம் இந்த இரண்டு கிரகங்களின் தாக்கத்தை குறைத்துக்கொண்டு வந்தது. ஆனால் இன்றைய நவீன கலாச்சாரத்தால் இரண்டு கிரகங்களி்ன் தாக்கம் அதிகமாக தாக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு பேர்களின் மனதிலும் விஷத்தை கக்க ஆரம்பித்துவிட்டது விளைவு விவாகாரத்து.

இரண்டு பேர்களும் எடுத்துச்சொல்ல ஆட்கள் இல்லை. அவர்களுக்கு இது தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லை. சிறு நிகழ்வுக்கும் கருத்துமோதல் ஆரம்பித்துவிடுகிறது.

இனிமேல் நீங்கள் பார்க்கும் ஜாதகத்தில் ராகு கேதுக்களின் நிலை என்ன என்பதையும் நன்றாக பார்த்து தெரிந்துக்கொண்டு பலனை சொல்லுங்கள். திருமண பொருத்தத்தை பாருங்கள்.காலங்கள் மாறும்போது நாமும் மாறிக்கொண்டு பலனை சொல்லவேண்டும் அப்பொழுது மட்டுமே நம்மால் சரியான தீர்வு வழங்கமுடியும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

dreamwave said...

RAHU IN RISHABA LAGAN WHAT WILL DO?

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே தனிபதிவாக எழுதுவோம்.

KJ said...

Wat sir... Sila per than "vaguparai" endru solli kelvi kettal thani pathivu undu(thani thavil nu senthil solvathu pol) endru yematrukirargal. Neengalavathu pathivileye vidai koduthal nandraga irukum.