Followers

Monday, March 18, 2013

நல்ல சக்தி



வணக்கம் நண்பர்களே !
                     ஒரு வீட்டில் தீயசக்திகள் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி போய்விடும். பல கோடி போட்டு வீடு கட்டினாலும் அந்த வீட்டில் நல்ல சக்திகள் இருக்கும்போது மட்டுமே வீட்டில் நிம்மதி கிடைக்கும்.

நான் ஒரு சில குடிசை வீட்டிற்க்கு செல்லுவேன். தரையில் சாணம் போட்டு வைத்திருக்கும் வீட்டில் இருக்கும் நிம்மதி மார்ப்பில்ஸ் போட்டு இருக்கும் வீட்டில் இருப்பது இல்லை. இது எதனால் ஏற்படுகிறது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

நாம் வீடு கட்டினால் புதுமனை போகும்போதும் மட்டுமே ஒரு கணபதி ஹோமம் செய்துவிட்டு வீடு குடிபோகுவோம். பிறகு அந்த வீட்டைப்பற்றி எந்த ஒரு விசயத்திலும் நாம் கவனம் செலுத்துவது கிடையாது. வருடத்திற்க்கு ஒரு முறையாவது அந்த வீட்டில் அக்னி வளர்க்க வேண்டும். உங்களால் முடிந்தளவுக்கு கையில் இருக்கும் பணத்தை வைத்து அக்னி வளர்க்க வேண்டும்.

நாம் ஒரு ஹோமத்தை செய்தால் அதன் மூலம் எதுவும் வரவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அந்த வீட்டில் இருக்கும் துர்சக்திகளாவது வீட்டை விட்டு வெளியில் செல்லும். எங்கள் வீட்டில் பணம் வருகிறது பிறகு எதற்கு இது எல்லாம் தேவையில்லாத விசயம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு பணம் வரும் ஆனால் தூக்கம் வருகிறதா என்று பாருங்கள். நிம்மதியாக தூங்கமுடிகிறது என்றால் நீங்கள் ஹோமம் செய்யவேண்டியதில்லை உங்களுக்கு நிம்மதி இல்லை என்றால் கண்டிப்பாக இதனை செய்யவேண்டும்.

நீங்கள் தூங்கும்போது கோரமான கனவுகள் வரக்கூடாது. அப்படி கனவுகள் வந்தால் உங்களின் வீட்டில் துர்சக்திகள் இருக்கின்றன என அர்த்தம்.இப்படி வந்தால் உடனடியாக யாராவது நல்ல சோதிடர்களை அணுகி அதற்கு தீர்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சொந்த வியாபாரம் செய்தாலும் நீங்கள் செய்கின்ற வியாபார இடத்தில் நீங்கள் கண்டிப்பாக வருடத்திற்க்கு இருமுறை நீங்கள் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களின் வியாபாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் அப்படி இல்லை என்றால் வியாபாரம் சரிவை நோக்கி தான் செல்லும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: