Followers

Tuesday, March 19, 2013

மேஷம்: ஐந்தில் செவ்வாய்+சனி


வணக்கம் நண்பர்களே!
                     மேஷ ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். செவ்வாய் கிரகத்திற்க்கு நட்பு வீடு சனி கிரகத்திற்க்கு பகை வீடு. 

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

இவரின் குழந்தைகள்,சகோதர்கள் மற்றும் வேலையாட்கள் போன்றவர்களை இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள். இரு கிரகம் அமரும்போது பாவம் அதிகமாக தான் இருக்கும் பாதிக்கப்பட்ட நபர்களுகம் அதிகமாக தான் இருப்பார்கள்.

எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள்?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

கை தோள்பட்டை கால்கள் போன்றவற்றில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்திருப்பீர்கள் அந்த வெட்டுக்காயம் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் வேதனைப்பட்டு இறந்திருப்பார்கள்.

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

மர்மஸ்தானத்தில் தாக்கப்பட்டு இருக்கலாம். மர்மஸ்தானத்தில் இரத்த காயம் ஏற்படுத்திருப்பீர்கள்.இதுவே அவர்களுக்கு மரணத்தை கொடுத்திருக்கும். 

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் வெட்டுகாயம் ஏற்படுத்தியிருப்பீர்கள் இவர்களை சிவன் கோவில்களில் வைத்து தாக்கப்பட்டுருக்கலாம்.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர் இப்பொழுது எங்கு இருக்கிறார்?

சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்க்கில் இருப்பார். 

சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையில் இப்பொழுது வசிப்பார்.

சிம்ம ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு திசையில் இப்பொழுது வசித்து வருவார்.  

மேலும் விளக்கம்

சிம்மத்தில் செவ்வாய் சனி அமரும்போது நீங்கள் முன்ஜென்மத்தில் அதிகமான பாவங்களை செய்திருப்பீர்கள். அந்த பாவத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் அதனையே செய்துக்கொண்டு இருக்கலாம். நீங்கள் முதலில் நமக்கு ஜாதகத்தில் இப்படி அமைந்திருக்கிறது அதனால் தான் இப்படி நாம் வக்கிரதிட்டம் போடுகிறோம் என்பதை உணருங்கள்.

பொதுவாக செவ்வாய் மற்றும் சனி இணையும்போது வக்கிரபுத்தி அதிகமாகிவிடும். செய்யும் அனைத்து செயலும் வக்கிரதனமாக இருக்கும். முதலில் உங்களின் புத்தியை சரிசெய்துக்கொண்டு பிறகு உங்களின் முன்ஜென்ம வாழ்க்கையோடு தொடர்புடையவர்களை தேடுங்கள். 

உங்களுக்கு கடவுள் இப்படி விதித்துவிட்டார் அதனால் மனம் தளராமல்  உங்களின் ஆத்மாவின் உணர்வோடு வாழ என்ன வழி என்பதை நீங்கள் சிந்தித்தாலே நீங்கள் கர்மாவின் வினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பரிகாரம்

பொதுவாக ஐந்தில் ஒரு கிரகம் அமர்ந்தாலே பிரச்சினை தான் இதில் இரண்டு கிரகம் அமர்ந்தால் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் இரண்டு கில்லாடிகள் அமர்ந்தால் எப்படி இருக்கும். நீங்கள் முதலில் உங்களின் வக்கிரபுத்தியை வெல்லுவதற்க்கு காயத்ரி மந்திரத்தை தினமும் செய்துக்கொண்டு வாருங்கள். பிறகு சம்பந்தப்பட்டவரை தேடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: