Followers

Tuesday, March 26, 2013

சிம்மம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே !
                    சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது தனுசு அதன் அதிபதி குரு.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

சகோதரர்கள்,கோவிலில் வேலை செய்பவர்கள். மதகுருமார்கள் வயது முதியோர்கள்

அடையாளம்?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆள்களோடு நிறம் சிகப்பு நிறமாக இருந்திருப்பார். அந்நிய மொழி பேசி இருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருப்பார்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் நல்ல கலராக இருப்பார். இவர் மலையாள மொழி பேசிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பாக இருப்பார். அவர் தாய்மொழி மற்றும் சமஸ்கிருத மொழி பேசி இருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கை தோள்களில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

மர்மஸதானத்தில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கப்பட்டு இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

தனுசு ராசி உத்திராடம் 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

குருவின் வீட்டில் செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் சேர்ந்து அமரும்போது முன்ஜென்ம பாதிப்பு அதிகம் ஏற்படுத்தும். ஐந்தாவது வீட்டிற்க்கு காரகன் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான் அவர் வீட்டில் இரு கெடுதல் கிரகம் அமரும்போது முன்ஜென்மத்தில் கடுமையான பாவம் செய்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். 

முன்ஜென்மத்தில் கெடுதல் அதிகம் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்துவிட்டது அதனால் நொந்து உட்கார்ந்துவிடாமல் அடுத்த வழி என்ன என்று யோசிக்க வேண்டும். எப்படி பூர்வபுண்ணியத்தை சரிசெய்வது என்று சிந்தனை செய்யும்போது கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவார்.

பரிகாரம்

செவ்வாய் மற்றும் சனி தோறும் சிவன் கோவில் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். சம்பந்தப்பட்ட நபர் உங்களை தேடிவருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: