Followers

Friday, March 22, 2013

காயத்ரி சாதனை



வணக்கம் நண்பர்களே !
        காயத்ரி மந்திரத்தைப் பற்றி சொல்லிருந்தேன். அதனை பல நண்பர்கள் செய்துக்கொண்டு வருகிறார்கள். பல பேர் இனிமேல் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

காலத்தை வீணாக்காமல் உடனே ஆரம்பித்துவிடுங்கள். ஒரு நாள் போனாலும் திரும்பி அதனை பெறமுடியாது. நீங்கள் காயத்ரி மந்திரம் சொல்பவர்களாக இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அப்படி எதுவும் தெரியவில்லை என்றாலும் விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 

நம்பிக்கையுடன் செய்துக்கொண்டு வாருங்கள். ஆன்மீகத்தை பொருத்தவரை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை உங்களை உயர்த்தும். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையை கடந்துவிட்டீர்கள். இனிமேலாவது நம்பிக்கையுடன் இறங்கி வெற்றிக்கொள்ளுங்கள்.

காயத்ரி மந்திரத்தில் என்ன இருக்கபோகிறது என்று நினனக்கலாம். இது ஆன்மீகபாதைக்கு ஒரு வழிகாட்டுதல் இதனை செய்துக்கொண்டு வந்தால் அடுத்த பாதையை நீங்கள் அடையலாம். எந்த ஆன்மீகசெயலுக்கும் ஒரு குரு வேண்டும். இந்த காலகட்டங்களில் நீங்கள் ஆன்மீககுருவை தேடிப்போக முடியாது. அவ்வளவு எளிதாக கிடைக்க மாட்டார்.

உங்களுக்கு குரு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காயத்ரி சாதனையை நீங்கள் செய்யலாம். மிக எளிய வழியை நமக்கு நமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதனால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

பல நண்பர்கள் இதனைப்பார்த்து பயம் கொண்டுள்ளார்கள். இதனை செய்து ஏதாவது நடந்துவிடுமோ என்று எண்ணியுள்ளார்கள். கண்டிப்பாக நீங்கள் பயப்பட தேவையில்லை மிகவும் சாந்தமான பயிற்சி தான் இது. அதனால் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: