Followers

Tuesday, March 26, 2013

சொல்ல நினைக்கிறேன்



வணக்கம் நண்பர்களே !
                     நமது கட்டண சேவையில் ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்கள் சொல்லுவது என்ன என்றால் பிறரிடம் நாங்கள் ஜாதகப்பொருத்தம் பார்க்கும்போது ஜாதகம் பொருத்தம் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் நீங்கள் ஜாதகம் சரியில்லை என்று சொல்லுகிறீர்களே என்று சொன்னார்கள். 

அதிகப்பட்சமாக ஜாதகர்கள் பொருத்தம் பார்ப்பது நட்சத்திரப்பொருத்தம் மட்டுமே. நட்சத்திரப்பொருத்தத்திற்க்கு ஜாதக தேவையில்லை. நட்சத்திரப்பொருத்தம் அவர்கள் வாழ போகிற வாழ்க்கையை சொல்லாது. இருவரின் ஜாதகத்தையும் நன்றாக பார்த்துவிட்டு தான் ஜாதகப்பொருத்தம் பார்க்கிறேன். அதனால் பிறர் சொல்லுகிறார் ஜாதகம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கவேண்டாம். அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தான் ஜாதகப்பொருத்தம் பார்க்கிறேன். 

பல நண்பர்கள் என்னிடம் பேசும்போது நீங்கள் நிறைய எழுதுங்கள் என்று சொல்லுகிறார்கள் என்னால் எழுதமுடிந்ததை எழுதுகிறேன். நான் சொல்ல நினைப்பதை அனைத்தையும் எழுதவேண்டும் என்றால் ஒரு நாள் ஐம்பது பதிவாவது போடவேண்டும் அது முடியாத காரியம். முடிந்தளவுக்கு எழுதுகிறேன். நீங்கள் இவ்வாறு கேட்பது உங்களின் அறிவு வளர்ச்சி மட்டும் தான் அடையுமே தவிர உங்களின் ஆன்மா வளர்ச்சி அடையாது. நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தால் மட்டுமே ஆன்மா வளர்ச்சி அடையும். படிப்பது அனைத்தும் மனதில் குப்பை கொட்டும் செயல். 

பல நண்பர்கள் என்னிடம் நன்றாக பழகிவிட்டு பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி கேட்கிறார்கள். அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி வகுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டால் அதனைப்பற்றி பதிவில் அறிவிப்பு வெளியிடுகிறேன் அது வரை அதனைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் எதனை செய்தாலும் நமது அம்மனை கேட்டபிறகு தான் அந்த செயலில் இறங்குவது வழக்கம். 

பல சோதிடர்கள் பங்குசந்தை சோதிடத்தைப்பற்றி வகுப்பு எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அவர்களின் வகுப்பிற்க்கு சென்று கற்றுக்கொள்ளுங்கள். அம்மன் அதற்க்கான நேரத்தை இன்றுவரை தரவில்லை. 

உங்களால் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன் நீங்களே கண்டுபிடித்து கற்றுக்கொள்ளுங்கள்.உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள்.எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

ஆன்மீகப்பயிற்சிகள் ஜாதககதம்பம் வழியாக நடந்துக்கொண்டு இருக்கிறது விருப்பம் இருப்பவர்கள் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். கட்டணம் எல்லாம் கிடையாது. இலவச சேவை தான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: