Followers

Wednesday, March 6, 2013

ஐந்தில் செவ்வாய் + சனி



வணக்கம் நண்பர்களே!

இரண்டு நாட்களாக பதிவு போடவில்லை எனக்கு வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தீடிர் என்று வருகிறது அதனால் உங்களுக்கு தெரிவிக்கமுடியவில்லை. இரண்டு நாட்கள் வெளியூர் பயணம். எப்படியும் வெளியூரில் இருந்து ஒரு பதிவு போடலாம் என்று பார்த்தாலும் நெட்வசதி அந்தளவுக்கு இல்லை.

நாம் அடுத்து பார்க்க இருப்பது பூர்வபுண்ணியத்தில் செவ்வாய் + சனி இருந்தால் எப்படிபட்ட பாவத்தை முன்ஜென்மத்தில் செய்திருப்பார்கள் என்பதை பார்க்கலாம். என்ன இது ஒரு கிரகம் மட்டும் அமர்நதால் என்ன பலன் என்பதை எழுதிமுடிக்கவில்லை அதற்க்குள் இருகிரகத்தின் பலனை நீங்கள் சொல்லுகிறீர்களே என்று நினைக்கலாம். நமது அம்மனின் விருப்பம் இது. இடையில ஒவ்வொரு கிரகத்தின் பலனும் வரும் அதனைப்படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

பூர்வபுண்ணியத்தை பொருத்தவரை செவ்வாய் சனி சேர்ந்து அமரும்போது பல பிரச்சினைகளை செய்யும். நடைமுறை வாழ்க்கையிலேயே அது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் பலபேர்களின் ஜாதகத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் வித்தியாசமான சிந்தனையை பெற்று இருப்பார்கள். அவர்கள் செயல்படுவது கூட வில்லங்கதனமாக இருக்கும்.

செவ்வாயும் சனியும் சேர்ந்து இருந்தால் மட்டும் கிடையாது. செவ்வாயின் வீட்டில் சனி இருந்தாலும் சனியின் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் இதே பலனை தரும். நாம் சனியின் வீட்டை வைத்து பூர்வ புண்ணியத்தை பார்க்கும் போது விரிவாக பார்க்கவில்லை இந்த தொடர் அந்த குறையை போக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

செவ்வாயும் சனியும் எந்ததளவுக்கு பகை கிரகம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் சேர்ந்து பூர்வபுண்ணியத்தில் அமர்ந்தால் அவர்கள் முன்ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு புரியவைக்கவேண்டியதில்லை.

நான் எழுதும் தொடர்களை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு இப்படிபட்ட கிரக நிலைகள் இல்லை அதனால் நாம் படிக்க வேண்டியதில்லை என்று விட்டுவிடாதீர்கள். அனைத்தையும் படியுங்கள் ஏன் என்றால் இப்படிபட்ட கிரகநிலைகள் இருப்பவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கலாம் அல்லவா அதனால் கூறுகிறேன்.

என்னுடைய அனுபவம் செவ்வாயின் வீட்டில் சனி அமர்ந்த நபரை நான் சந்தித்து அவரை திருத்தலாம் என்று பல வழிகளிலும் முயற்சி செய்தேன் அந்த நபர் நீ என்னடா எனக்கு சொல்லுவது நான் இப்படி தான் இருப்பேன் என்று என்னை படாதபாடு படுத்திவிட்டு சென்றுவிட்டார். 

என் அனுபவம் உங்களுக்கு பயன்படும். உங்களுக்கு இப்படிபட்ட கிரகநிலைகள் இருந்தால் தயவு செய்து நீங்கள் என்னை கோபபடாதீர்கள் ஏன் என்றால் உங்களின் செயல்பாட்டை இறைவன் விதி என்று கிரகத்தின் மூலம் எழுதிவிட்டான் அதனை திருத்த நான் முயற்சி செய்கிறேன். அந்த முயற்சியில் நீங்களும் உங்களை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

நாளை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Sir, saniswaranin magara veedu sevvaiku uccha veedu thane. Athuvum keduthal thana?

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே சில நன்மைகள் சில தீமைகளை அனைத்து கிரகமும் எங்கு அமர்ந்தாலும் செய்யும். நமது நோக்கம் இப்பொழுது தீமைகளை மட்டும் பட்டியல் போட்டுக்கொண்டு வருகிறோம். நன்மைகளையும் எழுதுவோம்.