Followers

Friday, March 29, 2013

காயத்ரி மந்திர உபாசனை



வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திரத்தை செய்துக்கொண்டு வருபவர்கள் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று நீங்கள் வருத்தம் அடையவேண்டாம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மந்திரமும் உங்களின் கர்மவினையை குறைப்பதற்க்காக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை மனதில் வையுங்கள்.

நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு தெய்வம் என்றும் கைவிடாது. நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும்போது ஒரு துளி அளவுக்கூட நம்பிக்கை இல்லாமல் மந்திரத்தினை உரு ஏற்றக்கூடாது. இது தான் கடவுள் நமக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு என்று எண்ணி நீங்கள் உரு ஏற்றும்போது அந்த கடவுள் மனமிரங்கி உங்களின் பிரத்தனையை கேட்பார். இத்தனை நாள்கள் நிராசையில் வாழ்க்கை பயணத்தை கடந்தீர்கள் இனிமேல் நம்பிக்கையு்டன் வாழ்க்கை பயணத்தை கடக்க நம்பிக்கையுடன் மந்திரஉரு ஏற்றுங்கள்.

நீங்கள் செய்யும்போது இந்த விசயம் சாதாரணமாக தெரியும் ஆனால் போக போக எப்படிபட்ட பொக்கிஷத்தை நான் எடுத்துள்ளேன் என்று அப்பொழுது நீங்கள் உணரமுடியும். அனைத்தும் பலம் தரும்போது மட்டுமே சாத்தியப்படும். கண்டிப்பாக சாத்தியப்படும்.

காயத்ரி மந்திரத்தை 21 நாட்கள் தொடர்ந்து செய்து முடித்தவுடன் என்னை தொடர்புக்கொண்டு சில கருத்துக்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில நல்ல பயிற்சியை நான் தருகிறேன். அந்த பயிற்சியின் மூலம் உங்களின் ஆன்மீக வாழ்வை மேம்படுத்திக்கொள்ளமுடியும். 

நீங்கள் புதிதாக காயத்ரி மந்திரம் செய்ய தொடங்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தால் வளர்பிறையில் தொடங்குங்கள். வளர்பிறை வரும் வரை பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல காரியங்கள் வளர்பிறையில் தான் தொடங்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: